திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியில் கூறியதாவது..

ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை.
அதிமுகவில் இல்லாவிட்டாலும் அண்ணாவின் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,”தேர்தல் நெருங்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது என்று இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த தேரதலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வைத்திலிங்கம் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் வைத்திலிங்கம் என்பது குறிப்பிடதக்கது.