உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு. முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.