தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு  தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]

இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]

பட்ஜெட் எப்படி இருக்கணும்னு- நிர்மலா சீதாராமன் இங்க வந்து பார்க்க வேண்டும்”- செல்வப்பெருந்தகை

ஒரு நிதி நிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் […]

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]

ரூ.10 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்ட நடிகர் விஷால் மனு தள்ளுபடி

லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் […]

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா IAS பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் பொறுப்பேற்றார். சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் கடந்த 9-ஆம் தேதி காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்தது. ஆனால், அதற்கான நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் […]

வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]

வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் […]

டில்லி- சென்னை நோக்கி வந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து

டில்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் சிந்தி ரயில் நிலையல் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 11 மணியளவில் வர்தா என்ற இடத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து – துல்ஜாபூர் இடையே ரயில் நிறுத்தப்பட்டு, தீப்பற்றிய பெட்டி நீக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெல்லி – சென்னை ஜி.டி. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் […]

இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய லெஜெண்ட் கடிதம்

பாக்., EX PM இம்ரான் கான் கண் பார்வை பாதிப்பால் சிறையில் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கவும், மனிதாபிமான முறையில் சிறையில் நடத்தவும் பாக்., அரசுக்கு 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தியாவின் கபில்தேவ், கவாஸ்கர், கிரேக் சேப்பல் (AUS), கிளைவ் லாயிட்(WI) உள்பட 14 கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் […]

மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு… சுப்ரீம் கோர்ட் கவலை

டில்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. ‘அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மெர்சி என்ற ஒரு வழக்கே கிடையாது, ஆனால் ஏ.ஐ. பயன்படுத்தி அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில […]

இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் […]

FC புதுப்பிக்க 10 மடங்கு உயர்வு… 25ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்து வரும் 25-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் இன்று (17-2-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் திரு தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு […]

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன். இருவரும் பேசி் சுமூக தீர்வு காண்பார்கள். காங்கிரசில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் […]

கோவையுடன் போட்டிபோடும் கரூர்- தயாநிதி மாறன் எம்பி பெருமிதம்

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழில் முனைவோர், சமூக சேகவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி கூட்டரங்களில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]

பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர்

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக […]

மு.க.அழகிரியின் ஆதரவாளர் அதிமுகவில் ஐக்கியம்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் சற்று முன் அவர் அதிமுகவில் இணைந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை […]

முத்தரையருக்கு 10% இடபங்கீடு… தமிழர் தேசம் கோரிக்கை

தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் , மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், இளைஞர் அணி துரை குணசேகரன், மாநில செயலாளர்கள் கராத்தே செந்தில், […]

பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது இப்போ கிடைத்திருக்கு.. ரவிமோகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். சமீபகாலமாக சர்ச்சையிலும், விமர்சனங்களிலும் சிக்கி தவித்த ரவி மோகன் தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். ஒருபக்கம் நெருக்கடி இருந்தாலும் திரைத்துறையில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் ரவி மோகன் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிசியாகவும் வலம் வருகிறார். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழும் ரவி மோகன், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு […]

டாஸ்மாக் கடையை மூட கோரி- ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் […]

பெண்களுக்கு ரூ.5000.. வரவேற்கிறேன்.. ஓபிஎஸ் பாராட்டு

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, “தி.மு.க. அரசு, பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளது. இதனை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்து கூறினால், தாய்மார்கள் கோபப் படுவார்கள்” என்றார். அப்போது. “தை மாதம் முடிந்து, மாசி மாதம் பிறந்து விட்டது.உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு எப்போது வரும்?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பொறுமையாக இருங்கள். தை மாதத்தை விடமாட்டேன் என்கிறீர் […]

ரூ.178 கோடியில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்-வேளாண் பட்ஜெட்டில் தகவல்

*5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. *800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை […]

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அரசு ஊழியர்களுக்கு TAPS –

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பதாகவும், தமிழ்நாடு எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 16வது நிதிக்குழு அறிக்கை தமிழ்நாட்டுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நிதியமைச்சர் வருத்தம் தெரிவித்தார். நிதிப்பங்கீட்டில் 0.4% என்ற மிகக் குறைந்த உயர்வு […]

பாத்ரூம் விளம்பரம்தான் எனக்கு சோறு போட்டது- நடிகர் அப்பாஸ்

காதல் தேசம், விஐபி, படையப்பா உள்பட பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். திடீரென சினிமாவிலிருந்து விலகி நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆனார். இப்போது பல வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கூறியது- ஒரு பாத்ரூம் விளம்பரத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேண்டுமா? ஆண்கள் சுத்தம் செய்யக்கூடாதா? என் நான் கேட்டேன். சில பேர் ஏன்னிடம் நேரடியாகவே, உங்களுக்கு […]

திருவண்ணாமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

134 படங்களின் பாடலை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை

1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது.இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி துஷார் […]

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103ம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக இன்று நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து […]

சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளில் […]

கலைஞரின் கனவு திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்..! அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-2027 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப் பேரவை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் […]

விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பேசியது, *மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி […]

சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று (பிப். 16) காலை அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் பிப். 18 ஆம் […]

2வது நாளாக குறைந்த தங்கம் விலை

நாடுகளுக்கிடையேயான போர் பதட்டங்கள் போன்ற உலகளவிலான பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உயர்வை கண்டது. குறிப்பாக, ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்ததை போன்றே ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது.அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்துக்கொண்டே போனது. இதனிடையே, மத்திய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித […]

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது.. *தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. *இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு […]

ரூ.213 கோடியில் மதுரை மேம்பாலம்: “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் அறிவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வரும் 21ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.இந்நிலையில், மதுரையில் 21ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,நீண்ட பாலங்களை அமைத்துச் […]

சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுருளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை மற்றும் தாயை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது.   புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

என்எம்பி மினிபியா -ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு- ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக்கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் […]

ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு

ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு ரூ.20.88 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். பள்ளி வாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்

 தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

விஜயை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆர்பி உதயகுமார்

யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘தன்னை பார்க்க வருபவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த நிலையிலும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். மக்கள் மீது யார் அக்கறை செலுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும்’ எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாலமுருகன் உள்ளே வீசி உள்ளார். அப்போது வழக்கறிஞர் அமரும் இடத்தில் […]

டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது…குடிமகன்கள் ஷாக்

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நாளை 17ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை […]

சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..

கண்டனம் தெரிவித்த திரிஷா… வருத்தம் தெரிவித்தார் நயினார்..

தன்னை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தநிலையில் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வருத்தம் தெரிவித்தார். அவர் பேட்டியில் கூறியதாவது.. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. திரிஷா பற்றி பேசியதற்காக வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் […]

முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது- லால்குடியில் உதயநிதி பேச்சு

திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்றுதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:- திருச்சி மாவட்டத்திற்கும், விசேஷமாக லால்குடி தொகுதிக்கும் வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், இன்றைய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரை தந்த ஊர் லால்குடி.இன்னைக்கு நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் அவர்களோட தொகுதி இது. இந்த தொகுதி மக்கள் மேல அவர்கள் எவ்வளவு […]

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. […]

தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இன்று கருப்பு உடை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கன்வீனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகலெட்சுமி, வித்யா, ஜெயசீலி,தீபா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ் தொடக்க […]

மார்ச் -2 முதல் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… அமைச்சர் மகேஸ்

தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் […]

நாளை தமிழக பட்ஜெட் 2026… மெகா அறிவிப்புகள்

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது. 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்த […]

துணை முதல்வர் உதயநிதி புதுகை வருகை-உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலைபுதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை சிப்காட் அருகில் வரவேற்றனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, திமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், பொன்துரை,தலைமை க்கழகபேச்சாளர் மதியழகன், மற்றும்மு.க.ராமகிருஷ்ணன்,மாலாராஜேந்திரதுரை, கே.எஸ்.சந்திரன், அசோக் பாண்டியன்,கோமாபுரம்சந்திரசேகரன், எம்.எம்.பாலு, வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]

பாபநாசம் அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு ..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியில் தாய்மார்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு வருகை புரிந்தனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி, கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் நாட்கள் ஒவ்வொரு நாளும் குழந்தையினுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான பலமான […]

கரூரில் 4 கோடி மதிப்பில் 17 புதிய பணிகளை VSB துவங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்றத் தொகுதி, தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டேட் […]

அரசு கல்லூரியில் 15.75 கோடியில் புதிய கட்டிட பணி.. VSB துவக்கி வைத்தார்

கரூர் அரசு கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கல்லூரி மாணவ மாணவியருடன் இணைந்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், […]

2 மாதத்தில் ரூ. 9000- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய தொகை வழங்கலை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். “மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயன்றவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, முதலமைச்சர் ஒரே நேரத்தில் ரூ.5,000-ஐ மகளிரிடம் சேர்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “போன மாதம் மகளிர் […]

செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார்.

MNராஜம்,டைரக்டர் SPமுத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை இன்று வழங்கினார். கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் கலைஞர் […]

அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளை சம்பவம் […]

திமுக தேர்தல் அறிக்கையில் 6 அம்சங்களை சேர்க்க துரை வைகோ மனு

வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ எம்பி கனிமொழியிடம் வழங்கினார். எம்பி துரைவைகோ கூறியதாவது… இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களை சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினேன். […]

NDA-வில் தேமுதிக இணையுமா? 1ம் தேதி பார்க்கலாம்-நயினார் பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை எதுவும் இல்லை. பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் NDA பொதுக்கூட்டத்திற்கு பந்தல் கால் நடப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசுகையில், “யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தனது விமர்சனத்தை மென்மையாக்க முயன்றார். […]

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரோஷினி, தனது திருமணம் குறித்து எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிராமல் ரகசியம் காத்தார். இருப்பினும், இந்தச் செய்தி அவர் நடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல் குழுவினர் மூலம் வெளியாகிவிட்டது. குறிப்பாக அந்த தொடரில் வில்லி வெண்பாவாக நடித்த ஃபரினா […]

அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது‌. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு அம்மன் வெள்ளிக்கரகத்துடன் சத்திரம்கிராமத்தைவளம் வரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அக்கினிச்சட்டி ஏந்தி கிராமத்தை வலம்வந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்வும்நடைபெற்றது. சிவன்ராத்திரிதிருவிழாவை […]

மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலைகளில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிவா (30) என்பவருக்கும், அவரது மனைவி மீனா (25) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இன்று காலை மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சிவா, […]

மனோகரன் தவெகவில் ஐக்கியம்.. அதிமுகவில் மேலும் அதிர்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மனோகரனை கட்சியில் இணைத்து வரவேற்றுள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான மனோகரன், விஜயை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார். விஜய் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார். மனோகரன் அதிமுகவில் நீண்டகாலமாக பணியாற்றியவர். வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இவரது […]

திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைநகர் கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு […]

தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள தேவனாகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, சிவதாண்டவம் புரவன்குறவஞ்சி, பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் […]

பிப்ரவரி 19,20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-02-2026 முதல் 18-02-2026 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]

தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,15,520க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 வெளியீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து முன்பு 6.41 கோடி என்றளவில் இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடி என்றளவில் குறைந்தது.இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 […]

தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு: நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியது. இந்தத் திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கடந்த 90 நாட்களாக எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் முதற்கட்டமாக நாளை (பிப்ரவரி 16, திங்கட்கிழமை) முதல் திருச்சி, […]

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ‘தென்கயிலாயம்’ மற்றும் ‘ஆன்மீக உலகம்’ என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த மலைக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளையும் கடந்து ஏறிச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள சுயம்பு லிங்கத்தை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் […]

ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், […]

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்:துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நரியம்பாளையம் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான புதிய பேருந்து நிலையத்தைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.2026) திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையத்திற்குப் பதிலாக, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 6.50 ஏக்கர் பரப்பளவில் இந்த ‘A’ வகுப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த துணை முதலமைச்சர், […]

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் சலீம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விஜய் ஒரு பொருட்டே இல்லை” – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5,000 (மூன்று மாத உரிமைத் தொகை  கோடை சிறப்புத் தொகை) வரவு வைக்கப்பட்ட பிறகு, மக்களின் ஆதரவு திமுகவுக்கு மிக அதிக அளவில் உள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “ரூ.5,000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது […]

நயினார் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகம்- ராமதாஸ்

தமிழக பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், “என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் […]

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும்- தேர்தல் ஆணையம்

நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/ 2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது, 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS -ல், “முரண்பாடுகள்” (Logical Discrepancies) […]

வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்… வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் […]

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு

தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத ஃபாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, கல்வியிலும் தொழில்துறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் திமுக அரசையும் அதை முத்தமிழறிஞர் கலைஞரின் முத்திரையோடு இயக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் […]

இலங்கையில் ஏழ்மையில் வாழும் தமிழர்களுக்கு இலவச காப்பகத்திற்கு திட்டம்..குருஜி ஷிவாத்மா

கோவை,பிப்.15 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.பிப்.14ம் தேதி ஆண்டு விழாநிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள்,நன்கொடையாளர்கள்,பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குருஜி […]

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம்

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார். ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட […]

விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்… அமைச்சர் மா.சு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும், ரூ.1.20 கோடி செலவில் […]

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்”- காங்.,தீர்மானம் நிறைவேற்றம்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் முடிவு செய்வார்கள்… கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? – மாணிக்கம் தாகூர் கருத்து – people will decide coalition government or oneparty government manickam … எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு […]

இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (14.02.2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் […]

“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் […]

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் (பின்னர் 2024-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்). இது தொடர்பான […]

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரையில் அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக 17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை […]

பாத்ரூமில் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்துவருகிறார். இவருடன் பணியாற்றிவரும் செவிலியர்கள் 11 பேர், எஸ்ஆர்பி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி 46 வயது பெண், செவிலியர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஒருவர் வந்து, ‘’அடிக்கடி உங்களது வீட்டு பாத்ரூம் அருகே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதுபோல் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த […]

தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 202324 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் […]

மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்

ஆர்.சி.பி அணி மீண்டும் தனது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கு கர்நாடக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் துரதிர்ஷ்டவசமான சில உயிரிழப்புகள் காரணமாக இந்த மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைதானம் திறக்கப்படுவது ஆர்.சி.பி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள […]

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. பயணிகள் […]

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் ஒன்றை ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஜூலை 5ஆம் தேதியும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]

ரூ.31 லட்சம் வரதட்சணை- வாங்க மறுத்த இளைஞர்

ராஜஸ்தானின் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், வரதட்சணையை வாங்க மறுத்து கவனம் ஈர்த்துள்ளார். அவரின் திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணையாக ₹31 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதை மறுத்த இளைஞரும் அவரின் தந்தையும், உங்கள் பெண்ணை கொடுத்ததே பெரிய பரிசு தான் எனக்கூறி அடையாளத்துக்காக ₹1 ரூபாய், ஒரு தேங்காய் மட்டும் பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞரை பாராட்டலாமே?

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு…

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்குமாநில பொருளாளர் முஸ்தபா மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் […]

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]

கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், […]

திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி சிறப்பாக வரவேற்பு அளித்த திருப்பத்தூர் பொதுமக்கள் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. […]

சொந்த மாவட்டத்தில் களம் இறங்கும் சீமான்?..

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதக கட்சியின் மாநாட்டுக்கு சீமானின் தாயார் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் […]

சேலம் தவெக கூட்டத்தில் வாலிபர் பலி… சந்தேக மரணம் என வழக்கு

சேலம் :  மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர் சூரஜ் (37) என்பவர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் தங்கியிருந்தவர். கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு […]

புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்- காரைக்காலில் அமித்ஷா பேச்சு

காரைக்காலில் ஒன்றிய அமைச்சர் அமிதஷா பேசியதாவது…  புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா; திருநள்ளாறு சனீஸ்வரர், பத்ரகாளியம்மனுக்கு தலைவணங்குகிறேன்; புதுச்சேரி புண்ணிய பூமி. உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். புதுச்சேரியில் ஊழலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. டெல்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து […]

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. […]

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி […]

1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு

பாலக்காடு, அட்டப்பாடியில் 1,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் சிவராத்திரியையொட்டி பாலக்காடு மாவட்ட கலால் துறை உதவி ஆணையாளர்கள் ரோபர்ட், பி.கே.சதீஷ் ஆகியோர் உத்தரவுப்படி அகழி ரேஞ்சு கலால் துறை அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அட்டப்பாடி வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறை மேல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அட்டப்பாடி […]

ஜோலார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல சார்பில் BLA2,BDA,BLC உள்ளிட்ட வாக்குச்சாவடிகுழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவனம் விரைவு ரயிலில் புறப்பட்டு மக்களோடு மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது […]

கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் […]

7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – ஆர்பிஐ அதிரடி

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன்படி; காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும் கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிரட்டலோ […]

இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.

கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், […]

எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் உருவாகிறது..

வடிவேலு பிசியாக நடித்து வந்த காலத்தில், ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற பெயரில் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததோடு சரி. அதற்கு பிறகு அப்படம் உருவாகவில்லை. தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகும் என்று, கடந்த 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்றும், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தனுஷை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அருண் மாதேஸ்வரன் […]

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் மமிதா பைஜூ…

மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, ‘சூர்யா 46’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமலு’ என்ற படத்தின் இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை […]

ATM-மில் நிரப்ப ரூ.60 லட்சத்துடன் வந்த டிரைவர் ஓட்டம்-வழக்குப்பதிவு

ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அவர், வழக்கம்போல தனது அலுவலக குழுவினருடன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தார். சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை நிரப்பினர். மாலை 4.30 மணிக்கு கோபனபள்ளி பகுதிக்கு வந்தனர். பாதுகாவலர்கள் கொஞ்சம் பணத்துடன் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை நிரப்பச் […]

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள்- நினைவு கூர்ந்த பிரதமர்

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். என் கணவர் சோர்வடையவே மாட்டார் – இந்த 1 தந்திரத்திற்கு நன்றிஅதிகமாக கற்கவும் இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் […]

விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு

கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம். இதன் மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது.

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்

கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட் ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் […]

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் புதிய வீடு கட்டி வருகிறார் அதற்காக அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, நேற்று தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 320 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். அதேபோல் […]

முதல் மனைவி இறந்து விட்டால்.. 2வது மனைவிக்கு ஓய்வுதியம் இல்லை-ஐகோர்ட் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்துகொண்டார். 2009-ம் ஆண்டு இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கொடுத்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘மனுதாரரின் முதல் […]

திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் நடைபெறுகிறது. • வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது • 47 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுகவின் […]

தங்கம் விலை சரவனுக்கு ரூ.1280 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.

நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா பிரிந்து சென்ற நிலையில், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார். சக்திபிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மன்னார்குடியில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக […]

கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய தொகுப்பு வீட்டினை இடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி வந்தவதாசி வட்டம், வழுர் கிராமத்தைச் சேர்ந்த மேற்படி முனியன் என்பவரின் […]

தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழக தேர்தல் பணிக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை, தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என பணிகளை […]

ஜூலை 4, 5ல் TET தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும்   தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

சொல்லாததையும் செய்பவர் முதல்வர்” – அமைச்சர் ரகுபதி

எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்துதான் 5000 ரூபாயை முதலமைச்சர் முன்கூட்டியே வழங்கியுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ரகுபதி இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில், “பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக வழங்கி, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார். “2,000 […]

இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் ரூ.16 லட்சம் ஆசை காட்டி ரூ.8.45 லட்சம் மோசடி

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராமுக்குகடந்த டிசம்பர் மாதம் ஒரு அறக்கட்டளை பெயரில் குறுந்தகவல் வந்தது. அந்த பெண் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், நான் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருகிறேன் என்றும், உங்களுக்கு ரூ.16 லட்சம் கொடுத்து உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் இந்த பணத்தை பெற வேண்டும் என்றால் […]

டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்: டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும் IIA […]

எகிப்திலிருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கதான்- செல்லூர்

மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எகிப்திலிருந்து கொண்டு வந்தோம். வடஇந்தியாவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். தேர்தலுக்காக அமைப்பது தான் கூட்டணி. தற்போது திமுக கூட்டணி கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று உள்ளார்கள். தேர்தலில் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் […]

காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]

செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு

சேலம் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் மயக்கமடைந்தவர்கள் விவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்கம் முற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட தவெகவினரால் பரபரப்பு […]

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்…

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (38). கூலிதொழிலாளியான இவரது மனைவி அகிலா (28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அகிலாவின் நடத்தையின் மீது அன்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்பரசன் குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அகிலா தூங்கிக் கொண்டிருக்கும்போது கிரைண்டர் குளவி கல்லை எடுத்து அகிலாவின் தலையில் […]

நடிகர் தனுஷூக்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ்

நடிகர் தனுஷுக்கு  பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில்  வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு நான் ருத்ரன் என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு  முன்பணம், பிற செலவினங்களுக்காக,  20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை […]

மீண்டும் முதல்வர் ஆவார் மு.க.ஸ்டாலின்- வைகோ திட்டவட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டார் மோடி. இந்த குற்றச்சாட்டை மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழகத்தில் நுழைவதை வீழ்த்துவதற்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த சமூக நீதியை நிலைநாட்டவும்தான் கடந்த 8 ஆண்டிற்கு […]

KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி, புத்தாக்க மையம்-ஒப்பந்தம்

ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவாக அடைந்திடவும், பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு […]

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக்கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே […]

விஜய் பரப்புரைக்கு பாஸ் வாங்கி சென்ற நபர் பலி

விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சுராஜ் பாஸ் வைத்திருந்தார். கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த சுராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியிலேயே சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சுராஜியின் உடல்.

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால்- நீட் திணிப்பு

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் தாக்கு. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் மொழிப்போர் போராட்டத்தின் போது தனது இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை, தமிழ்நாடு […]

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் மதன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி… இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தின்(3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (362 புள்ளி) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.மற்ற இந்திய வீரர்களான நீரஜ் குமார் (361.8) வெள்ளிப்பதக்கமும், அகில் ஷியோரன் (343.5) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்திய அணி 1,769 புள்ளிகள் குவித்து தங்கப்ப தக்கத்தை வென்றது. […]

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தி குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தினார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றைக் கொண்ட வளாகத்திற்கு பிரதமர் […]

கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை

நாளை மறுநாள் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் […]

விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர். வெயிலின் காரணமாக மயங்கி சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் 10 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகளிருக்கு ரூ.5000 வரவு..மனம் குளிர செய்யும் அறிவிப்பு…திருமா., பாராட்டு

மகளிருக்கு ரூ.5000 வரவு, எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இது மகளிரை மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பாகும்’ என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 […]

அமித்ஷா வருகை- காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் […]

தாறுமாறாக ஓடி பெட்டிக் கடைக்குள் புகுந்த மினி பஸ்..கோவையில் பரபரப்பு

கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை கணுவாய் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் இல்லாத நேரத்தில், அந்தப் பேருந்தின் நடத்துனருக்குத் திடீரென பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து உள்ளது. […]

வழக்கம்போல் பிஜேபியை பத்தி சேலத்திலும் பேசாத விஜய்

தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வர 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு தினங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும், மாநகர காவல்துறையினரும், திடலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு […]

வரலாறு தெரியாமல் எடப்பாடி பேசுகிறார்…. செல்வபெருந்தகை பதிலடி

சென்னை : தமிழக அரசியலில் இருமொழிக் கொள்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறிய அவர், இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.செல்வப்பெருந்தகை தனது பேட்டியில், “இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் […]

பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் […]

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]

எஸ்ஐ மகனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்.. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி திருவப்பூர் குட்ஷெட் ரோடு பகுதியில் வசிக்கும் அமரர் மெய்யப்பன் சப் இன்ஸ்பெக்டர் மகன் மேனா. மோகன் இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். மோகன் இன்று காலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர். அப்போது […]

திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்ததால் 9 பேரை குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத […]

மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும். வீட்டின் […]

தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் […]

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய அரசு சார்ந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் […]

தமிழக அரசின் 5000 அறிவிப்பு.. கரூரில் திமுக கொண்டாட்டம்

மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கரூரில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்… திமுக அரசின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், இன்று ரூ 5 ஆயிரம் அரசு வங்கி கணக்கில் செலுத்தியது… இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள கிராமப்புற மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள […]

புதிய ஆய்வுகள் நடத்துவது காலத்தின் கட்டாயம்- எம்பி கனிமொழி

எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய […]

தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் எல்.என்.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் அவர் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு கடந்த 6- ந்தேதி இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு […]

பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி- குவியும் பாராட்டுக்கள்

இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை […]

மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக […]

கோவை-ஆட்டோ பொருட்களை கொள்ளையடிக்கும் 4 பேர் கொண்ட கும்பல்

கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது. ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலின் செயல் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது. கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலை, புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் […]

திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!

கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]

மகளிருக்கு போனஸ்.. காலையிலேயே 5000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி முடக்க பாஜக முயன்றது. அதை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து 5000 ரூபாயை இன்று காலையிலேயே 1.31 கோடி பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. • அசாமிலும் தமிழ்நாட்டைப்போல பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. அங்கு விரைவில் நடக்கும் முக்கியப் பண்டிகையை முன்வைத்து ஒரு சிறப்புத் தொகுப்பாக பாஜக அரசு […]

தங்கம்- வௌ்ளி விலை அதிரடி குறைவு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று, சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து கிராமுக்கு ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.

விவசாய தோட்டத்தில் புகுந்த 3 காட்டு யானைகள்: சைரன் ஒலி எழுப்பி விரட்டியடிப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் புகுந்த 3 காட்டு யானைகளை சைரன் ஒலி எழுப்பி வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் இரவு நேரத்தில் யானைகளை விரட்டும் குழு அமைக்கப்பட்டு யானை வரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]

கரூரில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி .மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மேற்கு மண்டல பொறுப்பாளர்கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி MLA அறிவுத்தின்படிமாநகர செயலாளர் கனகராஜ்மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் மணிராஜ் முன்னிலை.மாபெரும் […]

சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது

சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, […]

மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு

நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்துவிட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறுபோட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம் வாங்கத்தான் ஆளில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில்…முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், 5,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், […]

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி.செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு…ஒத்துவராது… நெல்லையில் வைகோ

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, “திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் ஸ்டாலின் தொடர்வார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என […]

ஊழல் புகார்.. GST ஆணையர் சஸ்பெண்ட்

 சென்னையில் ஊழல் புகாருக்கு ஆளான ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலுக்கு எதிராக ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணிக்கவேல் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் – நயினார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, […]

திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்

திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை […]

நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் சனிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவா் நயினாா் […]

தென்கிழக்கு வங்கக்கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், பிப்.14லும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்

திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை […]

புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்அ.ரெத்தினம் (தொ.மு.ச. ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராஜ் (எஸ்.கே.எம்) ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மறியல் போராட்டத்தில் ஏ.ஸ்ரீதர் ,முகமதலிசின்னா, (சி.ஐ.டி.யூ,) ப.ஜீவானந்தம் (ஏ.ஐ.டி.யூ.சி), கந்தசாமி (தொ.மு.ச.,) உள்ளிட்ட […]

எங்கள் சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் -உறுதி

சென்னை : தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல்; திராவிட மாடல் என்றால் ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல்; திராவிட மாடல் என்றால் மக்கள் நன்மைக்காக இருக்கக்கூடிய மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்துச்சொல்லக்கூடிய மாநாடுதான் இந்த ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு’. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, […]

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் […]

ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (12/02/2025) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். அவருடன் தன்னார்வலர் சரவணன் உடனிருந்தார். மஹாசிவராத்திரி நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி […]

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்: ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கருத்துக் கணிப்புகளின் […]

தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..

தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும் கட்டணத்தை மார்ச் 12ம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

79 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எவ.வேலு

திருப்பத்தூரில் 79 கோடி மதிப்பீட்டில் 8கி.மி அளவில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை 79 கோடி மதிப்பீட்டில் சுமார் 8.150 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணியை துவக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் […]

மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் ‍, நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]

பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு

பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான். வரையாடு. சிறுத்தை’ செந்நாய். யானை. காட்டு மாடு. கரடி .போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது இவற்றை காண்பதற்காகவும் வால்பாறை செல்வதற்காகவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாகச் சென்று வருகின்றனர் எந்த நிலையில் […]

ரவிமோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு- கெனிஷா உருக்கம்

பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கெனிஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-சின்ன வயதில் இருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு. நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு […]

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு […]

கரூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மற்றும் ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிப்பட்டி கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ–மாணவிகளுக்கு நான்காவது முறையாக சுமார் 23 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு […]

சேலத்தில் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டம்- நுழைவு சீட்டு இருப்பவர்களுக்கு அனுமதி

சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி […]

அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு- கண்ணீருடன் ஐஸ்வர்யா அர்ஜூன் பேச்சு

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். “சேவகன்”, “ஜெய் ஹிந்த்”, “தாயின் மணிக்கொடி”, “வேதம்”, “ஏழுமலை”, “சொல்லிவிடவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் […]

2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு

 பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 […]

கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]

முஸ்லிம் தம்பதியின் வளர்ப்பு மகனுக்கு இந்து முறைப்படி திருமணம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள பஸ்தாவாடா கிரா மத்தை சேர்ந்தவர் மெகபூப். இவரது மனைவி நூர்ஜன். இந்த தம்பதி யின் பக்கத்து வீட்டில் தங்களது பெற்றோருடன் சோமசேகர் பூஜர், வசந்த் பூஜர் வசித்து வந்தனர்.20 ஆண்டுகளுக்கு மன்பு சோமசேகர்-வசந்த் ஆகியோரின் பெற்றோர் திடீரென உயிரிழந்தனர். அப்போது சோமசேகருக்கு 4 வயது, வசந்துக்கு 2 வயது ஆகும். ஆனால் அவர்களை குடும்பத்தினர் யாரும் வளர்க்க முன்வரவில்லை. இதனால் மெகபூப்-நூர்ஜன் தம்பதி மனிதநேயத்துடன் சோமசேகரையும், வசந்தையும் […]

மீண்டும் ரீரிலீஸ் ஆகும் மாதவன் வெற்றி படம்

சிடிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி மனோகர் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன் ஜோடியாக ரீமாசென் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இதில் தாமரை எழுதி பாம்பே ஜெய பாடிய ‘வசீகரா…’ என்ற பாடல் இன்றளவும் ரசிர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீசாகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். ‘அலைபாயுதே’ வெற்றிக்கு பிறகு மாதவன் […]

மகா சிவராத்திரி- 3 நாட்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12.02.2026 (வியாழக்கிழமை), 13.02.2026 (வெள்ளிக்கிழமை), 14.02.2026 (சனிக்கிழமை) மற்றும் 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]

கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு

கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. குறிப்பாக கன்னியம்பலம் பகுதியில் 12 கடைகள் உள்ளன. இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன், கன்னியம்பலத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கடைகளை அகற்றி பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த […]

ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். “எந்தவித பிளவும் இல்லை. […]

பால் குடித்து கொண்டிருக்கும்போது மூச்சுத்திணறி 9 மாத குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சுனில்- சீதா தம்பதியினர் கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திஷா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை இருந்தது. தாய் சீதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர் குழந்தையை கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த […]

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வௌியீடு… டிஎன்பிஎஸ்சி

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ‘டப்பா என்ஜின்’; திமுக ‘சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின்’ – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெற்றியை ஈட்டிவரும் ஈட்டி முனைகளே என்று வாக்குச்சாவடி முகவர்களை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் உரையில்: வாக்குச்சாவடி […]

UNICEF – OECD இடையே தமிழ்நாடு அரசு முத்தரப்பு ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு, யூனிசெஃப் (UNICEF) புதுமை அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றுக்கிடையே செயலாற்றும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தந்த்தின் மூலம் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் புதுமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஆளுகைக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 05ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின், மற்றும் மாநிலத் திட்டக் குழுவின் அலுவல் சார் […]

கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி..விவசாயிகள் கவலை

தென்காசி, ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஜனவரியில் 40 கிலோ மூட்டை ரூ.3000 வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது ரூ.300 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அந்த மகிழ்ச்சியான நாட்களை மறக்க முடியாது’-அனிருத்

தமிழ் படவுலகின் முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத், இசைக்கச்சேரிகள் நடத்தி மேடையில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி பல இயக்குனர்கள் அழைத்தபோது மறுத்து விட்டார். ஆனால், இசை ஆல்பங்களில் மட்டும் ஆடிப்பாடி நடிக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘எனது சிறுவயதில் திருமண நிகழ்ச்சிகளில் இசைக்கருவி வாசிக்க செல்லும்போது, எனக்கு சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பார்கள். அப்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். சில நேரங்களில் சம்பளம் […]

கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவிலுக்கு 11 அடி நீள அரிவாளை காணிக்கையாக செலுத்திய அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது […]

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் […]

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர் […]

மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மும்பை மாநகராட்சியின் துணை மேயராக சஞ்சய் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காந்தியும் […]

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு […]

அறந்தாங்கி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி பகுதியில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராத விதமாகச் சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. முருகன் (45) – இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெயர் தெரியாத மூதாட்டி – இவரும் பேருந்து மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். முதற்கட்ட தகவல்களின்படி, சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் பலியானவர்களின் […]

திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]

ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்

கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர். அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டுநர் கண்ணியமாகச் சொல்ல, ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், “வாய மூடிட்டு போடா… கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா […]

மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்

சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர். விருத்தாசலத்தை சொந்த ஊராககொண்ட இவர்கள், கடந்த 10 வருடங்களாக சென்னையில் வசித்தனர். இந்தநிலையில், ரெக்சி பியூலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று […]

அரசியலும்- சினிமாவும் வேண்டாம்-விஜய் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளார்.. பி.டி.செல்வகுமார்

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனை போல ஊழல் செய்த போலி அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதர்காக அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார் விஜய் என நாகர்கோவிலில் பி.டி செல்வகுமார் பேட்டியளித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது

கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட கணவர்.. தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் (40) இவரது மனைவி வினோதினி (34) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் […]

அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள் திருட்டு- திருச்சி க்ரைம்

அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள், திருட்டு.. திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய கட்டிட பொருட்கள் சோதனை ஆய்வகம் உள்ளது இந்த ஆய்வகத்தில் கட்டிட பொருட்களை வைத்திருப்பது வழக்கம்..சம்பவத்தன்று அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மர்ம ஆ சாமி ஒருவன் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள இரும்பு ராடு மற்றும் ஏசி வயர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டார். இது தொடர்பாக […]

தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் நடைபெற உள்ளது, இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொ ண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார், இதையடுத்து இன்று திருமலை சமுத்திரத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, […]

உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வை ஆவணப்படமாக படமாக்கி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இரு நடிகர்களும் முடிவு […]

கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” -மாணிக்கம் தாகூர்!

சென்னை முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? […]

காரைக்கால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா- பந்தல்கால் நடும் விழா

உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி‌ காலை 08.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. […]

அறிமுக நாயகன் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு- பிப்.13ல் ”பூக்கி” ரிலீஸ்

விஜய் ஆண்டனி தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், ‘பூக்கி’ அவருக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தின் மூலம் தனது அக்கா மகனான அஜய் தீஷனை (Ajay Dhishan) தமிழ் சினிமாவிற்குப் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அஜய் தீஷன் ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றாலும், ஒரு நாயகனாக அவருக்கு இதுதான் முதல் முறை. படத்தின் பாடல்களைத் தானே இசையமைத்ததுடன், படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செதுக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான […]

சென்னையில் சீமான் கைது

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை […]

நிலத்தகராறு..ஓய்வு எஸ்ஐ, 2 மனைவிகள் மீது தாக்குதல்.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவிகள் சித்ரா(50), குணவதி(52). பன்னீர்செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் எதிரே 11 சென்ட் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்று அதே பகுதியை சேர்ந்த ரவியும் அவரது மகன் அருள்பிரசாத்தும்(32), பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பன்னீர்செல்வம் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் சில மாதங்களுக்கு முன் கற்களை […]

ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

தேமுதிக நிர்வாகியின் மிரட்டல் பேச்சு- பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம்

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிர்வாகி மாரி, “கோவம், […]

29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்

கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப். 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு ‘ருத்ராட்ச தீட்சை’ வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நியமனமான 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து 80-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!

மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு […]

விசில் சின்னத்தால்- தூய்மைப் பணியாளரின் விசிலை பறித்த கவுன்சிலர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவெகவினரின் இந்த செயலை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான், சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, தமிழகம் […]

ஆட்சியில் பங்கு ஒத்து வராது- காங்கிரஸ்-க்கும் தெரியும்-முதல்வர் ஸ்டாலின்

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் தேர் திருவிழா..

வனத்தசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோனியார் திருவுருவ சிலைக்கு சமனசு மாலை போடப்பட்டது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுமை புனித அந்தோணி யார் ஆலயத்தின் தேர்பவனி திருவிழா நடைபெற்றது. புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய்நொடி இன்றி நீடூடிவாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. திருப்பலி வழிபாட்டில் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து […]

ஓட்டல், பேக்கரி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர், ஓட்டல்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், மளிகை கடைகள், பெட்டிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது விதிமுறைகள் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமேற்றிகள் அதிகம் […]

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து இந்திய அணியுடன் டெல்லி வந்தடைந்த அபிஷேக் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது இல்லத்தில் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் […]

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி

சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் […]

பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான […]

18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்

அடையாளம் தெரியாத, யாரும் உரிமை கோராத 18 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது தஞ்சாவூர் நகர பகுதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு , மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கந்தர்வக்கோட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத மற்றும் இது நாள் வரை உரிமை கோராத ஆண்கள் சடலம் 16, பெண்கள் சடலம் 2 , மொத்தம் 18 சடலங்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு வாசல் […]

நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு

கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில்காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை மற்ற வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.மாறி மாறி பெல்ட்டை […]

வந்தே மாதரம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்

வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். குடியரசுத் தலைவர் ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடல் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..

பிப்.22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கும் திமுக மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கத் திட்டம். போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் தாங்களே களம் காண திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாரத்தை தொடங்கும் திமுக. தொடர் பரப்புரை, மாநாடு, சட்டமன்றத் தேர்தலால் பிப். 22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்குவதாக அறிவித்த திமுக. தொகுதி நிலவரம், சாதக பாதகங்களை ஆய்வு செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக […]

மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; கௌரவ அமைச்சர் துரை முருகன், 87 வயது, கால் வலி காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவால் வார்டில் அனுமதிக்கப்படுகிறார். வலிக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, […]

திமுகவின் அடுத்தடுத்த 3 மாநாடுகள்

• காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. • இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), […]

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்படுமா அல்லது தற்போதைய சரிவை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டுமான என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தங்கம் சுமார் 7% வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளி இன்னும் கடுமையாக சரிந்து 32% வரை இழப்பை சந்தித்துள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு உலோகங்களும் சிறிய […]

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே வாக்குவாதமாக மாறி, பின் கைக்கலப்பாக உருவெடுத்தது. போலீசார் விரைந்து வந்து தடுத்ததால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள […]

பிப். 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறை வாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிற வேலை […]

திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு

திருப்பதி லட்டு வழக்கில் ரூ.234.5 கோடி பணத்தை ஹவாலா மூலம் நாட்டின் பல்வேறு மாநிலத்தின் வழியாக மாற்றியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதில் முறைகேடுகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விஷயத்தில் முக்கிய கூறுகளை அடையாளம் கண்ட நிலையில் அமலாக்க இயக்குநரகம் இதில் தலையிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் […]

என்னுடைய முதல் சிறை அனுபவமே ‘மிசா’தான்”- நம்பி நாராயணனிடம் பகிர்ந்த முதல்வர்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். Vibe with mks என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மிசாவில் உங்களை கைது செய்தார்களா? என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1976 ஜனவரி மாதம் மிசா வழக்கில் என்னை இரவோடு இரவாக கைது செய்து அழைத்து சென்றார்கள். அதுதான் என் முதல் சிறை அனுபவம். அப்போதெல்லாம், சிறுநீருக்கு ஒரு பானை, குடிநீருக்கு ஒரு […]

செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். […]

இந்திய அணியின் வரப்பிரசாதம் சூர்யகுமார்- கம்பீர் பாராட்டு

டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமாரை பயிற்சியாளர் காம்பீர் பாராட்டியுள்ளார். இது குறித்து கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த வடிவில் என்னுடைய வாழ்க்கையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்தோ, ஒரு பேட்ஸ்மேனாக தனது ஷாட்களை அவர் எப்படி தேர்வு செய்கிறார் என்பது குறித்தோ நான் எதுவும் சொல்லவில்லை. அதையெல்லாம் கொஞ்சம் […]

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். கலிபோர்னியாவில் நடக்கும் விவகாரத்து வழக்கில் தனக்கு உதவ ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளார். […]

ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம்- உத்தரவு

ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலைமை சீராக பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய நகரங்கள், மாவட்டங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரே இடத்தில் […]

மணிப்பூர் மாநிலம் உக்ருவில் வன்முறை… மீண்டும் பதற்றம்

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குல் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே நீடிக்கும் வன்முறை காரணமாக வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியுள்ளது. தற்போது நடந்த வன்முறையில் 9 முதல் 10 வீடுகள் வரை தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் தகவல் […]

பாஜ-அதிமுகவை மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டும்- கனிமொழி ஆவேசம்

நெல்லையில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த வேலை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நெல்லை இல்லை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். எந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், யாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதை டெல்லி […]

கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிவிட்டார் அன்புமணி… பாமக எம்எல்ஏ அருள்

சேலம்: பாமக இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ சேலத்தில் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது: பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அன்புமணி கூட்டம், அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளது. தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. பணத்தை கொடுத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தற்போது தேர்தல் ஆணையம் தான் […]

அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய்ப் புகார் அளித்த நிகிதா மார்ச் 4ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக தொடர்பாக தனிப்படை போலீசார் தாக்கி கொலை செய்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீஸ்காரர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் […]

8 வயது சிறுமியிடம் அத்துமீறல்- முதியவர் போக்சோவில் கைது

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர், 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கருவேலமரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த சின்னசாமி, அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோவின் […]

குவைத்தில் சிக்கிய பெண்-12 மணி நேரத்தில் மீட்ட ஜோஸ் சார்லஸ்!

குவைத்தில் சிக்கியிருந்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின் மனைவி சத்தியவாணி என்பவரை தனது துரித நடவடிக்கை மூலம் 12 மணி நேரத்தில் மீட்ட LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன், புதுச்சேரியில் இலட்சிய ஜனநாயக கட்சி (LJK) என்ற புதிய கட்சியை டிசம்பர் 2025-ல் தொடங்கினார். இவர் தனது ‘JCM மக்கள் மன்றம்’ மூலம் […]

பாலியல் வன்கொடுமை… போக்சோவில் 2 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். மேற்சொன்ன 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, […]

இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, […]

சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171 இருந்தனர். விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரி பார்த்தனர். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் டெல்லி […]

கேசவ விநாயகம் மீது எந்த விமர்சனமும் இல்லை- தமிழிசை

தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலராக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த கேசவ விநாயகன் பொறுப்பில் இருந்து விடுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “தமிழக பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி ரீதியான மாற்றங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் […]

டி20- நமீபியா அணிக்கு எதிரான போட்டி- நெதர்லாந்த் அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் 10 வது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நமீபியா 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட […]

With Love படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்துஅறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) எனும் திரைப்படத்தில் ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக K. சுரேஷ்குமார் பணியாற்றியுள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல் செய்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் […]

வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.காலையில் ஒன்பது முப்பது மணிக்கு புதிய நீதிமன்ற கட்டிடம் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார் 11 மணி அளவில் அவரது ஜூனியர் பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடோடி வந்தார். அப்போது தங்களது பைக் மீது மோட்டார் […]

நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்

கொச்சி: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணைக்காக ஆஜராகும்படி நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் […]

செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி

கடலூர், பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி உயிரிழந்தார். செங்கல் சூளை உரிமையாளர் வேணுநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாந்தியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் […]

பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு… முதல்வர் பேச்சு

சென்னை: எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை; உங்கள் அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பரப்புரையை கல்லூரியிலேயே தொடங்கிவிட்டார்கள். சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நானும் எம்.சி.சி. பழைய மாணவன்தான். சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது என […]

புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோக்களை முன்னாள் எம்பி. எம் எம். அப்துல்லா வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை, மாநகர திமுக செயலாளர் ராஜேஷ் ,திமுக நிர்வாகிகள், மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யா:  இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை கைவிட மறுப்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நியாயமற்ற வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு ரஷ்யா – உக்ரைன் போர் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் அழுத்தங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.லாவ்ரோவ் தனது அறிக்கையில், “மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ஆதிக்க […]

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக […]

2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் தார் சாலை மற்றும் தார் சாலை மேம்படுத்தும் பணி கணேசா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி காமராஜ்புரம் கிழக்கு பகுதியில் தார் சாலை மேம்படுத்தும் பணி மேலும் பாரதி நகர் கோவை மெயின் ரோடு, அண்ணா […]

தவெகவுடன் கூட்டணி- ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலா முக்கிய அறிவிப்பு

மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து கவனித்து வந்தார்.அதனால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை ’அம்மாஎன்றும், சசிகலாவைசின்னம்மா’ என்றும் அழைத்து வந்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அவரது நிழலாக வலம் வந்த சசிகலா, நிஜ அரசியலுக்குள் நுழைந்தார். 2017-ம் […]

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் “முன்னெச்சரிக்கையாக ஆஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சிகளை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கரூரில் நாதக பொதுக்கூட்டம்.. தவெகவை சரமாரி விளாசிய சாட்டை துரைமுருகன்

கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் […]

கோவை- ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தம்பதி கைது..பரபரப்பு

கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய input tax யை திரும்பி பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த பைலை முடித்து கொடுக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம் ரூபாய் என பேரம் […]

கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் தங்களது விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் , பின் முரணாகப் பேசிய […]

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் நியமனம்

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார்.கேசவ விநாயகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து வருபவர்கள் மட்டுமே இந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். தற்போது கேசவ விநாயகம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொறுப்புகள் வழங்கப்பட […]

50 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் படம் வர வேண்டும்… சரத்குமார் ஸ்பீச்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆழி’. இந்த படத்தில் இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில், மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அவர்,“சினிமா படங்கள், ஓ.டி.டி. படங்கள் என நடிகர்கள் வித்தியாசம் பார்க்கக் கூடாது. எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நடித்தால் சிறப்பான […]

கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை… பாகனை தாக்கியது

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அத்தாழ ஸ்ரீ வேலி என்ற நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியின் போது யானை மீது சாமியின் திடம்பு ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். அதற்காக சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் […]

இன்றுடன் SIR பணிகள் நிறைவு – இறுதி வாக்காளர் பட்டியல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகள் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகின்றன. இந்தப் பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் செய்ய முடியாது. சிறப்பு தீவிர சரிபார்ப்பு பணியின் போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 […]

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வௌியீடு

2025-26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது. பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ‘கிரேடு பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு ‘ஏ+’ (Grade A+) பிரிவில் இருந்தவர்கள், தற்போது ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய […]

சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!

பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார். கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு

சிக்கிம் மாநிலம் நாம்சி பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை 2.32, 4.25, 5.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 3.3, 3.4, 3.3 என பதிவானது. சிக்கிமில் நாம்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு- பாஜக திட்டவட்டம்

சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இந்நிலையில் சென்னையில் நடந்த RSS – பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (09.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் […]

சட்டப்போராட்டத்திலிருந்து பின்வாங்கிய ”ஜனநாயகன்”

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கை திரும்பப் பெற்றது தயாரிப்பு நிறுவனம். ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.

குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து… மார்ச் 15ம் தேதி தேர்வு நடைபெறும்

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு […]

விருப்ப மனு பெற ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்…வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார்.  2 நாட்களாக விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் இன்று ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

குடும்ப கட்டுப்பாடு செய்ததை மறைத்து வாலிபரை கரம் பிடித்த கல்யாண ராணி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன்- அபுதா தம்பதியரின் மகன் விக்ரமன் (23) என்பவர்  செங்கல்பட்டு வேதாசலம் நகரில் செயல்பட்டு வரும் தங்கமயில் ஜீவல்லரியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்ரமனை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் தனது மகன் விக்ரமனை காணவில்லை என செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் […]

திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒத்திகையை நடத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவியின் […]

கவர்னர் காரைத் துரத்திய போதை வாலிபர்கள்: கிண்டியில் அதிரடி கைது

நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கவர்னர் ஆர்.என். ரவி தனது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கவர்னர் காரின் அருகே மிக நெருக்கமாகச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவு போலீசார், வாகனத்தை நிறுத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]

டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு: மார்ச் 15-ல் குரூப்-2 மறுதேர்வு – ஹால் டிக்கெட் எப்போது?

தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் வினாத்தாள் குளறுபடி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது மறுதேர்வுக்கான கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். புதிய தேர்வு அட்டவணை: அதன்படி, வரும் மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் நடைபெறும்: இந்தத் தேர்விற்கான புதிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) வரும் பிப்ரவரி […]

ஹோட்டல் ஊழியரைத் தாக்கிய போலீஸ்: சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் கடந்த 08.02.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோயில் 4 ரோடு பகுதியில் உள்ள ‘சஷ்டி பாஸ்ட் புட்’ உணவகம் இரவு 10 மணிக்கு மேலாகியும் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் மோகன்குமார், கடையை ஏன் இன்னும் மூடவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர் ராம்துலால் மோண்டல் என்பவரைத் தகாத வார்த்தைகளால் […]

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் 3 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டது. தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கடைகளை திறந்து இருந்தனர். திடீரென டாஸ்மாக் கடைகள் […]

தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?

 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை […]

முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு […]

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…

பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின் வழக்கில் அன்புமணிக்கு எதிராக உத்தரவு வந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பாமக உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கல்குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு- மதுரை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், கல்லாணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விதிகளை மீறிய குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லாணை சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை அடுத்து திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து அதிகாலை 2:30 மணிக்கு முதல் மூன்று மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து பூஜை […]

தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி மாசிலாமணி உடல் கருகிப் படுகாயமடைந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைத்தோட்டத்தில் வெட்டப்பட்ட வாழை மரங்களிலிருந்து வாழைநார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாழைத்தார் வெட்டும் பணிகள் முடிவடைந்ததும் வாழை தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து அந்த வயலை குத்தகைக்கு எடுத்து ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி எடுத்து, அதிலிருந்து நாரை உரித்து […]

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, முருகன் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா […]

சூர்யாவின் ”மௌனம் பேசியதே” ரீ ரிலீஸ்

சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், “காதலே பிடிக்காது” என்று சொல்லும் ஒரு நாயகன், இறுதியில் காதலில் விழுவதை ரத்தமும் சதையுமாகச் சொன்ன படங்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில் 2002ஆம் ஆண்டு வெளியாகி, இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த படம் ‘மௌனம் பேசியதே‘. சரியாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வரும் […]

கூட்டணியை நம்பி தவெக துவங்கவில்லை-திருச்சியில் அருண் ராஜ் பேட்டி

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமை நிர்வாகி கே.ஜி.அருள்ராஜ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்டி கூட்டம் இன்று நடைபெற்றது இதில்ஜே.சி.டி. பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் . சம்பத்குமார்,அருள் பிரகாசம், விஜய்..பரணி பாலாஜி, டாக்டர் முகமது பர்வேஸ், டாக்டர் பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்தக் கருத்து கூட்டத்தில்திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் […]

மக்கள் குறைதீர் கூட்டம்-பொதுமக்களிடம் கத்தி-புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி இன்றும் சோதனை செய்த பொழுது சில பொதுமக்கள் கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி, இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். பெண்கள் சிலர் […]

கோவை- வள்ளி கும்மி அரங்கேற்ற விழா- 5000 பெண்கள் நடனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் காராள வம்சம் கலை சங்கதின் சார்பில் 5000 பெண்கள் கலந்து கொண்ட 100வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் நிறுவனர் நித்தியானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கோவை சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் கலந்து கொண்டார். இங்கு நடைபெற்ற இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]

28 செம்பரி ஆடுகளை அடித்து கொன்ற மர்ம விலங்கு…பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் அருகே சபரி ராஜ் என்பவர் தனியார் தோட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக தங்கவேல் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் பகல் முழுவதும் செம்பரி ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் தோட்டத்து பட்டியில் கட்டி விடுவதும் மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அவிழ்த்து விடுவதும் வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டிக்குச் சென்று பார்க்கும் பொழுது அங்கு […]

கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம் : முதிய தம்பதி மீது தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ !!! தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் […]

தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டம் ,பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, காரை ஓட்டி பார்த்தார். பின்னர், திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு […]

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… முதல்வருக்கு நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 291 பேருக்கான காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல், இட்லி, வடை, […]

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை […]

புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்

 புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் […]

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு.. அமைச்சர் முத்துசாமி

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற ஏஜென்சி நியமிக்கப்படவுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்

திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் […]

ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் மெட்ரிக் பள்ளியில் கேர்ள் ரத்னா உலக சாதனை நிகழ்வுக்காக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வேலா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் ராஜ், இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் […]

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் […]

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்

பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளை […]

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர் […]

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து, கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடுமையான மூடுபனி […]

தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு-டிஆர்பிராஜா தகவல்

 6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2வது கார் தொழிற்சாலை திறக்கப்படுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஏற்கனவே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று டாடா மோட்டார்ஸ் ஆலை திறக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2 ஆண்டுக்குள் ஆலைகள் திறக்கப்படுகின்றன. இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் வேகம்,”இவ்வாறு தெரிவித்தார்.

தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது.

ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு

அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சுற்றி பல சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலும், பெரம்பலூரில் உள்ள மலைகளில் இருந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஜல்லி ஏற்றி வரும் […]

அதிமுக-பாஜகவை விரட்ட..தமிழ் புலிகள் மாநாட்டில் VSB வேண்டுகோள்

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் தமிழ் புலிகள் மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியதாவது… இந்த மாநாடு வெறும் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 234 […]

ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் […]

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மை தேர்வு 8ம் தேதி நேற்று (08.02.2026) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. […]

நிதி நெருக்கடியிலும் ஓய்வூதியத் திட்டம்: மொத்தச் சுமையையும் ஏற்கும் தமிழக அரசு – ஜாக்டோ ஜியோ மாநாட்டில் உறுதி

நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதி திட்டத்தை அறிவித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகர்வை ஒன்றிய அரசு […]

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 7:30 மணியளவில் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தினேஷின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. […]

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. அவரது கவனக்குறைவாலும் […]

வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, […]

சேலத்தில் விஜய் பங்கேற்கும் ‘மக்கள் சந்திப்பு’: 51 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அதிரடி அனுமதி

சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.* 13ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 3 மணி […]

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று […]

2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 3-ஆம் […]

கல்லூரி மாணவரிடம் செயின் பறித்த வழக்கில்- பாஜ., நிர்வாகி உட்பட 2பேர் கைது

கோவை: கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான விவேக் (36) பாஜகவின் பட்டியலினப் பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திமுகவுக்கும்-காங்.,க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை…செல்வபெருந்தகை

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். காந்தி பெயரை சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங். போராட்டம் தொடரும். திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்துகொள்ளும். திமுகவுடன்தான் இணைந்து பயணிப்போம்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.

பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று(07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகளின் நிலை சீராக இருந்தபோதிலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதுடன், வயிற்று வலி இருப்பதாகவும் புகார் […]

வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். […]

நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.இருப்பினும் மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி […]

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்றும், அதன் மூலம் கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும் என்றும் தொண்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகாததால் கட்சி பணிகளில் ஒருவித தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை படம் […]

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த மாணவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கிப் பயணமானார்கள். பள்ளி வாகனம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த […]

டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.50 லட்சம் பறிப்பு

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, முதியவரின் ஆதார் அட்டை மற்றும் சிம் கார்டு விபரங்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து FIR Copy, Arrest Warrant போன்ற ஆவணங்களை […]

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0% வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, தினை, வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்களுக்கு வரிவிலக்கு இல்லை” என்று அவர் கூறினார். இதனால் இந்திய விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் […]

பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்.ஆனால் எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர்தான் முதலமைச்சர் […]

திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்-அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அதில், “இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்,”இவ்வாறு தெரிவித்தார்.

மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- கனிமொழி ஸ்பீச்

விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி […]

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மா.செ.வி.எஸ்.பாபு

வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார் வி.எஸ்.பாபு.பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார். இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவ அலுவலர் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உயரும்…

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் […]

நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர்(37) என்பவர் மாரியப்பனை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் […]

வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…

பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலககத்தில் நேற்று  விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் விருப்ப மனுவை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், த.வெ.க. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். சென்னை உள்பட […]

கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் ₹3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) கழிப்பறை கட்ட கூடுதலாக ₹12,000 வரை நிதியுதவி மற்றும் வேலை நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: […]

புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி […]

2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரவைக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் வராக இருந்தார். இதையடுத்து, நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான […]

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப போட்டி டில்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்னபிள் பந்தயத்தில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் கலந்து கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராங்ஷ் பட்டீல் 251.9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற ருத்ராங்ஷ் பட்டீலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் […]

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்

வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு […]

5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..! போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல் அமைத்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பந்தல் திடீர் என்று சாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு […]

நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்

சினிமாவில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம், சில நாட்களுக்கு முன்பு தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலர், “இவருக்கு என்ன ஆயிடுச்சு?”, “ஏன் இப்படி வீல் சேரில் உட்கார்ந்து ஆடுறார்?” என்று கவலையோடு கேள்வி எழுப்பினார்கள். ஒருகாலத்தில் திரையில் அட்டகாசமாக அடித்து நொறுக்கிய பொன்னம்பலத்தின் இந்த நிலை, ரசிகர்களை மனதளவில் பாதிக்க வைத்தது.இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் […]

ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக […]

பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி

கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை அல்லது ஒரு சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என சிறுமிக்கு 30 வார கருவை கலைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது. விசாரணையின் போது சம்மந்தப்பட்ட சிறுமியின் […]

பிப்.,17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1 கீழ் சட்டமன்ற பேரவையின் அடுத்தக்கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 2026 பிப்ரவரி 20-ந் தேதி பேரவை விதி 193/1 கீழ் 2026-27 ஆம் […]

ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்களம் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் சின்னையா (17) உயிரிழந்தான். பிப்.2ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி […]

ஆன்லைனில் காலாவதியான பொருட்கள் விற்றால் நடவடிக்கை

ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக மளிகை பொருள் வாங்கும்போது காலாவதி தேதி ஆராய்ந்து மக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்

 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது அரசியல் அல்ல, ஆர்வக்கோளாறு”-பாமக நிர்வாகி திலகபாமா!

சென்னை : பாமக நிர்வாகி திலகபாமா, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) திரைத்துறையை நோக்கி பயணிக்கும் ஒரு ஆர்வக்கோளாறாகவே தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். “ரசிகர் கூட்டம் ஓட்டாக மாறாது” என்றும், விஜய்யின் வருகை தற்காலிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அது நீண்டகால அரசியல் வெற்றியாக மாறுவதற்கு சாத்தியக்குறைவு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட ரசிகர்களின் ஆதரவு வாக்காக மாறுவதற்கு காலம் பிடிக்கும் என்றும், அது உடனடியாக நடக்காது என்றும் அவர் விளக்கினார். திலகபாமா மேலும் கூறுகையில், தவெக தேர்தலில் […]

ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் இணைத்தால், விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எங்கள் கொள்கையில் சமரசம் கிடையாது என்று திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தனியார் […]

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து […]

இஸ்லாமாபாத் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் கடுமையான வெடிபொருள் கொண்ட தற்கொலைத் தீவிரவாதியால் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்த பலர் பலியாகினர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாக உள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளது.தாக்குதலுக்கு பொறுப்பேற்று இதுவரை எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அரசு இத்தாக்குதலுக்கு இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டி […]

அமமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

அமமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் பி.ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் மாற்று கட்சியினர் VSB முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கரூரில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள், தாங்கள் சேர்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக முக்கிய […]

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்: இந்தியா மீதான வரிகள் குறைக்கப்பட்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து. இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக […]

பாகிஸ்தானில் பயங்கரம்- மனித வெடிகுண்டு தாக்குதல்-31 பேர் பலி-169 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியை நோக்கி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவனை காவலாளி தடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் திடீரென வெடிகுண்டை இயக்க செய்துள்ளான். இதில் பயங்கர சத்தத்துடன் […]

பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம்

சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன், ‘அருவி’ மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகும் படம், ‘டார்க் ஜெயண்ட்’. இதை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைக்கிறார். பயோவன் கிரியேஷனிசம் சார்பில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாறுபட்ட ஹாரர் திரில்லர் […]

பாஜக விமர்சனத்திற்கு கமலின் ‘ஸ்டைலிஷ்’ பதிலடி..!

மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் நல்ல கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். ஒரு தமிழனாக நாடாளுமன்றத்தில் நல்ல கருத்தை பேசியதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். விவாதம் செய்து உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஜனநாயகம், இப்படித்தான் இருக்கும், விவாதங்கள் தொடர வேண்டும்” என்றார். மக்கள் நீதி மையம் கட்சியின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி […]

அரியலூர்-காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக தகவல்… வனக்காவலர் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு […]

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான […]

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் நேற்று (பிப்.06) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், லக்னோ மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹிமாச்சல பிரதேசம் […]

மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க […]

நிழற்குடையில் தவெக வண்ணத்தில் செங்கோட்டையன் பெயர்: நள்ளிரவில் திரண்ட அதிமுகவினர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் பகுதியில், சுமார் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்தப் பணியின் இறுதியில், நிழற்குடையில் ‘கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ’ எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கட்சி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டது. இதையறிந்த அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் நம்பியூர் யூனியன் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், […]

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, வடக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். *பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய […]

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றபோது யானை குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார் அருகில் இருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார் தகவல் […]

கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி

மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்காக முத்தரையர், மறவர், மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த […]

உபியில் SIR பணி- ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

உத்தரப்பிரதேசத்தில் SIR பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு..ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுகலை மருத்துவப்படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் முன்பு விசரணைக்கு வந்த பொழுது மருத்துவர்களுடைய தரநிலை என்பது […]

தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதில் வல்லம் பேரூர் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க […]

மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற்பகலில் தங்கம் விலை ரூ.1,040 உயர்ந்தபோதிலும் நேற்றைய விலையை இன்று ரூ.560 குறைவு.

குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் பதிலுரை தராதது ஜனநாயக தலைக்குனிவு- திருமா.,

புதுடெல்லியிலிருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் வந்திறங்கினார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு இருப்பது, இதுதான் முதன்முறை. மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளுங்கட்சியினர் மட்டுமே ஒன்றுகூடி அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். குடியரசு தலைவரின் உரை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதமர் […]

சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 […]

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்-பெ.சண்முகம் ஸ்பீச்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள்) கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். பெ.சண்முகம் மேலும் தெரிவித்ததாவது, “திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கும். விரைவில் தொகுதிப் பங்கீடு […]

கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்

கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், […]

ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் […]

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திராவுக்கும், புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் […]

WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!

பெங்களூர் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உரிமையாளர் விஜய் மல்லையா, RCB பெண்கள் அணி WPL 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். X (முன்பு ட்விட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: “RCB பெண்கள் WPL அணிக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகள். தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன்ஷிப். நன்கு சம்பாதித்தது, நன்கு வென்றது. RCB ஆண்கள் அணிக்கும் இது உத்வேகமாக அமையும். அவர்களும் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளட்டும்.” இந்த வெற்றி RCB அணிக்கு […]

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் […]

கோவை- கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை- பீதியில் வாகன ஓட்டிகள்

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, வடவள்ளி, சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை, […]

புதிய ”ட” வடிவ மேம்பாலம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வரும் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என தெரிவித்தார்.

விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல். திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். திமுகவை வளர்த்த இளைஞர்கள்தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களுக்கு அடுத்தபடியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை உதயநிதி சிறப்பாக செய்கிறார். திமுக […]

அனைத்து கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ம் தேதி வெளியிட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் தமிழ் சினிமா நடிகை உட்பட 9 பேர் கைது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், முதலில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருளை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31) என்பவர் வழங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரையும் கைது செய்தனர். இதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், திரைப்பட நடிகை […]

40 கோடியில் குளித்தலை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்வு-விழாவில் VSB பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட […]

கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும்,அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும் அபாயம் […]

மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம்… ராமதாஸ் பேட்டி

செங்கல்பட்டு: மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என செங்கல்பட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘மாம்பழச் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வெளியாகும்.கூட்டணி தொடர்பான பேச்சு நடந்துவருகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’ எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் […]

ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்- ஈபிஎஸ்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த […]

அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்

மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை […]

விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்

கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும், அரசியல் வசனங்களுடனும் சொல்லியிருந்தது. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், ‘நந்தன்’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இரா.சரவணன் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். […]

டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு

டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, காக்கள், கோழிகள் அல்லது வேறு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அவற்றை மனிதர்கள் வெறும் கையால் […]

பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ஜெய்பாலாஜி விலகினார். இந்நிலையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது […]

எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. ​அதேமாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்பட்ட பொழுது முதலமைச்சர் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. பெண்கள், மகளிர் படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் படித்தால் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் […]

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!. கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்@mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி […]

அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்

விருதுநகர்: “எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். திமுகவின் அறிவிப்புகளைதான் ஜெராக்ஸ் எடுத்து அதிமுக அறிவித்துள்ளது.

கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் துயர சம்பவம்: இரண்டு போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போக்குவரத்து காவலர்கள் மற்றும் […]

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..

2025ம் ஆண்டு முழுவதும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது ஆர்பிஐ. ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடம் கடன் வாங்கும் வட்டி விகிதம். இது குறைந்தால் நாம் வாங்கும் வீடு, கார், கல்வி கடன்களின் வட்டி விகிதமும் குறையும். ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும். வீடு, கார், கல்வி […]

ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.அடையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து […]

ரூ.1.50 கோடி அபராதம்… எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருவாய் என விஜய் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். நடிகர் விஜய் வீட்டில் 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களோடு வருவாய் ஒப்பிடப்பட்டது. புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்த வருமான வரித்துறை. வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு 2022ல் ஒரு கோடியே 50 லட்சம் […]

கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக (Connemara Public Library) வளாகம் மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் ₹85 லட்சம் மதிப்பீட்டில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்த முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (ஏப்ரல் 3, 2025) சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், “உலகத் தொழிலாளர்களின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ்க்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். நூலகங்களையே தனது வாழ்விடமாகக் […]

மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு கார்த்திக் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்துவதால் குடும்பப் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய கார்த்திக், அவர்களை அங்கிருந்து […]

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், […]

தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின. விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன் போர் விமானங்களையும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ((Air-defense systems)) மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா நகர்த்தி வருகிறது.நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர். பாதுகாப்பு […]

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும் விற்பனையாகிறது.

கிளாசிக் ஹிட் ‘பராசக்தி’ OTT ரிலீஸ் – பிப்.,7 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உணர்வு, ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்த உணர்ச்சி காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் பெறும் கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் மற்றும் காட்சிகள் (குறிப்பாக இந்தி திணிப்பு தொடர்பானவை) சென்சார் தரப்பால் நீக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. […]

அரசியல் அனுபவம் இருந்தும் தவறான முடிவு? – செங்கோட்டையனை சாடிய வானதி!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், […]

தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 06.02.2026 முதல் 01.04.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், […]

கட்சித் தலைவருக்கான தகுதியை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும்: நயினார் அட்வைஸ்

சேலம்: ஒரு கட்சி தலைவராக இருந்துக்கொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் விஜய்யின் கொள்கை என பாஜ தலைவர் சாடி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாயிருக்கிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு உட்கட்சி பூசல் ஒன்றும் இல்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு […]

ஹெச். ராஜா அபாய கட்டத்தை கடந்துவிட்டார்”- குடும்பத்தினர் அறிவிப்பு

நெருக்கடியான தருணத்தில் H.ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில் அவர்களது குடும்பத்தினர் பதிவிட்டுள்ள பதிவில், “H.ராஜா 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது […]

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தாண்டு மே 1ம் முதல் மே 31ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு […]

அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி

அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா?; பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை,”இவ்வாறு தெரிவித்தார்.

கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு

கரூரில், 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளிக்கையில்; கரூர் […]

83 பேரை அரசு பணியாளராக உருவாக்கிய திருவாரூர் இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டரிடம் இலவச பயிற்சி பெற்ற 83 இளைஞர்கள், ராணுவம் & போலீஸுக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சதீஸ்குமார் தற்போது திருவாரூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுயமாக படித்து இந்நிலைக்கு உயர்ந்த அவர், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பயிற்சி பெற்று தேர்வான 83 பேரையும் SP கருண் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]

15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (5.2.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இன்றைய அமைச்சரவையில், ஏறத்தாழ 15 முதலீட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் திராவிட நாயகன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒட்டுமொத்தமாக 34,237.39 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய ஒரு அற்புதமான பல திட்டங்களுக்கு […]

சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். சீட் தராவிட்டால், கட்சி தாவுவேன் என்றும் மிரட்டுகிறாராம். அவசரப்படாதீங்க என்று ஓ.எஸ்.மணியன் அவரை, ஆறுதல்படுத்தி வருகிறாராம். இதுபற்றி மயிலாடுதுறை […]

விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த நபர் விபத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இறந்து உள்ளார். அதன் பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை வெளியில் எடுப்பதற்காக பாதிக்கப்பட்ட வாலிபர் சென்றுள்ளார். அவரிடம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒருவர் ஏற்கனவே பத்தாயிரம் […]

பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதி… சபாநாயகர்

பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது… பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என்றேன். நேற்று பிரதமர் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன். பிரதமரை தமிழக காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்கள் முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக ஓம்பிர்லா குற்றச்சாட்டியுள்ளார். பிரதமரை தாக்க எதிர்கட்சிகள் சதி என இவ்வாறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி (52) அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகவும், தந்தை பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காவ்யாவைக் காதலித்து திருமணம் செய்த காரணத்தினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் […]

முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் […]

தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டுவரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் மற்றும் பலர் இருந்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6000 […]

ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில செயலாளர் சாய்பாபா தொடங்கி பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பூத் வாரியாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்திற்கு வந்து, […]

தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்

தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கு ரூ.15,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்.12ம் தேதி மாலை 5 […]

தேர்தலுக்கு முன் ‘கராத்தே பாபு’ படத்தை வெளியிட திட்டம்

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய படம் ‘கராத்தே பாபு’. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன் படத்தை திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- காங்., போராட்டம்

விவசாய உபகரணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில், […]

கரூர் அதிமுக நிர்வாகி VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

மாநிலம் முன்னேற, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் தர்மேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகளப் போட்டிகள்

தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது.38 மாவட்டங்களிலிருந்து பார்வை […]

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை விதி 238ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களையும் விவாதிக்கலாம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என முன்னாள் மாநிலங்களவை தலைவர் தன்கர் உத்தரவிட்டுள்ளார். “தன்கர் வழங்கிய உத்தரவு இன்னும் நிலுவையில் உள்ளது, உத்தரவு ரத்தாகும் வரை […]

தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் 11-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் […]

கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன. இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை […]

நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு

திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் – ரூபியாபானு என்ற தம்பதியின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன், கல்பாக்கத்தில் செயல்படும் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே இச்சிறுவன் நினைவாற்றல் மற்றும் விரைவாகப் பதிலளிக்கும் வேகம் கொண்டவனாக திகழ்ந்து வருகிறான். […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் […]

நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்ட ஆகாஷ், அதன் பிறகு முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை. நாய் கடித்த விவரத்தையும் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷின் செயல்பாடுகள் விசித்திரமாக இருந்துள்ளன. அவர் […]

நிகிதாவை கைதுசெய்ய வேண்டும்.. அஜித்குமார் தாயார்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், நிகிதா, அஜித் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என கூறியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார், “என் மகன் மெது பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுளார். அஜித்தை அடித்து கொன்ற 5 காவலர்களும் வெளியே வரக்கூடாது” என கூறியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் PM-ஐ மாத்திடுவேன்- நடிகர் கிஷோர்

தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் கிஷோர் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அவர்; பிரதமர் மோடி குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிஷோருக்கு தைரியம் அதிகம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். கன்னட திரையுலகத்தில் அறிமுகமாகி தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் கிஷோர். அவர் அப்படத்தில் ஏற்றிருந்த செல்வம் என்ற கதாபாத்திரம் கோலிவுட்டில் வந்த சிறந்த வில்லன்கள் கதாபாத்திரத்தில் ஒன்று. […]

மக்களவையில் தேர்தல் பிரசாரம் போல பேசுகிறார் – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்!

டில்லி பாராளுமன்ற Budget கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி தொடர்பாக பெரிய அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய இன்னும் வெளியிடாத நினைவுக் குறிப்பை மேற்கோள் காட்ட முயன்றபோது அவைத் தலைவர் அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. பாராளுமன்ற விதிமுறைகளின்படி வெளியிடப்படாத ஆவணங்கள் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களை அவையில் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இந்த […]

இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து தாமோதரனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பொதுக்கூட்டங்களும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த இரட்டை என்ஜின் ஆட்சி தேவை” […]

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல் வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியில் […]

தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்

கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.

தேமுதிக பிரேமலதா இந்த தொகுதியில் தான் போட்டியிட முடிவு

சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தே.மு.தி.க.. தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகள் தருவதாகவும் தே.மு.தி.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய மந்திரி பதவியை கூடுதலாக கேட்கிறது. அதிக தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்க காரணம், அக்கட்சியில் பலர் […]

துபாயில் மாஸ் காட்டும் நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகர் கார்த்தியின் திரைப்பயணம், இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துடன் துவங்கியது. முதல் படத்திலேயே மிகவும் கரடுமுரடான, மண்வாசனை நி றைந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, தன் நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்தார். மேலும் விருமன், ‘பொன்னியின் […]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள், கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி. கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள்

பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் துவங்கின. மதுரையில் ரூ.2021 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் முழு கட்டுமானப் பணியையும் பிப்ரவரி 2027க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு கற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் சோதனை நடக்குப்பட்டது. காகங்கள் இறப்புக்கான காரணத்தை அறிய போபாலில் உள் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த நிலையில் தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ” […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.அந்த வகையில் பிப்.3ம் தேதி மொத்தம் 69,389 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 20,247 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை […]

சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத் துரோகம் செய்த அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீலாங்கரை பகுதியில் சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த திருநாவுக்கரசு (36) என்பவர், அங்கு பயிற்சிக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகத் […]

எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி (80), இன்று காலை அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ராமசாமியின் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் வெளிக்கதவு தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், யாரோ […]

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டில்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து பிப்.,12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் […]

சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தித் திணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்த வர்த்தக நிமித்தமாக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவகாசி ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக அங்கு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த […]

குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து […]

வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் […]

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

அதில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையம் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு பூங்காவையும் திறந்து வைத்தார். தற்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடம், சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடமாகும். இது சுமார் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த அரங்கில் 600 நபர்கள் அமர்ந்து […]

பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி 

வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி ஊதி சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் […]

அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. மரியாதை கிடைக்கும் இடத்திலேயே கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து தொகுதி உடன்படிக்கை […]

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாத நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு […]

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர் கேர்’ (Team Cancer Care) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் அங்கீகரிக்கப்படாத நாயகர்களான 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தனர். தலை முதல் கால் வரை […]

கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் […]

திருப்பூரில் வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது

திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக இந்தியா வந்து கடந்த ஓராண்டாக திருப்பூரில் வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஐந்து பேரும் சேலம் ஆத்தூரில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து தூதரக ரீதியாக அவர்களின் நாட்டுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுத் தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது தவெகவின் வளர்ச்சியையும், தேசிய அளவில் கட்சிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும் எது […]

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவிக்கு மஞ்சள்காமாலை நோய் தொற்று இருந்ததாலும் மாணவிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததாலும் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களால் […]

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்ய […]

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கினார். இதற்கிடையில் தனிநபர் கடன் பெற்று காருக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட சுபாஷ், நேற்று இரவு ஆன்லைனில் பிரபல […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை ஆட்சியர் மு.அருணாஇன்று வழங்கினார். உடன்.மாநகராட்சிமேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர்எம்.லியாகத்தலி, மாமன்னர் கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் […]

தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி- ரசிகர்கள் உற்சாகம்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு சிம்பு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். * ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படத்தில் மம்மூட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *‘மண்டாடி’ படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார். *மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்

கோவை, தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயரா ஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த […]

சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என மொத்தம் 12 சேவைகள் செயல்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் என 16 ஏ.டி.ஆர். விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் திருச்சி மற்றும் […]

மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்

சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பாக போலீஸ் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அர்ஜூன் சம்பத் உள்பட 22 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது நீதித்துறை […]

திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி

சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர்.எழிலன் எம்எல்ஏ […]

எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்து விடாமல், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து பாதுகாத்தனர். அதே […]

SIR விவகாரம் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆஜர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனு மீது தானே வாதிட அனுமதி கோரினார். மம்தா பானர்ஜி, வழக்கில் ஒரு தரப்பினராகத் தானே நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரி ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி […]

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலைவடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று […]

அஜித்குமார் மரணம் காவல் மரணம்- சிபிஐ

மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து […]

அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில், வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் பென்சன் ரூ 6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ 19,500/ சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலை […]

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் நடைமுறையில் இருந்த பேக்கேஜ் விதிகள் மாற்றப்பட்டு 2026 பிப்ரவரி 2 முதல் சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு ஆண்டிற்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான […]

4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… ஒருகாலத்தில் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது தான் இன்றைய திண்டிவனம். திந்திரி என்றால் புளி என்று அர்த்தம். புளியமரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் அது காரண பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் […]

ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி

சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை வௌியிட்டார் எடப்பாடி பழனிசாமி- நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.. சிறுபான்மையின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடையும் வீரர்களுக்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் […]

மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவு-முதல்வர் இரங்கல்

மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர்‌ ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராக‌த் தமது கல்விப் பணியைத் தொடங்கிய‌ முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த […]

கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் ஒரு பொதுமக்கள் என 2 பேர் இன்று சிபிஐ விசாரணைக்காக தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு […]

கத்தாரில் திமுக அயலக அணியின் பொங்கல் விழா- உற்சாக வரவேற்பு

திமுக அயலக அணி சார்பில் நடைபெறவுள்ள பொங்கல் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க சமூக ஆர்வலரும், மருத்துவருமான டாக்டர் இராஜமூர்த்தி ஜெயராமன் (Dr. Rajamoorthy Jayaraman), புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் ஆகியோர் கத்தார் வருகை தந்துள்ளனர். கத்தார் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை, கத்தார் திமுக அயலக […]

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

1961-ம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை ஓரம் கட்டிவிட்டு, புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த மெகா மாற்றமானது மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான புதிய விதிகள் மற்றும் எளிமையாக்கப்பட்ட வரிப் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ என்பது […]

தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்

ராமநாதபுரம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்க பகுதியில் உப்பு உற்பத்தி அலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே மாநிலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியும், அடுத்தடுத்து முதலீட்டு மாநாட்டை நடத்தியும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி திராவிட மாடல் அரசு […]

8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- முதல்வர் கண்டனம்

சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக […]

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை பலி

கேரள – தமிழக எல்லையிலுள்ள வாளையார் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில், வாளையார் – கஞ்சிக்கோடு இடையே உள்ள தண்டவாளத்தை ஒரு குட்டி யானை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு விரைவு ரயில் யானையின் மீது பயங்கரமாக மோதியது. ரயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அந்த 4 வயது ஆண் யானை தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு, […]

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் – காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது, அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் சிறைக்காவலை நீட்டித்து இன்று (பிப்ரவரி 4, 2026) உத்தரவிட்டுள்ளன. சம்பவம்: கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி […]

தூய்மை காவலர்களுக்கு ரூ. 6000 ஆக உயர்த்தி அரசாணை வௌியீடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வந் […]

மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்

சென்னை, பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பாடகர் வேல்முருகன், விஜய்யுக்கு அறுபடை வீடு முருகனின் படத்தை நிை பரிசாக வழங்கினார். விழாவில், […]

கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வி உருவாக்கிட அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியவர். வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.அவரது மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

செங்கல்பட்டு- குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ​செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி சார்பில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ​மேம்பாலத்தில் எழும் அடர்ந்த புகையினால் எதிரே […]

பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக அளவில் மது அருந்தியிருந்தது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் காரை நிலைதடுமாறி ஓட்டியுள்ளனர். மோதிய வேகத்தில் பெட்ரோல் மீட்டர் பாக்ஸ் அடியோடு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தானியங்கி பாதுகாப்பு வால்வுகள் செயல்பட்டதால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ […]

தாறுமாறாக ஓடிய கார்..பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 டூவீலர்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் டிரைவர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சீனு என்பவரின் மகன் ரமேஷ் (46 ) என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார். அதேபோல் அந்த அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களாக சதீஷ் மற்றும் பொறியாளர் மேற்பார்வையாளராக ஜெயின் உள்ள புதின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த […]

திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பத்மா மற்றும் அவரது மகள் நவீனா நான்கு மாத குழந்தையுடன் மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, திடீரென அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து பூச்சி […]

மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். அல்வாவை தொடர்ந்து முட்டை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 2026-27 ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாகவும், வேலையின்மை, பணவீக்கம், மாநில சுயாட்சி ஆகியவற்றைச் சரிசெய்யத் தவறிய ஒரு ஏமாற்றமான, மக்கள் விரோத பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை மட்டுமே கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகத்திற்கான ரயில்வே […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.50,40 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி […]

திருவேற்காடு நகராட்சியில் அதிரடி: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள சிறப்புநிலை நகராட்சியான திருவேற்காட்டில், லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இப்பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மனைப் பிரிவிற்குஅனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த அனுமதி வழங்க வேண்டும் என்றால் தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று சாந்தி நிபந்தனை விதித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயலட்சுமி, […]

தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், கருமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறைப் பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 5 […]

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த மர்ம நபர்கள் இளங்கோவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இளங்கோவனுக்கு 12 தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் […]

எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச […]

கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த மையத்தில் 15 படுக்கை வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, பிஸியோதெரபி, செயற்கை மூட்டு மையம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதே வளாகத்தில் 6 புதிய […]

விஜய் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி புகார்

தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகம் 3வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை […]

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!

சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல்

சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே தேவன்குடி மீனவர் காலனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (50) இவரது மனைவி சரிதா (45). இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இளங்கோவன் முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.. தேவன்குடி அருகில் அமைந்துள்ள வீரமாங்குடி […]

அண்ணாமலை விலகவில்லை- விலக்கி வைக்கப்பட்டுள்ளார்

சென்னை: தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.  அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என நயினாருக்கும் தெரியும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.” என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர், ஆவடி அருகே தேவாலயத்துக்குள் புகுந்து ஊழியரை கொன்ற வழக்கில் மோசஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2020ல் முன்விரோதம் காரணமாக தேவாலயத்துக்குள் புகுந்து ஈனோஸ் என்பவரை, மோசஸ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மோசஸ்க்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்- பிரதமர் மோடியை சாடிய ராகுல்

அமெரிக்க அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக […]

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில […]

கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை-வியாபாரிகள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் 47 சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.‌ இந்நிலையில் இந்த கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர் . மேலும் இந்தக் கடைகளுக்கு உரிய பார்க்கிங்கையும் தனியார் ஜவுளி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் வியாபாரம் சரிவர நடப்பதில்லை. வியாபாரம் இல்லாததால் பல கடைகள் […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி

 இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை இதுவரை இருந்ததில்லை. பெட்ரோல், டீசலை யாரிடம் இந்தியா வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கிறது?. இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால், இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் R.N.ரவியின் செயல்பாடுகளை […]

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது

திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்தது. அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தகுழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி […]

ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை வளர்த்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கொள்கைகளை கடைப்பிடித்து இன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் […]

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு- பாடகி இரங்கல்

பழம்பெறும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார். எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் இறுதியில் தொடங்கினார். தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி, பின்னர் முழுநேர இசையமைப்பாளராக வளர்ந்தார்.1993-ம் ஆண்டு, ‘பைத்ருகம்’ மற்றும் ‘ஜனம்’ படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது […]

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்

சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது

CBSE 10,12-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9, 2026 வரை நடைபெற உள்ளன.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் உள்ளீட்டு அடையாளங்களை பதிவிட்டு மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் […]

6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு […]

புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி.  புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார்  தலைமையில்    அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர்  அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]

பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார் அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர போலீசாரால் […]

கன்னிவாடியில் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது.. ஐகோர்ட்

மதுரை -திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் வனவிலங்குகள் பயன்பெற்று வருவதால் அணையை இடிக்கக் கூடாது. வனத்துறையால் அணை சேதப்படுத்தப்பட்டிருப்பின் அதை மீண்டும் வனத்துறையே சீரமைத்து தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை இதற்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக பிப்.6 அன்று ஏவ முடியாவிட்டால், பிப்.7, 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் மாற்றுத் தேதிகளாக (Backup dates) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 10 […]

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? அமைச்சர் ரகுபதி விளக்கம்

தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், மத்திய பா.ஜ.க. […]

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற நபர் பலி- திருச்சியில் சம்பவம்

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலையில் இருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்குதிருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் […]

அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]

குப்பையில் கிடைத்த 45 பவுன்- துப்புரவு பணியாளரின் நேர்மை-தங்க செயின் வழங்கிய ரஜினி

சென்னையின் பரபரப்பான தி.நகர் பகுதியில், அன்றாடம் போலவே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணின் நேர்மை, இன்று தமிழகமே பேசும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. மனிதநேயத்துடன் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரியும் பத்மா, குப்பையோடு கிடந்த ஒரு கவருக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பதை கண்டுபிடித்தபோதும், அதை சொந்தமாக வைத்துக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், […]

விஜய் தன் சம்பளத்தை வௌிப்படையா கூறுவாரா?ஜெயக்குமார் கேள்வி

அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது.  யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் […]

விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்

விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் […]

விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான குரு பிறந்தநாள் விழாவை வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படையினர் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 65 ஆவது பிறந்தநாள் விழா குருவின் சமாதியில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கில் மாவீரன் மஞ்சள் படை ,வன்னியர் சங்கத்தினர், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் வந்து […]

கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார். மேலும், தந்தையின் […]

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு ‘தேசிய கல்விக் கொள்கை’ மற்றும் ‘மூன்று மொழிக் கொள்கையை’ ஏற்காததால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி […]

வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..

வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே, சாலையோரம் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன் பகுதி பேருந்துக்குள் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த குழந்தைகள் உட்பட […]

குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களைச் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 7 பேரைச் சிதம்பரம் நகர மற்றும் தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 260 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் […]

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்தி (19). இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி காவல் நிலையம் அருகே […]

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]

ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தரமான தளம் அமைத்து தர வேண்டும்.. கோரிக்கை

ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தமிழக அரசு தரமான தளம் அமைத்து தரவேண்டும் – தமிழக ஏரோஸ்கெட்டோபால்ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் கோரிக்கை மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு நாட்கள் 11 ஆவது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி சார்பில் திருச்சி, சிவகங்கை, நாமக்கல், […]

ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள காவலப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (35), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சபரிநாதன், கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து இந்தப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள […]

தவெக 3-வது ஆண்டு தொடக்க விழா: தொண்டர்களுடன் மேடையில் நடனமாடி அசத்திய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன. மேடையில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், விஜய்யை வாழ்த்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அவர் […]

எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, எச்.ராஜா எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், […]

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனியாக வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, திருமணமான நாள் முதலே நகை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு […]

ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம், ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணை ‘வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் மர்ம நபர் ஒருவர் இணைத்துள்ளார். அந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனப் பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் […]

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் 782 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஐ.டி. பூங்கா வளாகத்தில், வறண்டு போயிருந்த 33.43 ஏக்கர் பரப்பளவிலான நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சிப்காட் நிறுவனம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் […]

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரித்து வருவதால் குளிர் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை விட்டிருந்த நிலையில், மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் […]

விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

 விஜய் ஊழல்வாதியா இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? என்று திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என மீண்டும் கூறிய விஜய்க்கு திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தான் ஊழல்வாதி இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டு அதிமுகவை ஊழல்வாதி என சொல்லட்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஸ்மார்ட்போன் பேட்டரி வீல் சேர் தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனை தொடர்ந்து 2025-2026 நிதி ஆண்டிற்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை […]

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் […]

பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

இதுதொடர்பாக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற […]

நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்

நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. சிவமதி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் இருவரும் காதலை கைவிடாததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவமதி […]

கலெக்டரிடம் கலையரசிபட்டத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவிகளுக்கு “கலையரசிபட்டம்” வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மு.அருணா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது […]

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ

மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. முறையாக வழங்கப்படவில்லை. திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக- அதிமுக […]

தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளது.இந்த விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்ட திட்டமிட்டுள்ளது.அரசினர் கலைக் கல்லூரியில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்காமல் பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு ஆணையம் அரசு […]

கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலங்குடி வண்ணாரப்பேட்டை எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 […]

பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு-ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சின்னைய ம பாளையம் ,ஆலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மதுஷா என பெயரிட்டு இருந்தனர். இந்நிலையில் மதுஷா பிறந்து 40 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு குழந்தை, மனைவியுடன் சுரேஷ் திருவரங்கம் சன்னதி தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் […]

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.பிறகு சகுந்தலாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.

விலை உயர்வை பயன்படுத்தி தங்கத்தை விற்கும் மக்கள்

துபாய் உள்ளிட்ட நாடுகளில் விலை உயர்வை பயன்படுத்தி தங்க நகைகளை விற்று மக்கள் பணமாக்கி வருகின்றனர். வீடுகளில் உள்ள பழைய நகைகள், பரிசாக வந்த தங்க நகைகளை விற்று பணமாக்கி வருகின்றனர். தங்கம் விற்று கிடைக்கும் தொகையை நிலம் உள்ளிட்ட சொத்துகளில் முதலீடு செய்ய துபாய் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் – விஜய் ஸ்பீச்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 3ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் தலைவர் விஜய் உரையாற்றியபோது, “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். தொண்டர்களின் அர்ப்பணிப்பும், மக்களின் நம்பிக்கையும் தான் இந்த பயணத்தை இயல்பு தாண்டி வெற்றிகரமாக்கியுள்ளதாக அவர் […]

புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை நகரில்  மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி  சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர்  பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் நீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம்  மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் […]

திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து கேரளாவில் சாதாரண சைக்கிளை வாங்கிய ராகவன் தேசிய கொடிகளை கட்டி புறப்பட்டார். பொள்ளாச்சி வழியே தேசிய கொடியுடன் சென்ற ராகவனை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டு உற்சாகப்படுத்தினர். இது குறித்து ராகவன் கூறும் பொழுது.. […]

கழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி காரையூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பூத் வாரியாக கழக அரசின் சாதனைகளை மகளிர் அணியினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதிவீடுவீடாக சென்று மக்களிடம் விளக்கி கூறினார். அமைச்சருடன் திமுக மகளிர் அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நே.குட்டிவீரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி,துணைத்தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் அரசுஇளங்கோ, வீரப்பன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.

சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம்- முதல்வர்

பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை என சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றுகையில்; பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. brihade hotel […]

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது

68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில் ‘மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது […]

குளித்தலை அருகே தனியார் பஸ்-மினி பஸ் மோதி விபத்து.. 28 பேர் காயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை – மணப்பாறை சாலை வை.புதூர் பகுதியில், இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த மினி பேருந்தும், குளித்தலையில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண், 18 பெண்கள் 10 ஆண்கள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]

இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை”- முதல்வர் அறிவிப்பு

வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்​ர​வரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்​பாக்​கம் ஏகாம்​பர​நாதர் பள்ளி வளாகத்​தில் ‘அனைத்​துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்​தப்​படும். மேலும், வள்ளலார் நெறி​யாளர்​களின் […]

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. 1967-ல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் […]

‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது […]

லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான லித்தியம் -அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்ற பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மின்சார வாகனம் மற்றும் […]

பழனியில் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை தகவல்

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை உட்கட்டமைப்பிற்கு மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அடுத்த கட்டம் செல்வதற்கான சென்னை-பெங்களூரு, சென்னை-ஐதராபாத் […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் – 148 பேர், வெண்ணைமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 80 பேர், சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி – 8 பேர், கோடங்கிபட்டி ச க்தி நர்சிங் பெண்கள் […]

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி கோவை […]

குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ நீளத்திற்குத் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக இது கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் […]

வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர்- கோவை கலைஞர் அசத்தல்

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர் செய்து அசத்தி உள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா. கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணிகள் முடித்து திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிப்ரவரி மாதம் கட்டிடம் திறக்கப்படும் […]

எடப்பாடியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்-அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு .க. ஸ்டாலின். செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். […]

அதிமுகவை எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.. அமைச்சர் சிவசங்கர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய […]

வெண்ணைமலை முருகன் கோவில் தைப்பூச தேர்.. VSB பங்கேற்பு

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர், வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறார். இன்று காலை சுவாமிக்கு பால், தயிர், […]

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி காய்ச்சல், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு நல்லகண்ணுவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.950 குறைவு

ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.2024-ம் ஆண்டு […]

கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பகுதியில் கார் வந்தபோது, கணவரிடம் தனக்கு கார் ஓட்டக் கற்றுத்தருமாறு மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து, மனைவிக்குக் கணவர் கார் ஓட்டப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியின் போது, […]

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பாரத், இந்துஸ்தான் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, சென்னையில் வணிக […]

முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி […]

திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த கார், சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்களான தரணி, நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் […]

பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்கள் என மொத்தம் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாகக் […]

நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க, அடர்ந்த வனப்பகுதி மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் வழியாகப் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். வழக்கமாகக் கடும் குளிர் காரணமாகக் குளிர்காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த […]

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். பொதுவாக, பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பல காரணங்களால் பலரும் தங்கள் குழந்தைகளின் பெயரைச் சான்றிதழில் […]

கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். திடீரென காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 10 வார கர்ப்பமாக […]

இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று நபர் ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அமைச்சர் அளித்த உறுதியின் பேரில், முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துப் […]

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1, 2026) தைப்பூசம் மற்றும் வள்ளலார் (வடலூர் இராமலிங்கர்) நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல் பார்கள் (FL1 முதல் FL11 வரை) அனைத்துக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள […]

பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். வழியில் சேலத்தில் இருந்து வந்த மற்றொரு குழுவினருடன் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]

உலகின் நம்பர் 1வீராங்கனையை வீழ்த்தி ஆஸி சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி ரைபகினா ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார் எலினா ரைபகினா. 2023 ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் தோற்ற நிலையில் 2026ல் வென்று ரைபகினா சாதனை படைத்தார்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்

 இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

ஒரே நாளில் 85,000 குறைந்த வெள்ளி விலை-அப்போ தங்கம்..?

2025 ம் ஆண்டை போலவே 2026ம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஒரு சவரன் விலை விரைவில் ரூ. 2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். தங்கம் விலை நேற்று (ஜன 30) கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ. 15,850க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று […]

வினோத திருவிழா- சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்

ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி மற்றும் ஆந்திரா ஹால் ஆகிய பழங்குடியின கிராமங்களில், ஆண்டுதோறும் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோதத் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகளை வெட்டி, அவற்றை மாட்டுச் சாணத்தில் ஊறவைக்கின்றனர். திருவிழா நாளன்று, அந்தச் சாணக் கட்டைகளால் வாலிபர்கள் சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கிக் கொள்கின்றனர். இந்த விசித்திரமான சடங்கைக் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்தத் திருவிழாவில் தாக்குதலுக்கு உள்ளாகி […]

புதுகை- நாட்டுபடகு வலையில் சிக்கிய 7.5 கிலோவில் கொடுவாமீன்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி மீனவரின் நாட்டுப்படகு வலையில் கொடுவாமீன் ஒன்று சிக்கியது. அதன் எடை 7.5 கிலோவாம். அதனை அந்த மீனவர் கிலோ ரூ. 550வீதம் ரூ. 4,100 க்கு மீன் சந்தையில் விற்றுள்ளார். நாட்டுப் படகு மீனவர் வலையில் இவ்வளவு பெரிய மீன் பிடிபடுவது மிக அரிது என கூறப்பட்டது.

குடியரசு தலைவர் உரை- பெரம்பலூர் எம்பி அருண்நேரு ஆதங்கம்

ஜனாதிபதி உரையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, பெரம்பலூர் எம்பி அருண் நேருமக்களவை சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர்–நாமக்கல் மற்றும் அரியலூர்–பெரம்பலூர் ரெயில் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு தனித்துவமான மற்றும் அவசர நிதி ஒதுக்கீடு செய்வது; இதன் மூலம் பிராந்திய இணைப்பு வசதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மேம்பட வேண்டும்.மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைக்கவும், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மெகா வெங்காயம் […]

புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

புதுக்கோட்டை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது. அந்த முறையில்  இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்விற்கு 5574 மாணவர்கள் […]

125 நாள் வேலை- ஒன்றிய அரசின் நவயுக நாடகம்- எம்எல்ஏ சாடல்

125 நாள் வேலை என்பதுஒன்றிய அரசின் நவயுக நாடகம். எம்.சின்னதுரை எம்எல்ஏ சாடல். புதுக்கோட்டை, பிப் 01- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி 125 வேலை தருவோம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்வது நவயுக நாடகம் எனச் சாடினார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியும்,  விக்சித் பாரத்ஜீ ராம் ஜீ திட்டத்தை திரும்பப் […]

புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்

புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேலூரில் வைத்து புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் பெண்‌ ஏட்டு வீட்டில் திருடிச்சென்ற போதுசி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரை புதுக்கோட்டை க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் வாதங்களுக்கு மாறாக, அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வாக்கு வங்கியில் பலவீனமாகவே இருப்பதாக அவர் விமர்சித்தார்.  பாரதப் பிரதமர் வரும்போது கூட அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் பின்னால் இடம்பெறாதது ஏன்..?சொந்த முகத்திற்காக மக்கள் அவருக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா […]

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை 5:30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என, கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்

விருதுநகர், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளது.

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர், பின்னர் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கினர். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விழா குழுவினர் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர்.

புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைராஜன் தாயார் தமிழ்செல்வி வயது 65, இவர் மட்டும் இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து வீட்டினுள் தமிழ்செல்வி பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகன், […]

ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..!

விசிக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஏர்போர்ட் மூர்த்தியின் மனைவி ஜெய்குமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய […]

கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்

கோவையில் 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர் – நடுரோட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் – இலவசமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்த வாகன ஓட்டிகள் !!! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. கோவை, விளாங்குறிச்சி பிரதான […]

விஜயை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதி இல்லை -செங்ஸ்., பேட்டி

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து தெளிவான கருத்துகளை வெளியிட்டார். “விஜய் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. சட்டமன்றத் தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுக இயக்கம் தற்போது எடப்பாடி சொல்வது போன்ற நிலையில் இல்லை என்றும், போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயே என்றும் அவர் […]

தஞ்சையில் ஓய்வு நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் நுகர்வோர்கள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 9000 கருணை ஓய்வதையும் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியம் இல்லாததால் விவசாயிகளுக்காக தொடர்ந்து பாடுபட்டு வயது முதிர்வு காலத்தில் உயிர் வாழ […]

அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்த விஜய்!

தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களையும், திட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறினார். “இதுபோன்று நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்த விஜய், அரசியலில் தான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். […]

ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்குடியில் அரசு நலத்திட்ட […]

36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் […]

சிறை படத்திற்கு இணையான துல்கர் சல்மானின் ”சல்யூட்”

வார கடைசியில் “ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே”ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த ‘சல்யூட்’ ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி சண்டை, ஹீரோ எலிவேஷன் எல்லாம் இல்லாம, ஒரு போலீஸ் அதிகாரி மனசுக்குள்ள என்ன நடக்குது என்பதைக் காட்டுற படம்.சல்யூட் கதைஅரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) நேர்மையான போலீஸ் ஆபீசர். அண்ணனை பார்த்து தான் போலீஸ் ஆகணும்னு கனவு காண்றவன். ஆனால் ஒரு […]

தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக டெல்டா மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வருகிறது. ஏனென்றால் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் 17 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதிமுகவின் காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் வைத்திலிங்கம் […]

மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், கே.என்.பாஷா, மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது 42.8 கிலோ எடை இருந்த தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் போது 38 கிலோவாக குறைந்தது. […]

ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான மத்திய […]

நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என பழனியின் அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி அணியாய் நடந்து வந்தனர். அவ்வாறு வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் ஆடி வந்தனர். பழனி வந்த பின்பு […]

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி??? எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன?? இவரை இயக்கியவர் யார்?? நெல்லை […]

தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது

மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார். மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன். உட்பட இவரது உறவினர்கள் பலர் கோவை சின்ன தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களை அணுகிய மயில்சாமி தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாக […]

சிறுமி கர்ப்பம்… தஞ்சையில் 7 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அப்பு (எ) எஸ்.சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண்டியன் அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார். பின்னர் […]

கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா ஆகியோரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்.சென்னையைச் சேர்ந்த கெளதம் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் மோதியதில் இந்த […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55,000 விலை குறைந்து ரூ.3,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: புழல் சிறையில் உள்ள பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு […]

ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்தார்: “தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இந்தியாவில் எந்த மாநில அரசாலும் முடியாது. இனச் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் […]

சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது மனைவி வசந்தா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வசந்தாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிற்குள் தள்ளியது. தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த அந்தகும்பல், அங்கிருந்த விஜயகுமார், […]

உச்சத்தில் இருந்து சரிந்த தங்கம்: இன்றைய அதிரடி விலைக் குறைப்பு

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ‘கிடுகிடு’வென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,34,400 என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியது. இந்த அதீத விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று […]

பிப். 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

பிப்ரவரி 5-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகச் சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கி கடந்த 24-ஆம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் வரவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாக ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. ஒருவேளை தேதியில் மாற்றம் இருந்தால் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சபையை நடத்தவும் வாய்ப்புள்ளது. […]

15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரைவுப் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் 10 நாட்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை சுமார் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் […]

3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான முனிதா குமாரியின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து முனிதா குமாரியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், […]

“கோட்சே வாரிசுகளுக்குப் பாடம் புகட்டுவோம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காந்தியின் கொள்கைகளையும் அவரைப் படுகொலை செய்த சித்தாந்தத்தையும் ஒப்பிட்டுத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்து நிலைத்து வாழ்வார். மகாத்மாவின் புகழை மறைக்கவும், நாட்டைச் சீரழிக்கவும் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு வரும் காலங்களில் தக்க பாடம் புகட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். […]

தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ் சாலையில், தருமபுரி தடங்கம் நீதிமன்றம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதிச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் […]

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி (13.02.2026) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். விருது பட்டியல் […]

கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் […]

சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல் நாளில், சிராவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி – ப.ஜீவா நினைவு அரங்கம், குன்றக்குடி அடிகளார் சிலை மற்றும் காரைக்குடியில் கவியரசர் முடியரசனார் சிலை ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். இரண்டாம் நாளில், ரூ.61.78 கோடி மதிப்பிலான செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ரூ.100.45 […]

அரசுக்கு 4 அம்சக் கோரிக்கை: பிப்ரவரி 2 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் பிரபுசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதன் முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். […]

அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..

கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது. அப்போது, அதில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில், பெரிய பேக்குடன் அமர்ந்திருந்தார். அந்த பேக்கை திறந்து போலீசார் சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், தங்க கட்டிகளை கடத்தி வந்தது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த […]

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!

வாஷிங்டன் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பெரும் பொருளாதார சக்திகளை இணைத்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை தனது நலன்களுக்கு எதிரானதாக பார்க்கிறது என்பது அவரது கருத்தில் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் […]

எஸ்ஐ தேர்வு முடிகள் நிறுத்தி வைப்பு

நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலையில் தையல் போட்ட சமையல் ஊழியர்- புதுகை ஜிஎச்-ன் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ள அரசு மருத்துவமனை ஒரு தாலுகா மருத்துவமனை. ஆலங்குடி மற்றும் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது நீண்ட நாட்களாக இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற […]

விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் திட்டமிடாமல் சென்றதே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். “விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்த எடப்பாடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். விஜய் சிறந்த நடிகர் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி, “விஜய் […]

ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் […]

கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் அஜித் பெயரில் போலி அறிக்கை

தனது படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என அஜித் அறிவித்ததாக SM-ல் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மங்காத்தா ரீ-ரிலிஸ் கொண்டாட்டம் வருத்தம் அளிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டதாக வதந்தி கிளம்பியது. இந்நிலையில், இந்த அறிக்கை முற்றிலும் போலியானது எனவும், இதுபோன்ற புரளிகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் எனவும் அஜித் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிழவன்புதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 48 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு அதிக காரத்துடனும், உண்ணமுடியாத அளவிற்கு இருப்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பளியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர் கவிதா என்பவர்,மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை வீசி எறிவதாகவும், மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜன.18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன. 30 வரை நீட்டித்து […]

11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் இருக்கும்

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்த்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறியதாவது.. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை என்பது பொதுச்செயலாளர் முடிவு அல்ல, பொதுக்குழுவின் முடிவு. அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஓபிஎஸ்-ஐ நான் நீக்கவில்லை.. நீக்கியது பொதுக்குழு. விஜய் சிறந்த நடிகர். ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. ஓபிஎஸ் […]

15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்

தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் திடீர் மாயம் திருச்சி பொன்னகர் 6 -வது குறுக்கு சாலையைச் சேர்ந்த சீதாலட்சுமி (46), ராஜேந்திரன் தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (19).. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிஹரசுதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர். […]

துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது. விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந் நிலையில், எந்த பாகுபாடும் இருக்காது, […]

NDA கூட்டணியில் இணைய நாங்க தயார்?-ஈபிஎஸ் தயாரா?-ஓபிஎஸ்

சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், “இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்,” என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார். இன்று ஆலோசனை […]

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு […]

அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது.அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி […]

ரசிகர்களை கவர்ந்த சசிகுமார் பட ட்ரைலர் -எந்த படம் தெரியுமா

ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள ‘மை லார்ட்’ என்ற படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார். முனி பால்ராஜ் அரங்கம் அமைக்க, எம்.ஷெரீஃப் நடனப் பயிற்சி அளித்துள்ளார். பி.சி ஸ்டண்ட் குழு சண்டைக் காட்சி அமைத்துள்ளது. அம்பேத்குமார் வழங்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் […]

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. எனவே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தாங்கள் அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியிலேயே தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருவதோடு, மலையிலிருந்து கீழே இறங்க மறுத்து வருகின்றனர். அதே சமயம் தேயிலை தோட்டம் மூடப்பட்டுள்ளதாலும், […]

தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன் மூலம் ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பிரதமர் மோடியின் 2-வது மற்றும் 3-வது ஆட்சிக்காலங்களில் […]

UGC விதிகளில் புதிய மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் பதிவு!

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள் 2026 தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், பாகுபாடு மற்றும் அக்கறையின்மையால் சீரழிந்த உயர்கல்வி அமைப்பை சீரமைக்கும் வரவேற்கத்தக்க முயற்சியாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக பட்டியல், பழங்குடி மாணவர்களுக்கு எதிரான அநீதிகளை குறைக்கும் வகையில்.பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தென்னிந்திய […]

ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்-காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்திலிருந்து, திருச்சி வந்த MEMU ரயில் வந்து நின்று பின் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. அப்போது பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறிச் செல்ல முயன்றார். ரயில்வே தண்டவாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் பெண் பயணி நிலை (காப்பாற்றிய தலைமை காவலர்) தடுமாறி கீழே விழுவதை கண்டு திடீரென ஓடிச் சென்று தாங்கி அவரை ரயிலில் உள்ளே ஏற்றி விட்டார். இந்த சிசிடிவி […]

125 நாட்கள் வேலை உத்தரவாதம் அல்ல- ஒரு மாயை…ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “விக்சித் பாரத்-ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின் மூலம், கிராமப்புறத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார். தவறு, மாண்புமிகு குடியரசுத் தலைவரே! சமீபத்திய ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டம் பெற்ற 7வயது கோவை மாணவி

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி கோவையைச் சேர்ந்த செல்லின் கிறிஸ்டி ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டிதமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்கிறது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம். உலகில் இன்று வாழும் மொழிகளில் முதல் மொழியான […]

அதிக கட்டணம் வசூல்.. தனியார் பஸ்சை வழிமறித்து வக்கீல் போராட்டம்

கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நகர பேருந்து ஒன்றில் காந்திபுரம் பகுதியில் இருந்து உக்கடம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று […]

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறைத்து அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு 5% குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50% அல்லது 75 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேர்வு எழுதியவர்களுக்கும், மேலும் ஆசிரியர்களாகத் தொடர்வதற்குத் தகுதித் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

இன்று முதல் பிப்.,3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்

வானிலை மையம் வெயிட்ட அறிவிப்பில், 29-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03-02-2026: தமிழகம், புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்: இன்று வானம் […]

திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து

செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் மதியம் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளி ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் அடித்தார். ஆனால் திடீரென பிரேக் பழுதான […]

டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(57) என்பவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி (49), நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கம் […]

விருத்தாசலம்- தென் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1190 உயர்ந்து ரூ.16,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது ரூ.425க்கு விற்பனையாகிறது

தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும். மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி – மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் […]

17 ஆண்டுகள் வங்கிப் பணி… திடீர் பணிநீக்கம்: வங்கிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை

இலங்கையிலிருந்து அகதியாக வந்து தமிழகத்தில் வசிக்கும் திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக எஸ்பிஐ (SBI) வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் இந்திய குடிமகன் அல்ல என்ற காரணத்தைக் கூறி, வங்கி நிர்வாகம் அவரை திடீரென பணிநீக்கம் செய்தது.இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “மனுதாரர் தனது அகதி அடையாளத்தை மறைக்கவில்லை. இந்திய குடிமக்களுக்கு இணையான வாழ்வுரிமை அகதிகளுக்கும் உண்டு. 17 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அவரது […]

சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். […]

திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை வீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 26-ம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர்களுக்கு […]

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த இரு பயணிகளின் உடைமைகளைச் சோதித்தபோது, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களுக்குள் பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, சுமார் 10.7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்தப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த இரு பயணிகளையும் கைது செய்தனர். […]

திருவப்பூர் கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை  மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. சங்கத் தலைவர்  கண.மோகன் ராஜா தலைமை வகித்தார்.அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஏஆர். முகமது அப்துல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் புதுக்கோட்டை ச.பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார்.  சுபலட்சுமி முகாம் […]

“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?

ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு  சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி […]

பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

காங்கிரசை பிரித்து தவெகவில் சேர்க்க சிலருக்கு ஆசை- துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களுடைய ஆசை அதுவாக தான் உள்ளது அந்த ஆசை நிறைவேறாது என்பது தான் எனது கருத்து என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “இரண்டு மேம்பாலங்கள் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்டமாக திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு வரைபடங்கள் […]

தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு

தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகமாக மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகின்றன என விக்கிரவாண்டியில் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும் பதலளித்து விட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார். இதனிடையே நாளை பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனைக் நடத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை சென்று அங்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு தனது […]

விருத்தாசலம்-தென் அமெரிக்கா மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி பிரசாரம் செய்துள்ளேன். சிவகாசி மக்கள் இப்போதும் என்னை அன்பாக வரவேற்பதை காண முடிகிறது. தேர்தலில் வேண்டும் என்றால் நான் தோல்வி அடைந்திருக்கலாம். எம்பி தேர்தலில் கடுமையாக உழைத்தோம். இது மக்களாகிய உங்களுக்கு தெரியும். யார் வெற்றி பெற்றார் என்றும் தெரியும். எம்பி […]

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர். சட்டம் போன்று முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாயம் நெசவு தொழிலுக்கு அளிப்பது போன்று முடி திருத்தும் சிறு கடைகளுக்கு மின் கட்டண சலுகை அளிப்பதோடு, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமம் பெற சிறு கடைகளுக்கு […]

உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான்.. கரூரில் VSB நெகிழ்ச்சி பேச்சு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தமிழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

சட்டமன்ற தேர்தலில் நானும்-ராதிகாவும் போட்டியிடவில்லை… சரத்குமார்

பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ”வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். எனது கூட்டணி […]

ஆட்சிக்கு வந்து 4000 கோயில்களில் குடமுழுக்கு- முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023) 2 ஆயிரமாவது குடமுழுக்கு – மயிலாடுதுறை – கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)3 ஆயிரமாவது குடமுழுக்கு – நாகை – திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025) 4 ஆயிரமாவது குடமுழுக்கு – இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்… இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் […]

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு

டில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக அமைந்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாகவும், மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் ஏறத்தாழ 95 கோடி குடிமக்களை சென்றடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், வந்தே மாதரம் […]

ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் விற்பனை செய்ய முடிவெடுத்ததாக வாக்குமூலம். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பின்புறம் குடியிருப்புகளும், புதர்மண்டிய செடிகளும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சாரை, கட்டுவிரியன் உட்பட பலவகை பாம்புகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதும், அதனை கண்டு மாணவிகள் அலறி […]

சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பாமகவுடன் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியானதால் எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சாதிய, மதவாத கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற விசிகவின் கொள்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறிய திருமாவளவன், இந்த நிலைப்பாட்டில் மாறினால் தனது நம்பகத்தன்மை பாதிக்கப்படும் […]

புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி மீண்டும் கைது

புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறைக்குள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்ட கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் வெளியே வந்தார். ஜாமினில் வந்த ரவுடி புதூர் அப்புவை சிறையில் நடந்த மோதல் வழக்கில் போலீசார் சிறை வாயிலில் வைத்து கைது செய்தனர்.

அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் வெளிப்படுத்தினார். அரசியல் எல்லைகளைத் தாண்டி அஜித் பவார் மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.அஜித் பவார் ஒரு உண்மையான மக்கள் தலைவராகவும், மகாராஷ்டிரா மக்களின் […]

கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்- அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார். கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் […]

டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்

2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சோதித்துப் பார்க்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். இந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:00 […]

கரூர் கல்யாணவெங்கட்ரமண கோவில் கும்பாபிஷேகம்- VSB பங்கேற்பு

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா: தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசத்தினை சிவாச்சாரியார் மேலத்தலங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு […]

கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது […]

ஏடிஜிபி மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சென்னை ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற […]

தெரு நாய் கடித்து 12 பேர் காயம்…

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவக் கிராமத்தில் இன்று காலை திடீரென வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்றவர்கள் மற்றும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து கடித்தது. மணக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய், கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓடி ஓடி கடித்தது. இதனால் மக்கள் பயந்து கொண்டு சிதறி ஓடினர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். சிலருக்குக் கைகள் மற்றும் […]

லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கட்டிடப் பணிகளுக்காகச் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு (Pass) வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த ஒரு கும்பல், “அரசு […]

கரூர் கற்பக விநாயகர் கோவில் பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம். தை மாத கிருத்திகை முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி […]

திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை

திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் […]

தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வு

நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள், தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,025 ரூபாய்க்கும், சவரன், 1,20,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 375 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் குறைந்து, 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் சரிவடைந்து, 1,19,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 387 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, […]

குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரகுநாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரகுநாத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து […]

பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் […]

நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற லாரியும், அந்தச் சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் மீது சரக்கு வாகனம் […]

சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்

சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர். சேலம் சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ் (32), நேற்று மாலை தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோருடன் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் […]

தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை (28.1.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் […]

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (ஜனவரி 28, புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரவக்குறிச்சியில் ஆதவ்-ஐ கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

திருமாவளவனை அவமதித்த விவகாரம் – அரவக்குறிச்சியில் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாவை அடக்காவிட்டால் நாவை துண்டாக்குவோம் என கோஷமிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக முழக்கங்களை […]

வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போதே வெறி பிடித்து சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த சௌராபானு […]

தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என அமைச்சர் நேரு தவெக தலைவர் விஜய்யை சாடிய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த […]

இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:- தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய […]

குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை- முதல்வர் அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2026) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2024-25ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை […]

தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் […]

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டபுள் எஞ்சின் அல்ல- டப்பா எஞ்சின்”- NDA கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் என வலியுறுத்திப் பேசினார். பிரதமரின் இந்த கருத்துக்கு அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கரூர் மாநகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் மனோகரா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டியில் ரயில் எஞ்சின் மீது பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக […]

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது.. திருமா.,

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தி படித்திருந்தால் நாமும் மோடியின் வித்தைக்கு மயங்கி இருப்போம். இந்தியை தாய் மொழியாகக் கொண்ட பலர் தமிழ்நாட்டில் வேலைக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாமல் போனதற்கு நாம் இந்தி படிக்காததுதான் காரணம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்- எம்பி கனிமொழி

தஞ்சையில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் […]

முகம் தெரியாதவர்களுக்கு ஏன் பதில் அளிக்கனும்- நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். அதை நான் […]

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. மன்னார்குடி உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தார்

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள். […]

தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் […]

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை காரணமாக திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பராமரிப்பு அறைக்கு வந்தார். வேலைக்கு ஆட்கள் வந்த போது சதீஷ்குமார் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]

குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு

குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக குதிரை, கழுதை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமணத்துக்காக பொருட்களை சுமப்பதற்காக பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும். குதிரை வளர்க்கும் நிறுவனங்களும் குதிரையை […]

பாமக விருப்பமனு கொடுத்த நபர்களிடம் அன்புமணி நேர்காணல்

பாமக கட்சியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்த நபர்களுடன் இன்று பனையூரில் அன்புமணி நேர்காணல் நேர்காணலில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு அன்புமணி வந்தடைந்தார் இந்த நேர்காணலில் பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகளும் உடன் இருக்கின்றனர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்தில் கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்கள் கொடுத்தனர். விருப்பமனு கொடுத்தவர்களை […]

விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்த போது, அங்கு கேட் மீது வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் எதிர்பாராவிதமாக குழந்தை ஹாபியா தஸ்கீன் தலை மீது விழுந்து சிறுமி படுகாயம்டைந்தார். உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை […]

கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தார். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரனால் எங்கள் கூட்டணிக்கு வர முடியவில்லை. தினகரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை குறித்து என்னால் கூற இயலாது, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். டிடிவி தினகரன் ஒரு நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். […]

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை அந்த சாலையில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார்.  ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள வங்கி வளாகம் பகுதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு […]

மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மற்ற அதிகாரிகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்கு, திடீரென கடுமையான மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த […]

5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எல்ஐசி, ஆர்பிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் […]

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- VSB துவக்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 18 பள்ளி, கல்லூரியில் இருந்து வந்திருந்த சுமார் 2,000 மாணவ-மாணவிகள், “தலைக்கவசம் அணிவோம், உயிர் காப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் மாநகரின் […]

தேர்தலில் போட்டியில்லை…என் தனி விருப்பம்.. டிடிவி பேட்டி

தவெகவுக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தது என்று தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். செங்கோட்டையன் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார் என செங்கோட்டையன் கூறிய நிலையில் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் […]

பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக, உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டின் அனைத்து வயது பெண்களையும் உள்ளடக்கிய,’தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை (TNWESafe) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் 14 […]

காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் கடைகள், பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைப்பதும், பொருட்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த இரண்டு கரடிகள் சாலையோரம் இருந்த குப்பை […]

நேரடியாக பேசினால் பதிலடி-விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அதிமுகவை “ஊழல் சக்தி” என்று நேரடியாக விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங் உடனடியாக பதிலடி கொடுத்து, “நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், விஜய்யின் விமர்சனத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இது அதிமுகவின் உள் சூழலை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. ஜெயக்குமார் […]

ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வரை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மகாலிங்கம் மற்றும் ஓட்டுநர் ஜெயக்குமார் இருவரும் ஓய்வறையில் தங்கி இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மொபைல் போன்கள் மற்றும் […]

அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி

கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், […]

பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே சீருடையில் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தது முளைப்பாரி விழாவில் மேளத்தாலங்குடன் குதிரை ஆட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பின்னர் முளைப்பாரி கோவிலில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான […]

ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 33 நிகழ்ச்சிகளில் பங்கேற்று செந்தில்பாலாஜியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை துவங்கி வைத்து வருகிறார். அதன் பகுதிகளான காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம், கவுண்டாயூர் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில், காவிரி குடிநீர் விநியோகம், காதப்பாறை ஊராட்சி, கவுண்டாயூர் பகுதியில், 1 […]

35 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவ-மாணவிகளின் திருச்சியில் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் படைகலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவ மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் […]

பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் […]

பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்

சென்னை புறநகர் பகுதியில் இன்று (27ம் தேதி) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், […]

பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…

பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.

ரேசன் கடையில் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாங்கிய காருக்கே வரி கட்டாத விஜய் ஊழல் பற்றி பேசலாமா?-கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர். இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. பாஜகவை நம்பி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸை, நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளனர். அவருடைய நிலை கவலைக்குரியதாக உள்ளது. சசிகலாவிற்கு எடப்பாடி துரோகம் செய்ததைப் போல, ஓபிஎஸ்சிடம் இருந்த பலரும் இபிஎஸ்சிடம் சென்றுவிட்டனர். முக்குலத்தோர் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்துகிறது. டிடிவி […]

புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் சிங்கவால் குரங்கு.. மனதை உருக்கும் நிகழ்வு

கோவை, பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை வனப்பகுதியை விட்டு பகல் நேரங்களிலேயே உணவைத் தேடி குரங்குகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் என அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையில் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது எதிரே வரும் வாகனங்களில் சில நேரம் குரங்குகள் விபத்துக்குள் […]

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது 23 என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்து இருவருக்கும் மாறி மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தோணி தனது மனைவி பாக்கியத்தாயிடம் உனது அப்பா வீட்டிற்கு […]

முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.

திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10, 000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் […]

டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் சுட சுட மட்டன் பிரியாணி

தஞ்சையில் நடைபெறும் திமுக வின் டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வழங்க மட்டன் பிரியாணி சிக்கன் 65 தனி தனியாக ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை நடைபெறுகிறது. இதில் தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 46 சட்டமன்ற தொகுதியிலிருந்து ஒரு லட்சத்து […]

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

ராஜஸ்தானில் பத்தாயிரம் கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆளில்லாத பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 187 பைகளில் நிரப்பப்பட்ட 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 9 பெட்டிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டிகள் ஃப்யூஸ் வயர்கள் இருந்தன. மேலும் குண்டு வெடிக்கச் […]

விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால் 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது.அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் […]

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45 வயது) என்பவர் 24.1.2026 அன்று இரவு கட்டடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் […]

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26-01-2026 மற்றும் 27-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச […]

நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது… செல்லூர் ராஜூ

நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள்; விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், […]

வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி

 தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். “என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறிய அவர், அவர்களை அமைச்சரவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைச்சரவை பதவிக்காக எவருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அமமுகவின் […]

சீண்டிய விஜய்-பதிலடி கொடுத்த அதிமுக!

சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய […]

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல், அவருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சட்டசபையில் உரையாற்றாமல், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார். எனவே, கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் தேநீர் விருந்தை […]

புதுகை- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்குபொன்னாடை அணிவித்து கெளரவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், […]

எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் நடிகர் வாசு விக்ரம் உள்ளிட்ட கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .மேடையில் பேசிய சுப வீரபாண்டியன் பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகிகள் குறித்து திரைப்படத்தில் சித்தரித்தது குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.மேலும் மொழிப்போர் தியாகிகளின் உறவினர்களையும் மொழிப்போருக்காக […]

தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்

நாட்டின் 77-வது குடியரசு  தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இதில் கோவையில் […]

தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் அருட்தந்தை முனைவர் அ. ஜான் சக்கரியாஸ் எ ன்.சி.சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பின் தேசியக்கொடியை பறக்கவைத்துச் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை ம. ஆரோன் வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய அளவில் மத்தியப் பிரதேசத்தில் போபாலில் நடைபெற்ற, […]

வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் பத்தாயிரம் பேர் திமுகவில் இணைகின்றனர். .அதிமுகவில் உள்ள மற்ற அதிர்ச்சியாளர்களையும் திமுகவில் இணைக்கும் பணியில் வைத்திலிங்கம் மும்முரமாக இறங்கி உள்ளாராம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி […]

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்- உதயநிதி பேச்சு

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர் பேசியதாவது: உலக வரலாற்றில் தாய்மொழியை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மட்டுமே […]

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர் […]

புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.375க்கு விற்பனை செய்யப்படுகிறது

77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,50,000 லட்சம் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 📌3000+ பேருந்து வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்துடன் 120 ஏக்கர் அளவில் நிகழ்ச்சி நடைபெறும் திடல் அமைந்துள்ளது. 📌ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை […]

மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது

மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பனையூர் பண்ணையார்தனம் செல்லாது!” – கரூர் விபத்தை முன்வைத்து விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயற்குழு கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக தரப்பு தற்பொழுது அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், விஜய்யின் அரசியல் அணுகுமுறை மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கிளிசரின் கண்ணீரும் சுய விளம்பரமும்:சமீபத்தில் கரூரில் தவெக மாநாட்டுப் பணிகளின் போது உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் […]

கல்லூரி பேராசிரியை தற்கொலை

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

ஊட்டியில் கஞ்சா விற்ற போலீஸ்காரர் அதிரடி கைது: எஸ்பி நிஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நசீர் அகமது (26), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், குரூஸ் என்பவர் கஞ்சா விற்றதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் நசீர் அகமதுவுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த நசீர் அகமது தலைமறைவான நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் கோவையில் வைத்து […]

77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற அஜித்குமார், மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அஜித்குமார், போதையில் அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் அங்கிருந்து […]

ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக் கண்ணாடி கதவு மற்றும் வெளிப்புற ஷட்டர் ஆகியவற்றை முழுமையாகப் பூட்டாமல், வெறும் மூடிவிட்டு மட்டும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு, கல்லாப்பெட்டியில் இருந்த வசூல் தொகையான 2 லட்சத்து 3 ஆயிரத்து […]

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். சிகிச்சையை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது, பீரோவில் […]

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாகக் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் […]

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, தமிழக […]

திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, வரும் ஜனவரி 28-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பிரசன்ன வெங்கடேஷ், தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு […]

யுவனை மிரள வைத்த ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்

அஜித் கரியரில் முக்கியமான படமான ‘மங்காத்தா’ நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய படத்தை போல கொண்டாடப்படும் ‘மங்காத்தா’ வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்துக்கான கொண்டாட்டம் வெறித்தனமாக உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றியது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தகுதியான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நாடு முழுவதும் 11 […]

ஒரு வயது குழந்தை கடத்தி விற்பனை… 6 பேர் கைது..

திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெயஸ்ரீ காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தனது குடிசை அருகே தங்கியிருந்த வேலூர் தம்பதியையும் காணவில்லை என்பதால் சுசித்ராவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையில்; சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் […]

சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

இயற்கை ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார் ஓவியக் கலைஞரும் நடிகருமான சிவக்குமார் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏழு நாட்கள் நடைபெறும் (சித்திர தேரோட்டம் என்ற தலைப்பில்) இயற்கை ஓவியக் கண்காட்சியினை பிரபல ஓவியரும், அன்னை காமாட்சி இசை கல்லூரியின் முதல்வரும் வெங்கடாசலபதி மற்றும் திரைப்பட நடிகரும் ஓவியக் கலைஞருமான சிவகுமார் துவக்கி வைத்தார். புகழ்பெற்ற ஓவியர்கள் வசுமதி, முருகேசன், அன்னபூர்ணா,ரங்கராஜன் கலைஞர்கள் வரைந்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 22 ஆம் […]

பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்

பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை […]

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் […]

ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது அனைத்துவித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கும் பொருந்தும் என்றும், 65 லட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி

சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் […]

ரூ.50,000 செலுத்தி மநீம விருப்ப மனு பெறலாம்

கமல் தலைமையில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்தது மநீம. ரூ. 50,000 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 5 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்தது மநீம கூட்டத்தில் தீர்மானம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மாற்றங்களை கண்டித்து மநீம கூட்டத்தில் தீர்மானம். […]

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம்

ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கரூரில் நடைபெற்றதமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு கரூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் செயல் அறிக்கை வாசித்தார். மேலும் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து […]

எனக்கு யாரும் போட்டி இல்லை- சீமான் ஓபன் டாக்!

 நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றும் கடுமையாக விமர்சித்தார்.“எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு” என்று சீமான் கூறினார். தற்போது நடக்கும் கூட்டணி […]

பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட சமூகநல அலுவலர் மே.சியாமளா, மாவட்ட திட்ட அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணைவட்டாட்சியர் லெட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் […]

ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 1600 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்நத நிலையில் மேலும் 1040 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 1600 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் 130 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் […]

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை […]

வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க […]

ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் இருந்த மர்மபொருள் வெடித்ததில் சரக்கு ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளது. அமிர்தசரஸ் – டெல்லி வழித்தடத்தில் மர்மபொருள் வெடித்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதியா என விசாரணை நடைபெற்று வருகிறது. மர்மபொருள் வெடித்த நிலையில் அதில் […]

ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க, புதியதாக பொதுமக்கள் வசதிக்காகவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடும், மொபைல் டேட்டா டெர்மினல் (எம்டிடீ) டிவைஸ் பொருத்தப்பட்ட நவீன தொழில்நுட்படம் அடங்கிய, 9 இருசக்கர வாகனங்கள் […]

700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

 விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால் கைவிடப்பட்ட விமான சேவைகள் 2026 ஜனவரி-மார்ச் காலத்துக்கு உட்பட்டது. இண்டிகோ கைவிட்ட உள்நாட்டு சேவைகளை பெற மற்ற விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டில் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த திட்டம்

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பாஜகவையோ மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை என்றும், அச்சம் காரணமாக அவர்கள் கூட்டணியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்துள்ளார். திருமாவளவன் மேலும் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதற்குப் பொருள் […]

தேனிக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார். அங்கு இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்தாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி நவீன் சக்கரவர்த்தி அவரது நண்பர் பிரதீப் ஆகியோர் சாய்பாபா காலனி, பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு என்று […]

கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடற்பசு, டால்பின் மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை புகைப்படங்கள்,கடல்வாழ் உயிரினங்கள் […]

X-தளத்தில் Cover photoவை மாற்றினார் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]

ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்

மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். ஆர்.தர்மருக்கு கடந்த முறை ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த நவாஸ்கனி, தி.மு.க. கூட்டணியில் மக்களவை எம்.பி.யாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.தர்மர், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக வருவது […]

தமிழ்நாட்டில் NDA கூட்டணி முழு வடிவம் பெறவில்லை- பிரேமலதா

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”, என்று இவ்வாறு தெரிவித்தார்.

கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரையாற்றினார். அதில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ…” தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை அனைத்து வீடுகளும் பார்க்கின்றன. 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு […]

28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை ஆகிய பரிகார பூஜைகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக (Clerk) பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பட்டா பெயர் மாற்றத்திற்காக அணுகிய ஒரு நபரிடம், ஹரிஹரன் 7,000 ரூபாய் லஞ்சம் […]

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் மற்றும் திருத்தணி சுற்று வட்டாரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் […]

எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்… முதல்வர் நம்பிக்கை

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்,” இவ்வாறு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு

 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைன் உல்லாசத்திற்கு ஆசை காட்டி மோசடி: ராமநாதபுரம் இளம்பெண் சிக்கினார்

சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்து, வாலிபர்களிடம் பணம் பறித்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைச் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலி ஐ.டி-களை உருவாக்கி அதில் ஆபாசமான விளம்பரங்களைச் செய்துள்ளார். அதில் ஒரு வாட்ஸ்அப் எண்ணைக் குறிப்பிட்டு, “உங்களுக்குப் பிடித்த வயதுடைய இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம், ஆபாச வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யலாம்” என ஆசைவார்த்தை […]

சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், அவருக்குப் பல்வேறு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த டிசம்பர் 27-ம் தேதி சங்கருக்கு […]

எடப்பாடிக்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறி” – வைகோ

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சூரியன் எப்போதும் மறையாது என்றும், திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் […]

மோடி சென்னை வந்தவுடன் சூரியன் மறைந்துபோனது” – நயினார் நாகேந்திரன்

மதுராந்தகத்தில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கான வேலைகளை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் அல்ல, ஒரு மாநாடு. இந்த கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிக்கும் கூட்டம். திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவு […]

டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்

இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும் பாதிக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு மோடி தீர்வும் கொடுக்கவில்லை; வாய் திறக்கவும் இல்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார். 4.5 கோடி வேலை இழப்பு, லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. “மோடி! நீங்கள்தான் இதற்கு பொறுப்பு; இந்த […]

ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

‘AK 64’ அப்டேட் சொன்ன ஆதிக்

*நாளை காலை 11 மணிக்கு ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது *அஜித்தின் ‘AK64′ பட ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார் *சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் ‘அரசன்’ படத்தின் 2-வது செட்யூலில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவுள்ளார் *’GOAT’ படத்தின் ‘விசில் போடு’ பாடல், 100 மில்லியன் பார்வைகளை நெருங்கி, டிரெண்டிங்கில் உள்ளது.

அண்ணன் ஈபிஎஸ்-ஐ முழு மனதாக ஏற்கிறோம்.. டிடிவி பேச்சு

NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் EPS என TTV கூறியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், ‘அண்ணன்’ EPS-ஐ முழு மனதார ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் அம்மாவின் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆட்சியை கொண்டு வர அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.

திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு- அன்புமணி கடும் தாக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி […]

திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]

கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”- கிருஷ்ணசாமி

கோவையில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்த தகவல்களிக்கு விளக்கம் தந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆண்டு, சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவும்,ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் திட்டமிடும் என தெரிவித்த அவர், மதுரை மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம் என […]

காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை

சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி உயிரிழந்தார். இவர்களது மகள் சோலை ராணி( வயது 19) சிவகாசியிலிருந்து திருப்பிலிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை சோலை ராணி காதலித்து வந்ததாகவும், இதனை […]

100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்… முதல்வர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம்;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி […]

சிறுவன் கொலை-கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் […]

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் -சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த […]

மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு

ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி வருகிறது

3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி

காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

புதுகை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்ம.தீபாசங்கரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.க.பாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலர்எஸ். கணேசலிங்கம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்த. நந்தகுமார் , விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கவர்னர் பதவியை ரத்து செய்ய வேண்டும்- மதிமுக மா.செ.கூட்டத்தில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]

அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்

அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் […]

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் முப்பெரும் அம்பிகை ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியில், ஜவ்வாது மலை சந்தன மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள முப்பெரும் அம்பிகைகளான ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ நொண்டி மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறப்பாக […]

தேமுதிக, தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..? சரத்குமார் மழுப்பல் பதில்

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், “பாரதிய ஜனதா […]

தைப்பூச திருவிழா.. சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கொடியேற்றம்

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 […]

திருட்டுபோன 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை எஸ்பி

தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தமிழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமும் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. காவல்துறையினர் நவீன தொழிநுட்பம் மூலம் ஐ.எம்.ஈ எண் மூலம் செல்போன் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து மீட்டு, செல்போன் […]

ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கே.வேலவன் (34). 8ம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த 04.01.2026ல் கவிதா என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் […]

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு.. கலெக்டருக்கு 25ம் தேதி விருது

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதில் சிறந்த தேர்தல் மாவட்டங்கள் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கௌரவிக்கிறது அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 14 மாவட்டங்கள் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இதில் தேர்தல்களின் தொழில்நுட்பத்தை திறமைப்பட பயன்படுத்துதல் […]

யாருடன் கூட்டணி… தை முடிவதற்குள் அறிவிப்பேன்- ஓபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை மாதம் முடிவதற்குள் முடிவு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாளை மநீம செயற்குழு கூட்டம்… கமல் அறிவிப்பு..

மநீம கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் வௌக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.”இவ்வாறு […]

விஜய் விசில் சின்னம்- ஒரு வருடத்திற்கு முன்பே சொன்னேன்.. நடிகை கஸ்தூரி

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்திருந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.இந்த நிலையில், மோகன் ஜியின் திரெளபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த […]

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

தேர்தல் சீசனில் மட்டும் மோடியின் சீன்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தநிலையில் தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. தேர்தல் சீசன் […]

இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளன- தேர்தல் ஆணையம்

அதிமுக தலைமை விவகாரம், இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இரட்டை இலை அதிமுக பெயர், கொடி பயன்படுத்துவது தொடர்பாக பலரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

500 போட்டியில் சாதனை படைத்த பேட்மிண்டன் பி.வி.சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது 500-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டென்மார்க்கின் லைன் கியர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், சர்வதேச மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைக் குவித்த […]

அமமுகவை 8 ஆண்டுகாலம் வளர்த்ததற்கு அர்த்தமே இல்லை… மாணிக்கராஜா பேட்டி

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கினார். அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கியுள்ளார்.ஆன்லைன் சந்தா மேலும் இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், […]

காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு

சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் மோகன்ராஜ் (27) என்பவர், தன்னை சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், மோகன்ராஜ் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் […]

அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]

விசில் ஊதி என்ன பயன்?- பிரவீன் சக்ரவர்த்திக்கு மீண்டும் காங். நிர்வாகி கண்டனம்

காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் பாராட்டி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த செயல்பாடு தமிழக காங்கிரசில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காங்கிரசின் முன்னாள் மாவட்ட […]

லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு தினேஷ் நடிக்கும் படம்…

யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிக்க, இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ள கமர்ஷியல் படம், ‘கருப்பு பல்சர்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் ராஜேஷ்.எம் படங்களில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றிய முரளி கிரிஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மதுரையில் கருப்பு காளையுடன் வசிக்கும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் ஒரு இளைஞன், திடீரென்று நேரில் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி […]

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்

அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்நிலையில் […]

உடன்குடியில் பயங்கரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – கள்ளக்காதலனின் பகீர் வாக்குமூலம்!

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் இசக்கிராஜ். தொழிலாளியான இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணைப் பார்க்க அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தபோது, அங்கு தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் இசக்கிராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்குக் […]

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் பெற்றோர் தேடியபோது, சிறுவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து […]

திருச்சி – சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் அதிகரிப்பு

திருச்சி மற்றும் சென்னை இடையே கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தினமும் 2 சேவைகளாகக் குறைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவைகள், தற்போது 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 7.10, 10.10 மற்றும் மதியம் 2.35, மாலை 5.25 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 7.35, 10.35 மற்றும் மதியம் 2.55, மாலை 5.55 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் […]

நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜக கூட்டணி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]

மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி காலனியைச் சேர்ந்த விஜய் (33), தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மளிகைக் கடையைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து அவர் கடைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செட்டிக்குறிச்சி இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. […]

மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி, பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளான மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது. இனியும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம் உருக்குலைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்-முதல்வர் ஸ்டாலின் மடல்

வீரவணக்கம்… வெற்றி முழக்கம்! என்ற தலைப்பில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் […]

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]

NDA கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட திட்டம்- பூவை ஜெகன் மூர்த்தி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். இந்த முறை NDA கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் பாஜக – பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து […]

முள்ளகாடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணி-முதல்வர் அடிக்கல்..

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில் 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை […]

போதையில் அட்ராசிட்டி-3 சக்கரத்துடன் ஓடிய சொகுசு கார்

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மது போதையில் தனது சொகுசு காரை கோவையிலிருந்து காரமடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது. ஆனால், போதையில் இருந்த செந்தில் சக்கரம் கழன்றதைக் கூட உணராமல், 3 சக்கரங்களுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே […]

புதுச்சேரியில் இருந்து 300 மதுபாட்டில் கடத்தல்.. விழுப்புரத்தில் 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி, அவற்றை நாமக்கல்லில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை விழுப்புரம் மாவட்டப் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியில், போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக நாமக்கல் நோக்கிச் சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். காரின் பின் இருக்கை மற்றும் ரகசிய அறைகளில் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் 24 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா – புதிய நீதிக்கட்சி இணைந்ததாக அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று எடப்பாடி இல்லாமலேயே டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்த்தார் பியூஷ் கோயல். கூட்டணிக்கு எடப்பாடி தலைமை வகித்தாலும் அவரை ஓரங்கட்டி விட்டு புதிய கட்சிகளை பாஜகவே சேர்த்து வருகிறது. கூட்டணியில் கட்சிகள் சேரும் நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமி இல்லாததால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஜி.கே.வாசன் சந்தித்தனர்.

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ. 167 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கினைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 60 கோடி […]

சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- பேரவையில் அமைச்சர்கள் தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு : ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக உள்ளது அமைச்சர் […]

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம். 2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து […]

கவிஞர் வைரமுத்தை நோக்கி காலணி வீச்சு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

காசா, உக்ரைன் உதவிக்கு $5 பில்லியன் – அமெரிக்காவுக்கு புதின் பதிலடி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாலஸ்தீன மக்களின் முழு உரிமைகளும் உறுதி செய்யப்படும் வரை ரஷ்யா எந்தவொரு சர்வதேச குழுவிலும் சேராது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. புடின், பாலஸ்தீனத்தின் இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வரை எந்த கூட்டணியிலும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணிகளுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், […]

மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் – ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு […]

நெருங்கும் 2026 தேர்தல்- இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முக்கிய நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொகுதி பங்கீடு, கூட்டணி உத்திகள், தேர்தல் தயாரிப்பு ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. பாஜகவின் மேலிட தலைமையின் ஆதரவுடன் அதிமுகவின் தலைமை தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் […]

மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி கவர்னருக்கு இல்லை- அமைச்சர் கோவி.செழியன் காட்டம்

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் […]

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ம் தேதி 4வது சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிறு, 26ம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27ல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்கோரியா அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

ஐரோப்பிய நாடான பல்கோரியா அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் அதிகரித்த நிலையில் பல்கேரியா அதிபர் பதவி விலககியுள்ளார். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ராதேவ், இப்போது முறைப்படி பதவியில் இருந்து விலகியுள்ளார். பல்கேரியாவில் கம்யூனிஸ ஆட்சி மறைந்து ஜனநாயகம் […]

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், செல்போனில் அதிக நேரம் செலவழித்த அந்த சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, ஓடும் மின்சார ரெயிலில் வைத்து அந்த சிறுவன், சிறுமிக்கு […]

மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு […]

கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் எந்த அளவு நிறைவடைந்துள்ளது எத்தனை நாட்களில் பணிகள் நிறைவடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடமும் பொறியாளரிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் […]

நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என, வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுதும் […]

தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்தியேக வார்டுகளை அமைக்க உத்தரவு. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தல். நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் வீடுதோறும் கொசு உற்பத்தியை […]

ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ‘ட்ரக் தமிழ்நாடு’ (TReK Tamil Nadu) மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (TFC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு […]

கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முழுமையடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் […]

பராமரிப்பு பணி: பதிவுத்துறை இணையதளம் முடக்கம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு

தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை [https://tnreginet. gov.in] என்ற இணையதளம் செயல்படாது. இருப்பினும், அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 22) […]

நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரித்திவ்ராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட களஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு அருகே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டை கண்டுபிடித்தார். அந்த கல்வெட்டு தூணின் ஒரு புறத்தில் சங்கு மற்றும் சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்பகுதியில் தற்காலத் […]

திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவிலான வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பொருட்களுக்கு 3 சதவீத வருமான வரி மற்றும் […]

பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பாதுகாப்பு […]

இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு- ஒப்பந்த பணி துவக்கம்

இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான நீர் பகிர்வை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தம், சுமார் 63 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய ஒரு கிளர்ச்சியைத் தொடர்ந்து நிலவும் பதட்டமான உறவுகளுக்கு மத்தியில், இருதரப்பு உறவுகளைச் சோதிக்கக்கூடிய ஒரு முக்கியமான நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இந்தியா […]

வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு […]

பிரதமர் 100 முறை வந்தாலும்.. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்… செல்வபெருந்தகை

பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NDAவில் டிடிவி இணைந்தது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,”NDA கூட்டணி இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என […]

புதுகையில் காமராஜர் சிலைக்கு பெனட் அந்தோணி ராஜ் மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள பெனட் அந்தோணி ராஜ் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ,ராமசுப்புராம், மற்றும் துரைதிவ்வியநாதன்,சூர்யாபழனியப்பன்,மதன் கண்ணன் மற்றும் ஏராளமான காங்கிரசார் உள்ளனர்.

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலம், துர்வோலு (துருவோலு) கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா மற்றும் கொண்டம்மா தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலைக்காக தெனாலி நகரத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரியாக இருந்த கணேஷ் என்ற நபருடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் பின்னர் தவறான உறவாக (கள்ளக்காதலாக) மாறியது. இந்த […]

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சுஹாசினி நடிக்கும் “அனந்தா”

தற்போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு ஓய்வின்றி உழைக்கிறார். மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கடவுளை வெறுக்கிறார். நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலத்துக்கு காலில் அடிபட்டு, நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார். இதனால், அவரது தந்தை ‘தலைவாசல்’ விஜய் கடவுளை திட்டுகிறார். மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர் கைவிரித்த நிலையில், அவனது உயிரை காப்பாற்ற சுஹாசினி துடிக்கிறார். அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கிய வீட்டில் இருவர் […]

நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் இருந்த வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் தப்பியுள்ளார். நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணி சபரிவாசன் நாய் கடித்ததை வீட்டில் […]

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

ஒரு டாலர் 91 ரூபாய் 28 காசுகள் என்ற அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. காலையில் ஒரு டாலர் ரூ.91.05 என்ற அளவில் தொடங்கிய ரூபாயின் மாற்று மதிப்பு சிறிது நேரத்தில் 31 காசுகள் சரிந்தன. புதுப்புது நாடுகளைக் கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிவருவதால் உலக அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து […]

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். […]

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு கடல்வாழ் உயிரினங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். அதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிமீ தொலைவுக்கு ஆங்காங்கே சுமார் 15 கிலோ வரை எடையிலான 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் […]

மீண்டும் இணைந்த கரங்கள்… அண்ணாமலை ‘X’ பதிவு.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X- தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் […]

தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி […]

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற […]

சமையல் மாஸ்டர் குடிபோதையில் வெட்டிக் கொலை- கோவையில் சம்பவம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பவர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த […]

தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவியை வழங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பணியாளர்கள் “ஒரு சிறிய மின்சாரக் கோளாறை” கண்டறிந்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றொரு விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானத்தில் தனது பயனத்தை […]

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (21-01-2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு […]

ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 […]

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்கு நேரமாகிறது, என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, டிக்கெட் கவுண்டரைத் தாண்டிக் குதித்து வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்து கொண்டார்.அந்த இளைஞரின் விசித்திரமான செயலால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ […]

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலாளர் கல்யாணியை உடன் பணியாற்றியவரே கொன்றதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தீ விபத்து என நாடகமாடிய நிலையில் கொலை என்பதை கண்டுபிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள R.R. நகரில் அழகு நிலையம் லேப்டாப் விற்பனை நிலையம் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் ரிதம் ஹோம் தியேட்டர் […]

கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசலாற்றில் குழந்தை ஒன்று மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து […]

கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டார். இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ரமேஷ், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக சரிவு; நீர் இருப்பு 59.995 டி.எம்.சி.யாக உள்ளது.

எச்சரிக்கை பதிவு-ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய வாலிபர்

வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (65). கணவர் மறைந்த நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி, ஏரிக்கரையோரம் உள்ள தனது மாட்டு கொட்டகைக்குச் சென்ற பவுனம்மாள், அங்கு மர்மமான முறையில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையிலான […]

நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு […]

தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து […]

ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை- வைத்திலிங்கம்

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியில் கூறியதாவது.. ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை.அதிமுகவில் இல்லாவிட்டாலும் அண்ணாவின் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,”தேர்தல் நெருங்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது என்று இவ்வாறு தெரிவித்தார். கடந்த […]

இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு

இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதன்படி, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் தேர்வு […]

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டைதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று இவ்வாறு தெரிவித்தார். நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன். பிரதமர் மோடியின் […]

பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் – சௌந்தர்யா தம்பதியர், அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சன்மதியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த தனியார் பேருந்து அதிவேகமாகவும், […]

நடுரோட்டில் கஞ்சா போதையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய கும்பல்

கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை […]

திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து தி.மு.க.வில் இன்று முதல்வர் […]

ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசி புதுத்தெருவில் உள்ள கார்வண்ணன் என்பவரது வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.சம்பவத்தன்று, மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரைக் […]

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. […]

தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி மேலாண்மை குறித்து நிர்வாகிகளுக்கு அவர் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ‘திராவிடப் பொங்கல்’ என சிறப்பாகக் கொண்டாடக் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுத் தமிழகம் முழுவதும் கழகத்தினர் முன்னெடுத்த கொண்டாட்டங்கள் மக்களிடையே […]

எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்

வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வராததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியின் கேட்டை இழுத்து மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி ஐந்து […]

இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

தேர்தல் ஆயத்தப் பணிக்காக தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், […]

மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 17 வயது பள்ளி மாணவன் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார். அப்போது சுப்பிரமணி மனைவி பூபதிக்கும் விக்னேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சுப்பிரமணி, அவரது மகன் அஜித் பூபதி ஆகியோர் தடியால் அடித்து தாக்கியதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விக்னேசை அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் […]

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் […]

கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பேசிய சி.வி.சண்முகம் , இன்று புது புதுசா வருகின்றவர்கள் எல்லாம், கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் நம் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆர் தான் பதலடி கொடுத்தார். இன்று தேர்தல் வாக்குறுதியில் […]

திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை

திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம் தோறும் கோவிலுக்கு வருகை தந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக […]

புதிய உச்சம் தொட்ட தங்கம்- ஒரு சவரன் ரூ.1.11லட்சம்

ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 450 உயர்ந்துள்ளது தங்கம். தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,11,200- புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூபாய் 450 உயர்ந்து 13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இந்த சத்தம் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்றனர்.கல்லூரியில் […]

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து

எதிர்கட்சி தலைவரா ஆளுநர்?தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார். மகா மகா வெட்கக் கேடு! ‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ […]

மழையால் சாலை சேதம்- சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

சென்னை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மாநில முழுவதும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன. தற்காலிக நடவடிக்கையாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கல். மண், ஜல்லிகளை கொட்டி சாலைகளை சீரமைத்தன. ஆனால் […]

புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.

பாஜ., புதிய தலைவர் நிதின் நபினுக்கு டிடிவி வாழ்த்து

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த சூழலில், 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி (இன்று) நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு […]

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முதுகுவலி.. டாக்டர்கள் அறிவுறுத்தல்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதுகுவலி. 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலையில் மின்சாரம் தாக்கி கருகிய இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு, கோவிலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (25) உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மளிகை பொருட்கள் வாங்க பேலூரில் இருந்து கிலானூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்குவதற்காக 11 கிலோ வாட் மின்சாரம் செல்ல கூடிய இரும்பு கம்பத்தை தாங்கிப் பிடித்து இறங்கியுள்ளார். அப்போது இரும்பு மின்சார கம்பத்தில் மின்சார வயர் பீங்கான் உடைந்து இரும்பு கம்பத்தில் நேரடியாக […]

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை. இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல், டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, […]

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் […]

உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..! பயங்கரம்

சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுப்பட்டவர் எழுந்து ஓட முடியாமல், படுத்தவாறே […]

ஆளுநரின் உரை புறக்கணிப்பு- ஒரு திட்டமிட்ட செயல்- அமைச்சர் ரகுபதி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்துள்ளார். சென்னை செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு: ஆளுநரின் உரை புறக்கணிப்பு: ஒரு திட்டமிட்ட செயல்சட்டசபையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆண்டு என்பதால், தமிழக அரசின் மீது குறைகளைக் கண்டுபிடித்து அரசியல் செய்ய […]

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி […]

கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பவானி ஆற்றில் இருந்து கோவை பெரியநாயக்கன்பாளையம்,துடியலூர் வரை சாலை ஓரத்தில் ராட்சத குழாய்கள் அமைக்கபட்டுள்ளது.இந்த நிலையில் அந்த குழாயில் அமைந்துள்ள வீரபாண்டி பகுதியில் சாலை நடுவே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குழாய் உடைப்பை ஏற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளம் […]

கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது […]

மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் அருள்நிதி

தேன்’ என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள கணேஷ் விநாயக், அடுத்து எழுதி இயக்கிய படம், ‘அருள்வான்’. இதில், ‘தகராறு’ படத்துக்கு பிறகு மீண்டும் அருள்நிதி, கணேஷ் விநாயக் இணைந்துள்ளனர். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி நடிக்க, முக்கிய வேடங்களில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் நடித்துள்ளனர். ‘மைனா’ எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தையும் ‘தேன்’ படத்தை போல் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி […]

சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று (19.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டர் (Hydrogen Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் […]

ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரை நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர் அதிரடி

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. அதன்படி இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கூறி கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என […]

பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்., நிர்வாகி சிவராஜ சேகரன் ‘பளார்

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , கவுன்சிலருமான சிவராஜசேகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது…. புதிய மாவட்டத்தலைவர்களை பிரவின் சக்கரவர்த்தி வாழ்த்தியதை நானும் வழிமொழிகிறேன்.அதே சமயம் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயக்கப்பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின் உழைப்பை உதாசினப்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். மற்ற எந்தக்கட்சிக்கும் அடிபனியாமல்,சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் கட்சியை வலுப்படுத்த கவனமாகத் தேரந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தது எதன் அடிப்படையில்?இப்பணிகளில் பிரவின் ஆற்றிய பங்கென்ன? என்று அவரே தெளிவிபடுத்த வேண்டும்.தமிழக காங்கிரஸில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் […]

பேரவையில் இருந்து வௌியேறிய கவர்னர்

தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மேலும் பேரவையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் 2025 அரசியலமைப்பு சட்டத்தை மீறியதுடன், தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் அவமதித்ததாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SIR குறித்த உத்தரவுகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பக் கூடாது-சுப்ரீம் கோர்ட்

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியலுக்கு எதிராக மேற்குவங்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஜோய்மால்யா பாக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதில்,” மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 2 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. […]

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்

ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் கூறினார்.

விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி

திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பலூன்களுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவிழாக் கோலம் பூண்டிருந்த ஆற்றுப்பகுதி இந்த விபத்தால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை தந்து உரையாற்ற உள்ளார். இதற்காக காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படும் அவருக்கு, தலைமைச் செயலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அவரை வரவேற்று அவைத் தலைவர் இருக்கைக்கு […]

ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வித் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘காலநிலைக் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காலநிலை மாற்றத்தின் சவால்களை […]

பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:00 மணி அளவில், விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாபெரும் “தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது தென் மண்டலத்திற்கான இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சரும் […]

5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி […]

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு

நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று […]

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த டிசம்பர் […]

மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகே உள்ள கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுப்புராஜ் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க ஆக்சல் (Axle) […]

ரூ. 525 கோடியில் கலைஞர் ”பன்னாட்டு மாநாடு மையம்”… முதல்வர் ஆய்வு

சென்னை, முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், […]

குறைந்த பட்ஜெட்டில் பெரிய வசூலை ஈட்டிய ”TTT” படம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’, கார்த்தி, நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டில் நேரடியாக மோதின. ஜனவரி 18 வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடிப்படையில் இந்த மூன்று படங்களின் நிலவரம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. முதலிடத்தில் இருப்பது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’. 8 நாட்களில் தோராயமாக ரூ.76 கோடி […]

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு முழு பெட்டியும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது போல, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே என போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். […]

மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர்-அமைச்சர் சேகர்பாபு

சென்னை திரு.வி.க .நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்களை கட்டி வருகிறோம். அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் […]

பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்

பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அம்மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 369 வார்டுகளில் நடைபெறும் தேர்தலில் வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்காவை அரிவாளால் சரமாரி வெட்டி கொன்ற தம்பி-பரபரப்பு

நெல்லை மாவட்டம் தேவர்குளம் தச்சி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர்களது மகள் ராதிகா (28). மகன் கண்ணன் ( 25). ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆணுடன் நீண்ட நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் ராதிகாவின் தம்பி கண்ணனுக்கு தெரிய வருகிறது. உடனே கண்ணன் தனது அக்கா ராதிகாவை அந்த ஆணுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் ராதிகா அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து […]

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்

 சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து […]

திருப்பரங்குன்றம் தெப்பதிருவிழா கொடியேற்றம்..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது உற்சவர் சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு […]

புதுகை காங்.,வடக்கு மாவட்ட தலைவர் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு. செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

தவறான குற்றச்சாட்டால் உயிரை விட்ட நபர்?..கேரளாவில் சோகம்

கேரளா : மாநிலத்தில் பேருந்தில் பயணித்தபோது ஒரு இளம்பெண் (ஷிம்ஜிதா முஸ்தபா) தன்னிடம் ஒரு ஆண் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அப்பெண் அந்த ஆணை “creep” (குற்றவாளி போன்றவர்) என்று அழைத்து, பாலியல் சீண்டல் செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 42 வயதான தீபக் என்பவர் ஆவார். அவர் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். வீடியோ வைரலான பிறகு சமூக […]

கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த எஸ்ஐ கைது

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த எஸ்ஐகைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

கரூர் விவகாரம்- குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?

கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். முதல் விசாரணை ஜனவரி 12-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது 7 மணி […]

வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!

சென்னையில் இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்த முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் அறிவித்த வாக்குறுதிகள் வெற்று விளம்பரங்களே என்று கூறிய சேகர்பாபு, இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் என்று சாடினார். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், மக்கள் அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதால், போலி அறிவிப்புகளுக்கு செவி […]

பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் அடிக்கல் நாட்டினர். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மற்றும் த.சந்திரசேகரன்,தல.பாஞ்சாலன்,மு.க.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது.. முதல்வர் பெருமிதம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும் என முதல்வர் கூறினார்.

அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், […]

சூனியக்காரி வேடத்தில் படத்தில் நடிக்கும் வடிவுக்கரசி

ஹீரோயின்கள் மட்டும்தான் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ேகரக்டர்களில் நடிப்பார்களா என்ன! குணச்சித்திர நடிகைகள் கூட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து, அதில் கதையின் நாயகியாக நடிப்பார்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்தவர், திரைக்கு வந்த ‘அங்கம்மாள்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த கீதா கைலாசம். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதையின் நாயகியாக ராதிகா நடித்துள்ள படம், ‘தாய்கிழவி’. இதில் அவர் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடிக்கிறார். தற்போது அவர்கள் வரிசையில் சீனியர் நடிகை வடிவுக்கரசி இணைந்துள்ளார். […]

நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்படவுள்ளது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது.

சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்றே அவர் டில்லி சென்றார். கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, […]

குடும்ப தகராறு.. துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே ஆண்டவர்மலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச்செயலாளராக உள்ளார். விவசாயி ஆன கோபிநாத் தனது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே போதைக்கு அடிமையான கோபிநாத் தினமும் இரவில் மது அருந்திவிட்டு மனைவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று இரவும் வழக்கம் போல் போதையில் மனைவிடம் தகராறு செய்யவே தொடர்ந்து கணவனின் தொல்லை தாங்க முடியாத நிலையில் […]

கரூர் சம்பவம்- 10 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை

கரூர் துயர சம்பவம்: கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணைக்காக 3 பெண் உதவி காவல் ஆய்வாளர்கள்,1 ஆண் உதவி காவலர் ஆய்வாளர், மற்றும் காவலர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் என 10 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் […]

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்

பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர் செய்ய கூடினர். பள்ளி தொடங்கியதையடுத்து பள்ளியின் கேட் மூடப்பட்டது. தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் நிருந்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் வெளியில் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவர்களும், ஆசிரியர்களும், இனி தாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது […]

கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

சென்னை, கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் நேற்று காலை பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் இறங்கியுள்ளார். அங்கு ஏராளமான கற்சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்த அவர், […]

200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி

கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்.. ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊ ராட்சியில் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பந்தயம், ஸ்லோசைக்கிள், செங்கல் தூக்குதல், […]

கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின் விசார ணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங் கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர் பாக, சி.பி.ஐ., அதிகாரி களின் […]

எல்கை பந்தயம்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய VSB

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் பாரம்பரிய குதிரை வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் காலை நேரத்தில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கரூர் வாங்கல் சாலையில் உள்ள அரசு காலணி பகுதியில் குதிரை வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை கரூர் […]

இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்” என்றார்.

ரூ.6000-ஐ தொட்ட ஆம்னி பஸ் டிக்கெட் விலை: அதிர்ச்சியில் சென்னை திரும்பும் பொதுமக்கள்

பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டுத் திரும்புவதால், அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளன. குறிப்பாக, மதுரையிலிருந்து சென்னை வர ஒரு டிக்கெட் ரூ.4,500 முதல் ரூ.6,000 […]

முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட 5 நாள் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சொந்த ஊர் வந்த மக்கள் நேற்று முதலே மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கினர். இன்று காலை முதலே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் […]

நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்

பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குணா (38). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடிந்து தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணி […]

பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்தது. முறையான டோக்கன் விநியோகம் மூலம் இதுவரை சுமார் 90 சதவீத […]

மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறும் என ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப நலன், வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதன் காரணமாக தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் செய்து […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97 லட்​சத்து 37 ஆயிரத்து 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கடிச.19ம் தேதி முதல் ஜன 18ம் […]

பலூனை விழுங்கிய 7மாத குழந்தை பலி… பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியில், விளையாட வாங்கித் தந்த பலூன் ஏழு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலவா நாயக்கன் பேட்டை இப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை – 29 சந்தியா – 23 தம்பதியினர் செங்கல் சூளைத் தொழிலாளர்களாகப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கவிப்பிரியா (3 வயது) மற்றும் ரேணுகா (7 மாதம்) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். […]

மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் + 2 படித்து வந்த 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, சிறுமி நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”- டிடிவி பதில்!

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை […]

தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை

பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது.இதையடுத்து, தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் […]

நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகுதான் ரேஷன் கடைகளை அரசு ஏற்று நடத்தியது. தேர்தலில் […]

கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி-பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே […]

கவின் – சாண்டி காம்போவில் புதிய படம்

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர்களது நட்பு மற்றும் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த காம்போ தற்போது பெரிய திரையில் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர். கவின் நடிக்கும் புதிய படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வீடியோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு முழுநீள காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் மற்றும் சாண்டி இடையேயான கெமிஸ்ட்ரியை மையமாக வைத்துத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. […]

பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

அனுமன் சிலையை சுற்றி-சுற்றி வந்த நாய்- பக்தர்கள் வழிபாடு

உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது. அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதன்பின்னர் 2 நாள் கழித்து […]

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 68 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை- திமுக சார்பில் கும்மி பாடலுடன் பொங்கல்-கோலாகலம்

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிராமத்தின் கோயிலான படவேட்டம்மன் ஆலய வாசல் முன்பு ஏராளமான பெண்கள் செங்கரும்புடன் 3 பானைகளில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என கோஷங்கள் எழுப்பி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய நிகழ்வான மீனவ பெண்கள் […]

பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்

ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. வேளச்சேரி அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மாணிக்கம் தினமும் குடித்துவிட்டுவந்து குடும்பத்தில் பிரச்னை செய்துள்ளார். இதனால் அவர் குடியை மறக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த […]

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மால்டா நகர் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஹவுரா – குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் […]

காணும் பொங்கல்.. 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம். இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக […]

போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து

இன்று அதிகாலை முதல் போகிப் புகையுடன் இணைந்த அடர் பனிமூட்டம் நிலவியதால், ஓடுதளத்தின் பார்வைத்திறன் சுமார் 300 மீட்டராகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 4 விமானங்கள் அடங்கும். குறிப்பாகப் மும்பை, டெல்லி, புனே, கோவை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கான சேவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் […]

பொங்கல் பண்டிகை- 2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் இந்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போலவே, முதல் இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் வருவாயைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதோ:🍾 பொங்கல் மது விற்பனை 2026: முக்கியப் புள்ளி விவரங்கள் கடந்த இரண்டு நாட்களில் (போகி மற்றும் தைப்பொங்கல்) தமிழகம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.518 கோடிக்கு மதுபானங்கள் […]

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்-இபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 […]

ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு

ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் பாராட்டு மற்றும் கருத்து:அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானில் நேற்று நிறைவேற்றப்பட இருந்த 800-க்கும் மேற்பட்டோரின் தூக்கு தண்டனையை அந்நாட்டுத் தலைமை ரத்து செய்துள்ளது. இந்த முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, […]

யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் […]

மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி

MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!

மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 […]

தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் – ஓபிஎஸ்

 மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் “மக்கள் திலகம் வாழ்க” என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான […]

மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மும்பையில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே மும்பையில் பாஜ-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்தது. மும்பை மட்டுமல்லாது புனே, தானே, நாக்பூர் போன்ற பிற […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் முதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வருகிறார்.

எம்ஜிஆரின் புகழைப் போற்றுவோம்- ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி

ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட லட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, ‘கிராம நிர்வாக அலுவலர்’ (VAO) என்ற அரசு அலுவலர்களை […]

VSB தலைமையில் ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு…750 காளைகள் பங்கேற்பு

குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் பங்கேற்க உள்ளனர் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் கலந்து கொள்ள உள்ளன மாடுபிடி வீரர்கள் சுமார் 500 மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் முதல் சுற்றில் 100 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அதன் ஏற்பாடாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது பலத்த […]

எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க எப்போதும் பாடுபடுவோம் – பிரதமர்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்.,நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் […]

242 ஆன்லைன் கேமிங்- சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்

 சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

ஜீவாவின் கம் பேக்-சுத்தமான காமெடி கலந்த “TTT” படம்…ரசிகர்கள் கொண்டாட்டம்

பொங்கல் என்றாலே பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பாக்ஸ் ஆபிஸ் கணக்கு என பரபரப்பாக இருக்கும். ஆனால் அந்த கூட்டத்துக்குள், எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல், “நல்ல காமெடி படம் பார்த்து ரிலாக்ஸா சிரிக்கலாம்” என்று நினைப்பவர்களுக்கான ஒரு சின்ன பட்ஜெட் சர்ப்ரைஸாக வெளியாகி இருக்கிறது ஜீவா நடிப்பில் உருவான ‘தலைவர் தம்பி தலைமையில் (TTT)’. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த ‘Falimy’ என்ற பக்கா காமெடி-டிராமா படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ், அதே நகைச்சுவை […]

தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள நீர்த்தடுப்பணைகளில் ஒன்றாகும், மணல் அடித்தளத்தில் கட்டப்பட்ட இதன் நுட்பமான அமைப்பு, தமிழர் பொறியியல் திறனுக்குச் சான்றாகும்; இதன் மூலம் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன […]

மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்- எடப்பாடி கடிதம்

எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் […]

மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.13,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கு விற்பனை விற்கப்படுகிறது.

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..

கோவை சுந்தராபுரம் – பொள்ளாச்சி ரோடு, எல்ஐசி காலனி, ஸ்டாப் கமலம் ஹோண்டா ஷோரூம் எதிர்புறம் உள்ள பிளாஸ்டிக் குடோன் தீ விபத்து கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் களை விற்பனை செய்து வருகிறார் இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அந்த கடையில் மின்சார கசிவு காரணமாக […]

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..

தஞ்சாவூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,172 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவம், மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, இதய அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறை, முடநீக்கியல்துறை, மனநல மருத்துவம், மயக்கவியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. தஞ்சை மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவா’ரூர், […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு..

தமிழகத்தில் இன்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.306க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000க்கும் விற்பனையாகிறது

தமிழர் திருநாள் … முதல்வரை சந்தித்த VSB

முதல்வரை சந்தித்த VSB தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு…தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த திராவிட நாயகர், மாநில உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களிடம், இன்று, தைத்திருநாளாம் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று இவ்வாறு கூறினார்.

கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

மார்கழி முதல் நாள் தொடங்கி இன்று வரை பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதம் முதல் இன்று வரை நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் மார்கழி மாத முக்கிய நிகழ்வான ஆண்டாள் திருமண வைபவம் இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் பெருமாளுக்கு சிறப்பு பொருட்களா அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக […]

சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க சுமார் 3,000 காளைகளும், 1,800 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. போட்டியையொட்டி வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் மாடம் மற்றும் […]

5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: இன்னசென்ட் திவ்யா IAS: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாகன் IAS: தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துராஜ் IAS: […]

கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இன்று வழக்கம் போல பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் […]

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் ஆசிரியர் உயிரிழப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜனவரி 6 முதல் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண […]

அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 18-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளியூர் செல்லும் பொதுமக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து […]

உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்

கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக போதிய உணவு இல்லாமலும், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுந்து நடக்கக் கூட முடியாத சூழலில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்தச் சோகமான நிலை‌ குறித்து அப்பகுதி பொதுமக்கள் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாக்கியராஜ், […]

சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பஸ்

சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டு அடுக்கு பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க […]

போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுடன் வாழ பிடிக்காத சுதா பிரிந்து செல்வதாக கூறி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக உள்ள செந்தில் இன்று வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மீண்டும் வீட்டில் மனைவி சுதாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு ஒரு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என […]

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக அரசுக்கு வந்த திடீர் கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து […]

விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கு..ஆனா?.. வாக்காக மாறாது.. கார்த்திக் சிதம்பரம்

எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பார் என்றும் அதன் அடிப்படையிலேயே ஜனநாயகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், விஜய்க்கு மக்களின் ஆதரவு இருக்கிறது ஆனால் அந்த ஆதரவு வாக்காகவோ அந்த வாக்கு தொகுதிகளை வெற்றி பெறும் வகையிலோ அமையும் என்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்….. கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். […]

தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கியது. மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பணிகள் நேற்றுடன் ( ஜன 13) நிறைவுடைந்துள்ளது. […]

புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் இன்றைய தினம் துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் […]

விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் களத்தில் யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள நான்கு முனை போட்டி இருமுனை போட்டியாக மாறும். சிவகார்த்திகேயன் பராசக்தியிலும் நடித்திருக்கிறார். அமரன் படத்திலும் நடித்தார். கதை […]

பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையில் திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழா முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பார்த்திபன் சமத்துவ பொங்கல் விழாவி ற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் சமத்துவ பொங்கல் விழாவில் 109 பொங்கல் பானை வைத்து பெண்கள் பொங்கலிட்டனர். பின்னர் சாமி கும்பிட்டனர் கிறிஸ்தவ மத போதகர் இஸ்லாமிய பெண்மணி ஆகியோர் தீபாரதனை காட்டினர் அதோடு அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர் பொங்கல் […]

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. எழுதிய பாடல்: இவ்விழாவிற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘வானமில்லை பூமியில்லை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை மற்றும் உணவுகளை […]

பூக்களின் விலை உயர்வால்-எதிர்பார்த்த வியாபாரம் இல்லை

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.‌ முல்லை 2,000 ரூபாய், ஜாதி 2,000 ரூபாய், காக்கரட்டான் 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பன்னீர் ரோஸ் 400 ரூபாய், செவ்வந்தி 50 முதல் 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் […]

அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தெற்கு இரயில்வேயின் மரியாதைக்குரிய ஆய்வாளர் ஜெனரல் மற்றும் முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி அவர்களின் அறிவுறுத்தல்களின்படியும், திருச்சி முதுநிலை பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவின் வழிகாட்டுதலின் கீழும், தஞ்சாவூர் அதிகார வரம்பிற்குட்பட்ட இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் இரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதன்படி, பி. சரவண குமார், ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் மற்றும் கே. ஸ்ரீனிவாஸ் நாயக், உதவி ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் ஆகியோர் புதலூர், பூண்டி மற்றும் சாலியமங்கலம் […]

தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், […]

டைரக்டர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது-தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை. இலக்கியம். அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல்.. தொழில். கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெருமக்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் […]

நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் போட்டிக்காக, சுமார் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட விழா மேடை, காளைகள் வரிசைப்படுத்தும் தடுப்பு வேலிகள் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் […]

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி […]

புதுகை-தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் /ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணாதலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்றுதுவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவபொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி,சேலைகளைவழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]

மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாகக் கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ் மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த வன்முறை பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். “ராஜ் தாக்கரேவின் வன்முறை […]

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000– மகேஸ் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக […]

சிபிஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அதிகாரிகள் -காவலர்கள்

கரூர் துயரச் சம்பவம்-சிபிஐ விசாரணைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாத முதல் சிபிஐ அதிகாரிகள் கரூர் […]

தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன்- பிரதமர்

தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த […]

இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் […]

அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி […]

குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மினி பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். னியார் மினி பேருந்து ஓட்டுநர் ஒருவர் மர்ம நபர்களால் அல்லது குறிப்பிட்ட சிலரால் தாக்கப்பட்டதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓட்டுநர்கள் […]

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்- பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கேரளா: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகர பல்லாண்டு பூஜையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சபரி மலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தேவசம்போடு அறிவித்த நிலையில் தற்போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சந்தன பேழையை ஊர்வலமாக […]

துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி அன்பர்களே 2026 எப்படி இருக்கும்..?..

துலாம் ராசிகார்கள்: 2026: சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். மகளின் திருமணத்தை […]

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வண்ணக் […]

பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு

பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் […]

பொங்கல் தொகுப்பு-பெரம்பலூர் எம்பி அருண் வழங்கினார்

 பெரம்பலூர் மாவட்டம் வேலூர், ஊராட்சி தம்பிரான்பட்டி, கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு   தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மாவட்டகலெக்டர் மிருணாளினிதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்,  வருவாய் கோட்டாட்சியர்  அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் […]

பொங்கல் பண்டிகை- 1 கிலோ மல்லி ரூ.6000 விற்பனை

பூக்கள் வரத்து குறைவு மற்றும் பொங்கலை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.6000க்கும், 1 கிலோ முல்லைப்பூ ரூ.3000க்கும், 1 கிலோ ஜாதிப்பூ ரூ.1500க்கும் விற்பனையாகின்றன.

ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]

கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சர்கார், பாலசு மண்டல், ரோஹித் தாஸ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி தீயிட்டு கொண்டாட்டம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகை விவசாயத்தின் கடவுளிடம் ஆசி பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. அறுவடை திருநாளின் ஆரம்ப நாளாகவும் இந்த நாள் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இதனை பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாக முன்னோர்கள் கூறி […]

வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சமீபத்தில் அப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு பெண் சடலம் வெளியே கிடந்துள்ளது அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த உடலை மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட […]

கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கொடியைசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன […]

கோவையில் பொங்கல் விழா… கலெக்டர் நடனம்

பொங்கல் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் நடனம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக அலுவலர்கள் செய்த கலர் பொடி கோலங்களுக்கு மதிப்பெண் அளித்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார் இந்த போட்டியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் அலுவலர்கள் கயிறு இழுத்து முதலாவதாக வெற்றி பெற்றனர் பின்னர் பெண் அலுவலர்கள் கயிறு இழுத்து அடுத்ததாக வெற்றி பெற்றார்கள் இதனை […]

பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஜன.16) மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாளும் அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 விலை உயர்ந்து ரூ.3,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% சலுகை – நாளை முதல் அமல்

ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே துறையில் தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் […]

ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்ற தனது கணவரின் […]

ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் அந்தப் பெண்ணும் ஒரு ஆணும் அறை எடுத்து […]

முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்-கோரிக்கை

கோப்பு பாலம் – முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்.புதிய பாலம் கட்டவும், பாலம் கட்டும் வரை மாற்று பாதை அமைக்க தரவும் விவசாயிகள் கோரிக்கை,.அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழுமணி கோப்பு பாலம் -புலிவலம் , கொடியாலம்| வழியாக முக்கொம்பு அருகே திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்து வருகிறது இச்சாலையில் உய்யக் கொண்டான் புலவலம் மனற் போக்கி வடிகால் அருகே உள்ள உய்யக் […]

எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

பெரம்பூர், ஓட்டேரி செல்லப்பா தெருவில், ‘’சிங்கார சென்னை 2.0’’ திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். இதில், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; […]

காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..

சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என நேற்றிரவு ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், அந்த காட்டேஜிக்கு சென்று, குறிப்பிடப்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு, அரை நிர்வாண நிலையில் […]

ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள்- உதகையில் ராகுல் பேச்சு

உதகை- ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்; ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். […]

பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.இந்நிலையில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்திருந்த பிரதான வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல், தங்கள் […]

பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்

தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. குறிப்பாக தை மாதம் 1ம் தேதி கழனியில் விளையும் நெற்கதிர்களுக்கு தனது செங்கதிர்களை பாய்ச்சி செழிக்கச் செய்திடும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும், தை – ஆம்தேதி (16ஆம் தேதி) உழவுத் தொழிலுக்கு உற்றத் தோழனாக விளங்கிடும் கால்நடைகளை கவுரவப் படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும்கொண்டாடப்படுகிறது.சூரிய பொங்கலன்று வாசலில் […]

14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை

தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை […]

மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! .. நிர்மல்குமார்

ஜனநாயகன் திரைப்படம் குறித்து யார் யார் ஆதரவு தெரிவித்தார்களோ அனைவருக்கும் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நன்றி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமானது அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. கரூர் பிரச்சார  கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று நேற்றயை தினம் […]

விரைவில் ஆட்சி மாற்றம்.. நடிகை கௌதமி பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் மீனவப் பெண்களுடன் இணைந்து, விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி விழாவைக் கொண்டாடினர். விழாவில் பேசிய நடிகை மதுவந்தி, மீனவர்களின் பெருமையை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். “மகாபாரதத்தை எழுதிய வியாச பெருமானே மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். […]

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் […]

காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து-காங்., கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னமராவதி காந்தி சிலை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராமன் தலைமை வகித்தார் .திரளான காங்கிரஸார் இதில் பங்கேற்றனர்.

அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள் […]

புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய அரசு மன்னர் கல்லூரில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் தனித்தனியாக சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு பெங்கல் விழா நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் […]

சூர்யா ,த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு- எப்போ ரிலீஸ்?..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து […]

பொங்கல் பண்டிகை.. திருச்சியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சியிலிருந்து, ஆயிரத்து 732 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 12ம்தேதி (நேற்று) முதல் 15ம்தேதி அதிகாலை வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், […]

வீடு தீப்பிடித்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி உறையூர் கீழ புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி வயது (45. ) இவர் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவரது மகன் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் , பேங்க் பாஸ்புக் , டிசி போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து […]

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது. 8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, […]

ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். 2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், திருநங்கையருக்கு உரிய விழிப்புணர்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதி செய்திட முடியும் […]

ஜனநாயகன் படத்திற்கு ராகுல் ஆதரவு

விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி […]

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 […]

வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததை அடுத்து 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.

17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர் நேரில் பார்வை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை நாளை தொடங்கி வைக்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல்; எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். […]

கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை […]

கடும் புகைமூட்டம்..சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து..

நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நிலவக்கூடும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, பார்வைத்திறன் குறையும் என்பதால் கீழ்க்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய அதிகாலை நேர விமானங்கள். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து அதிகாலையில் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள். ரத்து செய்யப்படாத பிற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் (சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சேவைகள்) 1 மணிநேரம் முதல் 3 மணிநேரம் […]

அதிமுக-பாஜகவுடன் கூட்டணியில் இணைய டிடிவிக்கு தயக்கம்..

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும்படி தினகரனுக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட அழுத்தத்தால் டெல்லி சென்று அமித் ஷாவை டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய மறுநாளே அமித் ஷா -தினகரன் சந்திப்பு நடந்துள்ளது. தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் […]

போதை ஆசாமி அடாவடி-அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார். பேருந்து லட்சுமி […]

விஜயை ஒப்பந்தம் செய்ய பாஜக முயற்சி – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கோவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் கூடலூர் ராகுல் காந்தி வருகை முன்னிட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார் அவருக்கு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநில மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றினர் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் […]

ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது

கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை, நிறுத்தி விட்டு, வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில வாலிபர் வந்தார். வியாபாரம் செய்த லோகேஸ்வரனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் நான் இந்த ஏரியா […]

கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62). சம்பவம்: இவர்கள் இருவரும் இன்று மதியம் ஒரு வேலையாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது […]

படம் இயக்க ஒரு கதை தயாராய் இருக்கு

ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில், ‘நடிகராக மட்டும் இருப்பதை விரும்புகிறீர்களா? மீண்டும் படம் இயக்க விரும்பவில்லையா?’ என்று […]

கரூர் சம்பவம்.. 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த […]

எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் […]

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழகம் முழுவதும் காண முடிகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் […]

”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

 விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தற்போது வரை சென்சார் சான்று தரப்படவில்லை. தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

பாமகவில் விருப்பமனு விநியோகம் 2 நாட்கள் நீட்டிப்பு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகப் பாமக (பட்டாளி மக்கள் கட்சி) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்?: 2026 […]

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளில் நீண்ட கால உறுதிப்பாட்டுடன் இருப்பது, சிறந்த நாடாளுமன்றவாதியாகச் செயல்படுவது மற்றும் அவரது அரசியல் பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப் […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது.

நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

 பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை

சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த […]

புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், தருண்குமார் தனது நண்பர் சூர்யா (18) என்பவருடன் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காகப் புளியங்குடி-சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். பெட்ரோல் நிரப்பிவிட்டு இருவரும் பாம்புகோவில் விலக்கு பகுதியில் திரும்பிக் கொண்டிருந்தனர். சூர்யா […]

​கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது சினிமா வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதியின்றி இவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 38,175 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு இந்த அரசுப் பேருந்துகள் பெரும் உதவியாக […]

மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு: நேரில் பங்கேற்கிறார் முதல்வர்…பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பாலமேட்டில் வருகிற ஜனவரி 16-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பாலமேடு மஞ்ச மலை சுவாமி […]

சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. தூரத்திற்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தச் சோதனை இன்று காலை 11:00 மணியளவில் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமே இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலம் […]

கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்

மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. […]

கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது

சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்த கும்பல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு சுமார் 35-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு வந்தவர்களிடம், “25 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ் முறையில் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது […]

புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் கடலோரப் பாதுகாப்புக் […]

காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது சகோதரர் தன்னைத் தாக்குவதாகக் கூறி ஜெபாஸ்லின் விஜி, காதலன் ராஜேஷின் வீட்டிற்குத் தஞ்சமடையச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரது தாயார் […]

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடற்கரையின் சுகாதாரத்தைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த 7 நவீன இயந்திரங்கள் மற்றும் சுழற்சி முறையில் 274 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் […]

குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் வந்துள்ளது. நேற்று […]

சதுரகிரி மலை: தொடர் மழையினால் பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று (ஜனவரி 11) சதுரகிரி கோவிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை […]

நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக சீவலப்பேரிக்குச் சென்றிருந்த நிலையில், ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 2 மணியளவில் […]

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஜனவரி 10-ம் தேதியே […]

பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார் பேட்டை. கல்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், […]

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி வேப்பேரிக்கும். உளவுப்பிரிவு உதவி கமிஷனர் சங்கரநாராயணன் அமலாக்கப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பரங்கிமலை உதவி கமிஷனர் முரளி செம்பியத்துக்கும். மீனம்பாக்கம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயகுமார் கிண்டிக்கும். தரமணி உதவி கமிஷனர் […]

17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மெய்யப்பன் அந்த மாணவியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, […]

சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகேசன் (30). இவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சுவீட் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முருகேசன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் சென்றிருந்தனர். இன்று அதிகாலை முருகேசனின் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் […]

பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து கடும் சரிவு: கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்து, விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்கழி மாதம் தொடங்கியது முதலே தென் மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செடிகளில் அரும்புகள் உருவாவது தடையாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக 5 முதல் 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் வரும். ஆனால், கடும் […]

படுத்த படுக்கையாக இருக்கும் 90 வயது மூதாட்டிக்கு பொங்கல் தொகுப்பு- நெகிழ்ச்சி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி இருளாயி (90). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இருளாயி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இருளாயி படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை இருளாயிக்கு உறவினர்கள் வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு பெற முடியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரேஷன் […]

பாஜகவுக்கு 33 சீட் தான்”-உடைத்து பேசிய அதிமுக நிர்வாகி!

பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் […]

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – இஸ்ரோ தலைவர் பேட்டி

பிஎஸ்எல்வி-சி 62 ராக்கெட் நாளை மறுநாள் (12ம்தேதி) காலை 10.17 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 12ம்தேதி காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோளும், அத்துடன் 15 […]

எம்மி விருது வென்ற பிரபல நடிகர் காலமானார்

எம்மி விருது பெற்ற ‘சீன்ஃபீல்ட்’ தொடரின் இயக்குநரும் நடிகருமான டாம் செரோன்ஸ் (86) காலமானார். அல்சைமர் நோயுடன் நீண்டகாலமாக போராடி வந்த அவர், புளோரன்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். பல்வேறு டிவி நிகழ்சிகளை இயக்கிய அவர், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ’THE PILOT’ படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் பரிசு… ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசாணை வெளியீடு

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இத்தகைய சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்ததால், 2026 ஆம் […]

பயணிகளிடம் சோதனை நடத்த சென்னை ஏர்போட்டில் புதிய காமிரா அறிமுகம்

சென்னை உள்பட பல விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பாடு, வருகை பயணிகளுக்கு சுங்க சோதனையின்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகளின் சட்டை பாக்கெட்டுகளில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ‘பாடி வார்ன் காமிரா’ அணிந்திருக்க வேண்டும், அவை, அதிகாரிகளின் சோதனைகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யும். அக்காட்சிகள் கம்ப்யூட்டர்களில் தேதி, நேரம் வாயிலாக குறிப்பிடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அல்லது சந்தேகங்கள் வந்தால், […]

திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மதுபானங்கள் விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என எச்​சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லறை […]

சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி பகுதியில் கார்த்திக் என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது. 🗞️ […]

திரைப்படத் தணிக்கை வாரியமும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி

திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தணிக்கை வாரியம் உள்ளிட்டவற்றை கூட்டணியில் வைத்துக் கொண்டுதான் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிகாரிகள் குழுக்களுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜகவை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது 100 பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் செழியன் கலந்து கொண்டார் அவர்களோடு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதோடு மத நல்லிணக்க அடிப்படையில் விழா […]

தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-

தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி

கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாலை 5 மணி அளவில் தேமுதிக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், […]

புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்த […]

ஜெயலலிதா மகள் எனக்கூறி வந்த அம்ருதா விரட்டியடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 […]

பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றார். இதன்படி, இந்தாண்டு கொளத்தூர் ஜவகர் நகர் 1வது சர்குலர் சாலையில் உள்ள கொளத்தூர் […]

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (45) என்பவர், இன்று காலை வழக்கம் போலத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரைத் தாக்கியுள்ளது. தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டெருமை, மலர்க்கொடியை எதிர்பாராத விதமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, மலர்க்கொடி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு […]

தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறையில் மாற்றம் தேவை…மநீம தலைவர் கமல்

தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் தெளிவற்ற தன்மையால் […]

புத்தாண்டு நடனத்துக்கு 6 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா

கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார். தமன்னா இப்போதெல்லாம் பாலிவுட் சினிமாவே கதி என்று இருக்கிறார். கடைசியாக தமிழில் ‘அரண்மனை-4′ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக இந்தி படங்கள் நடித்து வருகிறார். இதுதவிர படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடவும் ஒப்பந்தமாகி வந்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார்.அதுதொடர்பான வீடியோவும் இணைதளத்தில் வைரலானது. அந்த […]

ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

‘ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் கார் ஓட்டிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில பகிர்ந்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை […]

தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்

அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ். தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகக் கூறி வரும் ஓ.பி.எஸ்., விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்குப் […]

பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய […]

விஜய் பிரச்சார பஸ்சின் மேல் ஏறி சிபிஐ அளவீடு.. டிரைவரிடம் விசாரணை

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் […]

நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 181-இல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் […]

டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ மாறியுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் பயணித்து இன்று மாலை வட இலங்கையின் திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. […]

கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் […]

பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை கதவு தானாகவே தாளிட்டு பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டிய அறைக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில், பெற்றோர்கள் கதவை திறக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு […]

ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கபிலேஷ், ஆதவ் கந்தசாமி, பிரிதிவ் கிருஷ்ணா, ஆதர்ஷ், பிரதிக் ராஜ், சோனிகா சுனில், திவ்யேஷ் ராம் மற்றும் ஹர்ஷியத் ஆகிய வீரர்கள், தங்களின் அபார திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு […]

விஜய் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்த சிபிஐ…

கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது..!!

திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த ஹரி நாடார், திருச்சி அருகே காரில் சென்றபோது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த ஆனந்த்குமார் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இவர், “மேட்டூர் சூப்பர் சர்வீஸ்” என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த […]

காரைக்குடி: மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதல் – 5 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் முறிந்து வாகனம் மீதே சரிந்து விழுந்தன. விபத்தின் போது மின்கம்பிகளில் இருந்து மின்வயர்கள் அறுந்து சாலை முழுவதும் சிதறி விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. […]

உடுமலை அருகே சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலி

விருதுநகரைச் சேர்ந்த 20 பேர் நேற்று வேன் ஒன்றில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சுற்றுலா வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மீண்டும் விருதுநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். உடுமலை சாலையில் எரிசனம்பட்டி அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. ஆனால், அதே சமயம் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பலமாக மோதியது. […]

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்திருந்தார்.

பராசக்தி படத்திலிருந்து ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம்

பராசக்தி’ படத்திற்கு, இன்று (ஜன.09) தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இதன் மூலம் நாளை (ஜன.10) சொன்னபடி பராசக்தி படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. அதன்படி, இந்த படத்தில் உள்ள ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்திற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என்று பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தம்பதி வெட்டிப் படுகொலை.. 8 பேர் கைது-பரபரப்பு

திண்டுக்கல் அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். பழிக்குப் பழியாக கணவன் – மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக […]

”வா வாத்தியார்” படத்தின் தடையை நீக்க மறுப்பு

கடனை திரும்ப செலுத்தாததால் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வா வாத்தியார் திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசத்தை அளித்துவிட்டது என தெரிவித்து தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வா வாத்தியார் திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா […]

தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள், ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்துவந்தனர். பெற்றோர்களும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கான கோலம் வரைதல் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு […]

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை

 சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 2019இல் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்புமணியுடன் கூட்டணி- ஏமாந்துதான் போவார்கள்-பாமக MLA

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.

கள்ளக்குறிச்சி- புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணி துவக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த பௌசென் குழுமம், இந்தியாவிற்காக காலணிகளை உற்பத்தி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் உற்பத்தி ஆலையை அமைக்க தொடங்கி உள்ளது. சாத்தனூர் சிப்காட்டில் ரூ.2,325 கோடி முதலீட்டில் தைவான் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

சாஸ்த்ரா பல்கலை, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஆணை..

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கடந்த பல ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்படும் இந்த நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தஞ்சாவூர் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைந்துள்ளது. எனவே, மீட்கப்படும் நிலத்தைச் சிறைத் துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து, சிறைச்சாலை விரிவாக்கப் பணிகளுக்குப் […]

திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு

சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தெரிவித்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். அதிமுக – பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் […]

“ஜனநாயகன்” அரசியல் காரணத்திற்காக நிறுத்தவில்லை.. சரத்குமார் விளக்கம்

கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் சேவை மையம் நிறுவனர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராக […]

கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர வேகமெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை […]

தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம், அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேடையில் மக்களிடம் நேரடியாக கனவுகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக இருக்க […]

கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் இதோ: 🏢 புதுக்கோட்டை: உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்வு – அரசாணை விவரங்கள்தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளை அடுத்த நிலைக்குத் தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் […]

அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை-விமர்சித்த டிரம்ப்-பரபரப்பு

அமெரிக்காவில் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், பலியான பெண் மீது பழி சுமத்தி அதிகாரியைப் பாதுகாத்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கடந்த 7ம் தேதி குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, காரில் இருந்த ரெனீ நிக்கோல் குட் (37) என்ற பெண், அங்கிருந்த அதிகாரிகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 குழந்தைகளுக்குத் தாயான அவர், மிக அருகில் வைத்துச் சுடப்பட்ட […]

கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்

இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. […]

நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் […]

அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல தரப்பட்ட பொதுமக்கள் பயண பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தேவாரம்,தேனி, பழனி பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட […]

”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். […]

சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,சிப்காட் திட்ட அலுவலர்சீ. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெகவில் குழு அமைப்பு

026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, நடிகர் விஜய் தலைமையிலான (தவெக) தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது. கடந்த டிசம்பர் 11, 2025 அன்று பனையூரில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இக்குழு அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவான தேர்தல் அறிக்கையைத் தயாரித்தல். இந்தநிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்து தவெக தலைவர் […]

தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இன்று முதல் விருப்பமனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது. பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பமனு விநியோகம் மற்றும் கட்டண விவரங்கள் பின்வருமாறு:விவரம்கட்டண விவரம்பொதுத் தொகுதியில் போட்டியிட₹1,000தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு₹500காலக்கெடு: விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜனவரி 12, 2026 (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.பெறப்படும் இடம்: தைலாபுரம் தோட்டம் அல்லது கட்சியின் முக்கிய மாவட்ட அலுவலகங்களில் […]

கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு […]

புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே உள்ளது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். எரிக்கக் கூடாத பொருட்கள்:சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பின்வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் […]

மேகதாது அணை விவகாரம்-தஞ்சையில் கொதிக்கும் விவசாயிகள் – ரயில் மறியல்

கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்குத் தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் இன்று பிரம்மாண்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். […]

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்

ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரானின் முன்னாள் இளவரசர் Reza Pahlavi, ‘இதுவே கடைசிப் போர்’ என்று முழக்கமிட்டு மக்களைத் திரள அழைப்பு விடுத்ததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் சூழலில், வன்முறையில் சிக்கி இதுவரை 45 […]

“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு

தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் […]

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக அறங்காவலர் குழு பேட்டி அளித்துள்ளது. இது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு பேசுகையில், ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30ம் தேதி வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]

”உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” – தமிழக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம். […]

நாகையில் கடல் சீற்றம்- கடலுக்கு செல்லாத மீனவர்கள்

நாகப்பட்டினம்: கடல் சீற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. புள்ளிவிவரங்கள்:மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்: சுமார் 3,500 படகுகள் அந்தந்தக் கிராமங்களின் கரையோரங்களில் பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகங்களில் சுமார் 450 விசைப் […]

மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தின் 3ம் பாகம் உருவாக்கம்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியிலும் 2 பாகங்கள் ரீமேக் செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் 3ம் பாகம் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் மனைவியாக மீனாவும், இந்தியில் ஸ்ரேயா சரணும் நடித்தனர். தற்ேபாது இரு மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகிறது. கன்னடத்தில் ‘திரிஷ்யம்’ ரீமேக்கை ‘திரிஷ்யா’ என்ற பெயரில் 2 பாகங்களாக பி.வாசு இயக்கினார். […]

தியாகராஜர் கோயிலில் வேலைவாய்ப்பு- ரூ.58,600 வரை சம்பளம்

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணி குறித்த விரிவான தகவல்கள் இதோ: காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது: பணியின் பெயர் காலியிடங்கள் சம்பளம் (மாதம்) இளநிலை உதவியாளர் (Junior Assistant) 02 ₹18,500 – ₹58,600 வசூல் […]

கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியார் பொள்ளாச்சி சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து உலா வந்தது ஆழியார் அணைப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையில் இருந்து வெளியேறி அணை பகுதிக்கு சென்றது இதனை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.7000க்கு விற்பனை

மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7000 ஆக விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு கிராம் தங்கம் விலைக்கு நிகராக ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. படக்குழு தரப்பில் […]

தொகுதிப் பங்கீடு- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?

 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே உறுதியான இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), பாஜகவுக்கு 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரியதாகக் கூறப்படும் சூழலில், இந்த விவகாரத்தை கையாளும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று (ஜனவரி 9, 2026) […]

நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்- அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கு விற்பனை ஆகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டு, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் வழக்கு […]

“ஜனநாயகன்” படத்திற்காக காங்கிரஸ் பொங்கி கொண்டிருக்கிறார்கள்” – தமிழிசை

காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]

ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார். இங்கு சர்வீஸ் செய்வதற்கு தேவையான உபரகணங்கள் மற்றும் லேப்டாப் உட்பட பொருட்களை வைத்திருந்தார். சர்வீஸ் பணிகளுக்காக அழைத்தால் இங்கிருந்து உபகரணங்களை எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் சர்வீஸ் பணிகளை முடித்துவிட்டு சோழாசிட்டியில் […]

5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் […]

விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது”- செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். திமுக வலுவிழந்து இருப்பதால் தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவே அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. விஜய் ஒரு அரசியல் கட்சி நடத்துவதால் அவருக்கு எவ்வளவோ விதங்களில் நெருக்கடி கொடுக்கலாம். ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி கொடுப்பது அரசியல் ரீதியானது அல்ல. இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. […]

அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது ஹெட் போனில் கூட திருக்குறள் தான் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் சைவம் என்பதால் செட்டிநாட்டு உணவு பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள். இல்லையென்றால் அதையும் சொல்வார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டலடித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் […]

பிப்.22ல் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி.. கோவை கமிஷனர் தகவல்

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில், வரும் பிப்ரவரி 22ஆம் தேதி பெண்களுக்கான பிரத்தியேக இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மரத்தான் போட்டிக்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் https://etamil.zevenstone.com/womens-night-marathon-competition-on-feb-22/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D நடைபெற்றது. இதில் […]

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 2023 24 அரசு மூலதன மானிய நிதி மூலம் திருவரங்கம் அரசு மருத்துவமனை எதிரே ரூபாய் 11.10 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023ம் வருடம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.இப்பணிகள் துரிதமாக […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை

ஈரோடு சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700 விற்பனையான நிலையில் தற்போது ரூ.4,300க்கு விற்கப்படுகிறது. முல்லை ஒரு கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.700, செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 குழந்தையின் தந்தையை திருமணம் செய்வதாக அடம்- மருத்துவ மாணவி கொலை

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாக உள்ளவரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததால் கோபம் அடைந்த தந்தை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படையினர் சென்னை சென்றுள்ள நிலையில், அவர் வளர்ப்பு தந்தை என்பதும் தெரியவந்திருக்கிறது. சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி பக்கமுள்ள வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த […]

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் […]

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]

தமிழகத்தில் 11ம் தேதி 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜனவரி 11ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் […]

பாலையூரில் மரக்கன்று நடும் விழா

 புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பாலையூரில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற முனி கோவில் வளாகத்தில் 13 வெவ்வேறு வகையான மரக்கன்றுகள் அரிமளம் பசுமை மீட்புக்குழுவினரால் நடப்பட்டது. பாலையூர் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி  குழுவினரை வரவேற்று நிகழ்வினை தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடும் விழாவில் அரிமளம் பசுமை மீட்புக்குழு  செயல்தலைவர் எம். குமார், உறுப்பினர்கள் எஸ். ராமமூர்த்தி, எம்.தமிழ்மணி,எஸ். சுப்பிரமணியன், எம். பாண்டிக்கண்ணன், சி.வெற்றிவேல் ஆகியோர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பி […]

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் . நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு.வீரமணி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் கள்வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை,துணைமேயர் எம்.லியாகத்தலி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்தெய்வானைமற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 9,10ம் தேதி மிக கனமழை- எச்சரிக்கை

சென்னை : 08-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 09-01-2026: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், […]

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?… புகார் அளிக்கலாம்

‘தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை (Pongal) சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.இதுதவிர இலவச வேட்டி, சேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற […]

umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு… முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை நத்தம்பாக்கத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனித ரோபோ கைகொடுத்து வரவேற்பு தெரிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துயாகியது.

நாளை கோவை பிஎஸ்ஜி.டெக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி துவங்கி 11 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது… இந்நிலையில் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. இதில் நிகழ்ச்சிக்கான சேர்மன் டி.நந்தகுமார், கல்லூரி முதல்வர் பிரகாசன், முன்னாள் மாணவர்கள் அமைப்பு தலைவர் வி.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் கே.சுரேஷ்குமார், […]

ஜனவரி இறுதியில் ராகுல்-பிரியங்கா தமிழகம் வருகை

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஜனவரி இறுதியில் தமிழகம் வருகை தர உள்ளனர். ஜனவரி 4-வது வாரம் (ஜனவரி இறுதியில்) இவர்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி & மல்லிகார்ஜுன கார்கே: இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள ‘கிராமக் குழு உறுப்பினர்களின் பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். இடம்: திருச்சி, […]

சென்னை- 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி

சென்னையில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணியாளர்கள் அவற்றை சுத்தம் செய்தனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து […]

டிடிவியுடன் கூட்டணி?… மறுக்காத எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார். டில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .. அவர் கூறியதாவது..அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை. சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.இனியும் பாஜகவைச் சுற்றுவதில் பலன் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். வௌிப்படையாக பேச முடியாது. தமிழக […]

ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார். ரூ. 3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வௌிப்படையாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று தொகுப்பை […]

கோவை மருதமலை சுப்பிரமணிய கோவில் உண்டியலில் ரூ.94.84 லட்சம் காணிக்கை

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அஅவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் பலரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுகிறது. அதன்படி இன்று கோவில் உண்டியல் […]

கோவை அருகே பயங்கர கார் விபத்து… வாலிபர் தீயில் கருகி பலி

கோவை மாவட்டம் மதுக்கரை,திருமலையம்பாளையம் அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் வாலிபர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விமல் (22) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ நேரத்தில் காரில் மூன்று பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட போது கார் தீப்பிடித்த நிலையில், அதில் விமல் மட்டும் சிக்கி வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். மற்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து விற்பனை ஆகிறது.

பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி

குன்றத்தூர் அருகே அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சரவணன் (17), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூஷனுக்குச் சென்றுவிட்டு, தனது பைக்கில் சரவணன் வீட்டிற்குப் புறப்பட்டார். குன்றத்தூர் – பல்லாவரம் பிரதான சாலையில் ஆண்டாள்குப்பம் அருகே அவர் […]

ஜனநாயகன் பட ரிலீஸில் சிக்கல்: தணிக்கை வழக்கில் ஜனவரி 9-ல் தீர்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் (ஜனவரி 9) தீர்ப்பளிக்க உள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் ‘யு/ஏ’ சான்று வழங்கத் தணிக்கை வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென சில காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புகார் வந்திருப்பதாகவும், […]

மதுரை ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்குத் தொடங்கியது. போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான madurai.nic.in வாயிலாகத் தங்களது […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் 320 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் 560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.40 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.70 குறைந்துள்ளது.

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

செங்கல்பட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் தி.சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு நகரையொட்டி ஏற்கெனவே அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதற்கோ, உள்ளே பேருந்துகள் வந்து செல்வதற்கோ போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இப்பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். […]

ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு

சென்சார் போர்டு வாதத்தை ஏற்று தீர்ப்பு ஜன. 9ம் தேதிக்கு தள்ளவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில் அன்று தீர்ப்பு தருகிறது நீதிமன்றம். அன்றே படமும் வௌியாக வாய்ப்புள்ளது. ஜனநாயகனுக்கு எந்த தணிக்கை சான்று என்று 9ம் தேதி தீர்ப்பு அளிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா.

ரூ.2 கோடி பணத்துக்காக கணவனை கொன்ற மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தில் உள்ள போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் (35) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி சௌம்யா என்கிற அருணலதா ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், சௌம்யாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியில் சேர்ந்த நந்திபேட்டை மண்டலம் பட்குனா கிராமத்தைச் சேர்ந்த நலேஸ்வரம் திலீப்புடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால் […]

புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ்  திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி  கணேசர் அரசு உதவி பெறும்  கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி […]

டிரம்ப் உருவப்படத்தை எரித்து புதுகையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.08- வெனிசுலா அதிபர் சாவேஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவப் பொம்மையை எரித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், கி.ஜெயபாலன், டி.சலோமி, மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன், […]

எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு வழங்கப்பட்ட புதிய கமிஷனில் இருந்து விலக்கு அளித்து – பழைய கமிஷனை வழங்க வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகையை 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த கூட்டத்தொடரில் அந்நிய […]

பொள்ளாச்சியில் வந்து இறங்கிய கரும்பு-ரேசன் கடைக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

தமிழர் திருநாள் தை திருநாளாம் பொங்கல் விழாவை தித்திப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அறிவிப்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலை கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 […]

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

சென்னை பாலவாக்கத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். கம்பி மீது விழுந்ததில் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக […]

வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் செயற்கை நுண்ணறிவு எல்லைகளைக் கடந்து, மிக முக்கியமாக, நமது பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் வட்டார மொழிகளில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம். வந்தே பாரத் ரயிலில் ஏற்படும் சந்திப்புகள் பெரும்பாலும் இனிமையானவையாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் […]

ஆவின் விலையேற்றம் என்பது முற்றிலும் தவறு… நிர்வாகம் விளக்கம்

தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட […]

தனியார் கட்டுமான நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் ஸ்டெப் ஸ்டோன் எனும் கட்டுமான நிறுவனம் முதியோர்கள் குடியிருக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ளது இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தைக் கட்டி இறுதி காலத்தை நிம்மதியுடன் வாழ விலைக்கு வாங்கி குடியேறினர் ஸ்டெப் ஸ்டோன் நிறுவனம் குடியிருப்பு […]

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வௌியிட்ட முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவைகள்; “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும். இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தெழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் […]

கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அந்த யானை அலங்கரிக்கப்பட்டு அந்த யானை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பாகன்கள் வந்து அந்த யானை அழைத்து வந்தனர். அப்பொழுது அந்த யானை திடீரென மிரண்டது. அந்த […]

ரூ. 3ஆயிரம்..பொங்கல் பரிசு..நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் வரும் ஏப்ரல் […]

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஆதாரில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘MY ஆதார்’ அல்லது ‘M-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம். மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட […]

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலை கடப்பதற்கு சர்வீஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டு இருந்தது. சர்வீஸ் சாலையை கடந்த போது வலது புறம் வரும் வாகனங்கள் கார் ஓட்டுனருக்கு தெரியவில்லை, இதனால் வேகமாக கடந்து விடலாம் […]

சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் […]

புதுமைப் பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலானகண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் மே. சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ந. நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மகளிர் உரிமைத்தொகை ரூ. 2500.. புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தப்படி மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்பேர்து வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உரிமைத்தொகையானது, வரும் 12ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ரூ. 2500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கதக்கது.

மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தார். ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. […]

மதுரை ஜல்லிக்கட்டு-வீரர்கள்-காளைகளுக்கான ஆன்லைன் பதிவு துவங்கியது

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மூன்று […]

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை

இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று முன் தினம் மாலை 17.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.இது நேற்று (06-01-2026) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (07-01-2026), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு […]

ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி…

பாமக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த கையோடு, இன்று மாலை டெல்லி புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் […]

திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179ம் ஆண்டு ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தியாகப் பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் திருவையாறில் காவிரிக்கரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதி எதிரில் ஆராதனை விழா நடைபெறுவது வழக் கம். இதன்படி, […]

”ஜனநாயகன்” தணிக்கை சான்றுக்கு இவ்வளவு இழுத்தடிப்பா?- சீமான்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது தொடர்பான கேள்விக்கு, நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள் முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள் பிறகு […]

அதிமுகவுடன் பாமக கூட்டணி

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி பாமக அன்புமணி இருவரும் சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது… இரு கட்சியினரும் விரும்பி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம் . இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பாமகவிற்கான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம். மேலும் சில கட்சிகள் இணையும். தேர்தல் வெற்றிக்கு அதிமுக-பாஜக , பாமக இணைந்து செயல்படும். ஏற்கனவே உள்ள […]

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார், […]

இபிஎஸ் வீட்டில் அன்புமணி…உறுதியாகிறது அதிமுக-பாமக கூட்டணி?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜன.07) சந்தித்துள்ளார். அன்புமணியுடன், பாமக வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டணியில் பாமகவைச் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டிவரும் நிலையில், இபிஎஸ் – அன்புமணி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அன்புமணி வருகை . ஜெயக்குமார், சி.வி.சண்முகம், […]

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,960க்கு விற்பனையாகிறது . ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு, சமீபத்தில் திருவேற்காட்டில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களை முறையாக அரசு இணையதளத்தில் (Online) பதிவேற்றம் செய்வதற்காக, பயனாளிகள் குமாரசேரி கிராம […]

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தும்பு ஆலையில் இருந்து புகை வந்தது. நேரம் செல்ல, செல்ல புகை அதிகரித்து அங்கு காய வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நார்கள் உள்பட அனைத்தும் தீ […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அமைச்சர் தெரிய்வத்துள்ளதாவது; “சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் 1 முன்பதிவு மையம் […]

உபியில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

உபி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிக்குப் பிறகு, ஜனவரி 6, 2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. மாநிலத்தில் மொத்தம் 15.44 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், வரைவு பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த நீக்கம் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், டூப்ளிகேட் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ளதாக மாநில […]

”இலவச லேப்டாப்” வழங்கியதை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி 06. 01.2026 தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியதை கொண்டாடும் வகையில் ,திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம் பிஷப் கீபர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு , தமிழ் மாணவர் மன்றம் சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளப்பட்டதுபட்டது .மேலும் கல்லூரியில் பயிலும் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மாணவர் மன்றத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.

”கிட்சன்” துவாரத்தில் சிக்கிய திருடன்- காப்பாற்றிய போலீசார்

 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) துவாரத்தில் திருடன் ஒருவன் சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாரே வந்து அவனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்டாவின் போர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவர், தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை […]

“ஜனநாயகன்” படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கலைனா கடும் பின்விளைவுகள் – KS அழகிரி!

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளைக் […]

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்றது. இதில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நீங்கள் வசிக்கும் தெரு, உங்களின் ஊர் எப்படி இருக்க வேண்டும்?, எந்த மாதிரியான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?, தற்போதைய திட்டங்களை மேலும் செழுமையாக்க உங்களின் ஆலோசனைகள்?, மாவட்டத்தைப் பற்றிய கனவுகள் அயலகத் தமிழர்களின் கனவுகள உள்ளிட்டவைக் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ம் தேதி […]

”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக […]

இலவச சித்த மருத்துவ முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய அரசுதலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் 9வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாமினை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து சித்தமருத்துவ மூலப்பொருட்கள் கண்காட்சி மற்றும் பறசிகிச்சை முறை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, சித்த மருத்துவர்மரு. லூர்து மேரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்பதிபு செய்ய […]

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொளக்கட்ட குறிச்சியை சேர்ந்த மாரிசாமி என்பவர் மகன் ராஜேஷ் (25) என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலையில் 2 பேரும் டூவீலரில் தூத்துக்குடி மாவட்டம் […]

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பெருமாள். கூலிதொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவிலும் மனைவியிடம் மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பெருமாளின் மனைவி தனலட்சுமி தனது இரண்டு குழந்தைகளான தேவா (7 ), நீதி (2) இருவரையும் கைகளில் தூக்கிக்கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது […]

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை தாக்குவதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்திலும் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

S.I.R விவகாரம்- முகம்மது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்..!

 மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வரும் 9-ஆம் தேதியில் இருந்து […]

மிஷ்கின் நடிக்கும் சுப்ரமணி – டைரக்டர் யார் தெரியுமா?..

ப்ரிய முடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ள ஆர்.கே.செல்வா (வின்சென்ட் செல்வா), தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சுப்ரமணி’. கிரைம் திரில்லரான இதில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’, ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜித்தன்’ ஆகிய படங்களில் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். மற்றும் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், திவ்யா, ஜாஸ்பர், சுவாமிநாதன் நடித்துள்ளனர். எஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரணவ், பாலாஜி […]

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற […]

கரூர் சம்பவம்…. விஜய்க்கு சிபிஐ சம்மன்

கரூரில் செப்.27ல் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜன.12ம் தேதி டில்லியில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஜி, ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கனவைச்சொல்லுங்க- திட்டம் அறிமுகம்- அமைச்சர மகேஸ்

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் செய்தியார்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவுது.. 15-29 வயதில் உள்ள இளைஞர்களின் கனவுகளைக் கேட்டறிய புதிய கருத்துக் கேட்புத்திட்டம். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம். 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலம் கருத்து கேட்கப்படும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு. இணையதளம் மூலமாகவும் கருத்துக்களைப் பதிவிடலாம். வீடு, வீடாகச் சென்று மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். மக்களின் […]

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்..

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1970 காலகட்டத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77). முக்கியமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.இந்த நிலையில், வயது முதிர்வு […]

காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி. 1998 – 2017 மற்றும் 2019- 2022 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா இருந்துள்ளார். குறிப்பாக 1998 – 2017 காலகட்டத்தில் காங்கிரஸ் சிக்கலான நிலையில் இருந்த நிலையில், வெற்றிகரமாகக் காங்கிரஸை வழிநடத்தி 2004 தேர்தலில் வெற்றி பெற வைத்தவர் சோனியா காந்தி.79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் இவர் […]

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.. தஞ்சையில் விசாரணை

தஞ்சாவூர் தொம்பன்குடிசை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கதக்கத ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறித்த தஞ்சாவூர் இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தளர். ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு […]

கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில் ” என்னும் மாபெரும் திட்டத்தில் 20லட்சம் மடிக்கணிணிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதிஅரசு மகளிர் கலைக்கல்லூரியில்நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு மடிக்கணிணிகளை கல்லூரி […]

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி சந்திப்பு

சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

லேப்டாப் வழங்கிய முதல்வருக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி

தமிழக அரசு “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் உயர்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு கல்லூரி மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் அவர்களின் டிஜிட்டல் கற்றலுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. கல்வி சிறக்க மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மடிக்கணினிகளை காண்பித்து நன்றி கூறிய கல்லூரி மாணவிகள், மடிக்கணினிகள் […]

61 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகத்திற்கு 61 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 61 அதிநவீன பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.

தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்கு சாலையை கடக்க முயன்ற போது பாப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய டிராவல்சில் பயணம் செய்த 16 பேருக்கு […]

மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் […]

தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், தீராத வயிற்று வலியால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள புது குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார் கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் இவருக்கு கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலி […]

மாநில அளவில் கராத்தே போட்டி.. வெண்கலபதக்கம் வென்ற திருச்சி மாணவி

ஜனவரி 04.2026 அன்று சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெண்களுக்கான -54 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற திருச்சி மாணவி S. Kamalayazhini. ( கமலயாழினி). இவர் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமி- ல் மாஸ்டர் R. சுதாகர் என்பவரிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது..

காங்., முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்..

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் . வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு காங்கிரஸ் […]

நயினாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… VSB பதில்

கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்து நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலையில் […]

பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழக்கரை வனஉயிரின சரக அலுவலர் கௌசிகா தலைமையில் வனவர் காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழக்கரை அப்பாத்தீவு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு படகில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் […]

இது செலவு அல்ல; எதிர்கால முதலீடு” – 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கமே திராவிட இயக்கம்” என்று புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 10 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே புது ‘வைப்’ (Vibe): விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய முதல்வர், “புத்தாண்டை புத்துணர்வுமிக்க மாணவர்களிடையே தொடங்குவது எனக்குள் ஒரு ‘பாசிட்டிவ் எனர்ஜியை’ (Positive Energy) அளிக்கிறது. உங்களைப் பார்த்தவுடன் எனக்குள்ளும் ஒரு புது ‘வைப்’ வந்துவிட்டது. ‘உலகம் உங்கள் கையில்’ என்பது வெறும் […]

சரக்கு ரயிலுக்கு ஒதுங்கியபோது நேர்ந்த விபரீதம் – ரயில் இன்ஜின் மோதி தாய், மகள் உடல்சிதறி பலி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதியதில், தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி, கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியம் (45), மகள் மஞ்சு (25). மஞ்சு தனது கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாகத் தாய் பாக்கியத்துடன் வசித்து வந்தார். இருவரும் கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று […]

நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு தெற்கு மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு. அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி. மதுபாட்டில்களை […]

வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும் இருந்துள்ளனர். நேற்று காலை தனது மகனுக்குப் பால் காய்ச்சுவதற்காக பாரதி அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் […]

ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

திருமலை வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? போதையில் வாகனங்களை ஓட்டுகிறார்களா? என்று தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரிடம் மது சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் […]

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ரூ.640 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.640 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.266 க்கு விற்கப்படுகிறது.

உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் பெற்றவர். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல், […]

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..எஸ்ஐடிக்கு 6 வாரங்கள் அவகாசம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜன.9ல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, நாகபட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். ஜன.10ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் […]

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

செந்தில்பாலாஜி தொடர்புடைய வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்கு. சிறப்பு நீதிமன்றத்திழல் நடைபெறும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை துணை மேலாளர் கணேசன் மேல்முறையீடு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு.. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கடந்த 3 தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட‌ ஓய்வூதியத் திட்டம் அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் உதுமான் அலி கூறியதாவது:கடந்த 2006-ல் கருணாநிதி பெறுப்பேற்ற உடன் 53 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். அவரது புதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 -ல் […]

துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் – ருக்ஷானா தம்பதி மற்றும் அவர்களின் 5 குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அஷாப்,14, அமார், 12, அயாஷ்,5, ஆகிய மூன்று குழந்தைகளும், குடும்ப உதவியாளர் புஷ்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே […]

பாஜக-வின் ‘நன்கொடை ஊழல்’ குறித்து- செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு

செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று பா.ஜ.க. கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் […]

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காதர் மொகிதினின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் – நம் அனைவரின் மரியாதைக்குரிய ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொய்தீன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் […]

யாருடன் கூட்டணி? தேமுதிக ரகசிய வாக்கெடுப்பு

 தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்தைப் பொறுத்தே கூட்டணி அமையும்” என்று கூறினார். ராஜ்யசபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது என்றும், ஆனால் கவனம் சட்டமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது என்றும் தெரிவித்தார்.பிரேமலதா மேலும் கூறுகையில், “தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். பொங்கலுக்கு பிறகு […]

நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்து தீவீரமுக்கோணம் அருகே உண்ணாமலை இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாத இடத்தில் உண்ணாமலை கணவரின் அண்ணன் மகனான குமார் மற்றும் அவர் மனைவி கல்பனா மற்றும் உறவினர்கள் சேர்ந்து டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டனர். அப்பொழுது தனது மகன் இல்லாத சமயத்தில் இது போன்று செய்யக்கூடாது என்று உண்ணாமலை அவர்கள் கண்டித்த […]

கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து குப்பனம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகன் விவசாயி அண்ணாதுரை வயது 55. இவரது மகள் தனலட்சுமி வயது 19. குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி நேற்று இரவு அருகிலுள்ள அவர்களது விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அண்ணாதுரை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.கிணற்றில் குதித்த அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் :  முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தனி நீதிபதி உத்தரவில், பாரம்பரியப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் […]

பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் ‘பனை விழா’ நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கள் இறக்கப்பட்டு படையலிடப்பட்டது. வழிபாடு முடிந்ததும், அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்குக் கள் வழங்கப்பட்டது. சிறுவர்கள் கள்ளைப் பருகுவதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த விவகாரம் குறித்துப் பேசிய பனைத் தொழிலாளர்கள், “கள் என்பது போதைப்பொருள் அல்ல, […]

இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் […]

அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது. மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது’ என தஞ்சையில் நடைபெற்று வரும் அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ‘100 நாள் வேலை திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தக் கூடாது. மதுரை, கோவை மெட்ரோ […]

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-வாடிவாசல் அமைக்கும் பணி

அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. இதைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள். முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15-ம் தேதியும், பாலமேட்டி 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் எனப்படும் […]

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, சிறை வளாகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கைதி தற்கொலை செய்து கொண்டதை கவனித்த சிறைக்காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி’ என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மாந்திரீகம் செய்வதாக கூறி மருமகளை கழுத்தறுத்து கொன்ற மாமியார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மாமியாரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29), தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு விருப்பமில்லாததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட கிறிஸ்தோப்மேரி, மருமகளைத் தீர்த்துக் […]

தவெக-வில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் ஐஜி

புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி ராமசந்திரன் புதுச்சேரி முன்னாள் அதிமுக MLA பெரியசாமி,சென்னைமாநகராட்சி சுயெட்சை கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ்,ஆகியோர் தலைவர் விஜய் மற்றும் கட்சி சீனியர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை தவெகவில் இணைகின்றனர் . சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி, முன்னாள் ஐஜி ராமச்சந்திரன் ஆகியோர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன், ஆதவ் […]

ரூ.3000 பொங்கல் பரிசுடன் -ஜன.,8 முதல் 14 வரை விநியோகம்

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை […]

பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்தியாவிலேயே பெண்களுக்கான மகத்தான திட்டங்களை தருவதில் சிறந்த முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர்தான் இருக்கிறார். அதனால்தான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போன்று பெண்களின் செல்வாக்கு இன்று நம்முடைய […]

மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என்று BCCI தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை வடோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் விஜய் ஹசாரே […]

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

உலக நாடுகளின் பார்வை தங்கத்தின் மேல் குவிந்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,00,160-க்கும், கிராமுக்கு ரூ. 60 குறைந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி […]

லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மடத்தூர் பாரத் பெட்ரோலியம் கேஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது அவர் கம்பெனி வெளியே, சர்வீஸ் ரோட்டில் டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் லாரி கதவை தட்டி திறக்க சொல்லியுள்ளார். […]

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் இடிபாட்டுக்குள் சிக்கி பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் சென்ற […]

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் தலைவர் இரங்கல்

மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் – கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.சட்டமன்றம் – சட்டமேலவை – நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்தைப் பெற்ற ‘எல்.ஜி.’ அவர்கள், 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது […]

பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளனர். 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும். இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி […]

வேம்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயிலில் மர்ம நபர்கள் கைவரிசை: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை!

செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மிக பழமையான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இந்த கோயிலில், நேற்றிரவு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து வழிபாடுகளும் முடிந்த நிலையில், கோயிலை அர்ச்சகர்கள் பூட்டி விட்டு சென்றனர். பின்னர் இன்று அதிகாலையில் வழக்கம் போல் கோயிலை அர்ச்சகர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. […]

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: காலையில் குறைந்து மாலையில் எகிறியது – புதிய சாதனை விலையில் விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.257க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு […]

தஞ்சை பெரிய கோவில் ஆருத்ரா தரிசனம்-4 ராஜவீதியில் வீதியுலா நடராஜ பெருமான்

தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம் 4 ராஜ வீதிகளில் வீதியுலாவந்த நடராஜ பெருமான்மும்மாரி மழை பொழிய நெல்மணிகளை தூவி வழிபாடு நடத்திய பக்தர்கள். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் […]

புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்

புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜன.7ம் தேதி வரை அதிகாலை தமிழகத்தில் பனிமூட்டம்

தமிழ்நாட்டில் ஜனவரி .7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜன.5 முதல் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தது.

இந்த ஆட்சியில் மகளிருக்கு நிறைய திட்டங்கள் செய்துள்ளோம்- அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகின்ற 19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மகளிர் அணி தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று […]

”நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை ஊராட்சி செயின்ட்மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” உயர் மருத்துவ சேவைமுகாமினைஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சுகாதார அலுவலர் மரு.எஸ்.ராம்கணேஷ், புதுக்கோட்டை மாநகர் நல அலுவலர் மரு.காயத்திரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தலைவர் 173 படத்தின் இயக்குநர் இவர் தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமான ‘தலைவர் 173’ படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இசை அனிருத் அமைக்கிறார். ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரஜினிகாந்த் இதுவரை 171 படங்களில் நடித்துள்ள நிலையில், ‘கூலி’ அவரது சமீபத்திய வெளியீடு. அதைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.‘ ஜெயிலர் 2’ படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படம் 2024-ல் […]

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு .. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியினை இயற்கை வளங்கள் துறை ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

அமித்ஷா நாளை திருச்சி வருகை.. பிரமாண்ட ஏற்பாடு

புதுக்கோட்டை, திருச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசுகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அந்தமான் தீவுக ளின் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புதுறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு நாளை 4ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மாலை […]

ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்- இந்து அமைப்புகள் கொந்தளிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் கொல்கத்தா அணியில் விளையாட அந்த நாட்டு வீரர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், “வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். […]

தாயாரின் பிறந்தநாளை தங்க கேக் வெட்டி கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா

தமிழ் சினிமாவில் ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, எப்போதும் ஆடம்பரமான விஷயங்களுக்காகவே சமூக வலைதளங்களில் பேசப்படுபவர். சமீபத்தில் தனது பிறந்தநாளைத் தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடி வியப்பை ஏற்படுத்திய அவர், தற்போது தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே பாணியில் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான ஹோட்டலில், 24 காரட் தங்க கிரீடம் பதிக்கப்பட்ட கேக் வெட்டித் தனது தாய்க்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை “தூய […]

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் இலக்கான “2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை […]

1000 அமித்ஷா வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது- திருச்சியில் சீமான்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் : திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதுவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை , இலக்கியம் ,வரலாறு அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் […]

மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா  ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக தனது தாயுடன் தான் நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், சந்தேகத்தின் பேரில் மரியாவின் தாயார் க்றிஸ்டோபர் மேரியிடம் விசாரணை செய்துள்ளார். அதில் தனது மருமகளை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டாக வெட்டி, உடல் பாகங்களை […]

வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார்- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…  மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி […]

வேலுநாச்சியாரின் துணிச்சல்.. ராகுல் புகழாரம்..

விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தை (ஜனவரி 3) முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவருக்குத் தனது வீரவணக்கத்தைச் செலுத்தியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: ஊக்கத்தின் ஊற்று: வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமை த்துவப் பண்பு மற்றும் அவரது தியாகம் ஆகியவை பல தலைமுறைகளைக் கடந்தும் இந்தியர்களுக்கு இன்றும் ஊக்கமளிப்பதாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்திய ராணிகளில் […]

அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என காவல் சார்பு ஆய்வாளர் பணிநியமன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். காவலர்கள் மீதான நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலத்தின் அமைதி, சட்டம் – ஒழுங்கை காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும். போலீசாருக்கு பொறுப்பும் சமூக கடமையும் அதிகமாக இருக்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல்துறையினர் கனிவாக இருக்க வேண்டும். காவல்துறை மக்களின் நண்பன் என்பது வாசகமாக மட்டும் […]

பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 50 பேர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிகயை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்துவிலகி அதிமுக மாவட்ட செயலரரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.விரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நபர்களுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

போலி டாக்டரின் ஊசிக்கு பலியான தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ராஜிகவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல்(34) என்பவர் அதே பகுதியில் வெல்டிங் கடையில் வேலை செய்துவருகிறார். இதனை தொடர்ந்து சக்திவேலுக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சக்திவேல் வீட்டிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக பார்த்திபன்(35)சென்று ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட 20 நிமிடங்கள் கழித்து சக்திவேல் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அவரது தாயார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் […]

கோவை மாநகருக்குள் புகுந்த மான்கள்… ஆச்சரியத்தில் மக்கள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும் மன உயிரின ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. உணவு தட்டுப்பாடா அல்லது வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலா என்ற கேள்வி தற்பொழுது எழுந்து உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி […]

விரைவில்- டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய பலன்..!

‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்விகி, சொமாட்டோ, செப்டோ’ போன்ற ‘ஆன்லைன்’ தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களில் இருந்து உணவு, மளிகை பொருட்கள் வரை வீட்டுக்கு டெலிவரி செய்கின்றன. இந்த பணிக்காக தற்காலிக டெலிவரி ஊழியர்களை பயன் படுத்துகின்றன. இதுபோன்ற டெலிவரி ஊழியர்கள், நாடு முழுதும் 1.27 கோடி பேர் பணியில் உள்ளனர். 2029 – -30ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் என நிடி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு […]

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்…

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்னும் 2 நாட்களில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு […]

ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி: விஜயுடன் கைகோர்த்த முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். பொங்கலுக்கு முன் பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்தநிலையில், ஜே.சி.டி.பிராபகர் தவெகவில் இணைந்துள்ளது ஓபன்னீர் செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக […]

விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தூர் அடுத்துள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு […]

களக்காடு தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் […]

வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்

சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.சுற்றுலா வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (31) என்பவர் ஓட்டினார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் […]

அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி ஊர்வலம் நகர்வலம் வந்து தர்கா அருகாமையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அதிலிருந்து விழா நடந்து வந்தது .இன்று கந்தூரி விழாவை முன்னிட்டு ஜொலிக்கும் மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்தது. பின்னர் தர்கா முன் நிறுத்தப்பட்டு தர்காவில் சந்தனம் […]

அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏராளமான துவரம் பருப்பு மூட்டைகள் நெடுஞ்சாலையிலும் பள்ளத்திலும் […]

மலை சாலையை ஸ்தம்பிக்க வைத்த மண் சரிவு-தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம், தமிழக கேரளாவை இணைக்கும் இயற்கை வளங்களுடன் கூடிய முக்கிய மாவட்டமாகும் மாவட்டத்தில் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை வடக்கு மலை அமைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கேரள மாநிலம் செல்லும் போடிமெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு லேசான சாரல் மலையாக துவங்கி கன மழையாக மாறியது விடிய விடிய கனமழையின் காரணமாக போலி பகுதியில் 73 மில்லி மீட்டர் ( 7செ.மீட்டர் ) மழை பதிவாகினர். மழயின் காரணமாக […]

பழைய ஓய்வூதிய விவகாரம்.. நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்ததாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் […]

தமிழகத்தில் 4 மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 02-01-2026: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோயம்புத்தூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் […]

இது முழுக்க தளபதி படம்-”ஜனநாயகன்”குறித்து ஹெச்.வினோத் ஸ்பீச்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. அரசியல் அவதாரம் எடுத்துள்ள விஜய்யை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத், படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.“முதன்முதலாக விஜய் சாரை இயக்கியது சந்தோஷமான அனுபவம். ‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கினோம். அதனால் […]

”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு […]

செங்கிப்பட்டியில் 19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு […]

திருப்பதியில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது. திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாதம் உலக பிரசித்தி பெற்​ற​தாகும். ஏனெனில், இதன் சுவையே தனித்​து​வம் வாய்ந்​த​தாகும். அரசர் காலத்​தில் ஏழு​மலை​யான் கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு பல வித​மான பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்டு வந்​தன. வெகு தூரத்​தில் […]

குமரகுருபர சுவாமிகள் தலைமையில் 6ம் தேதி கவுமார மடாலய முப்பெரும் விழா

குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கவுமார மடாலய முப்பெரும் விழா ஜன.6″ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4″வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் மற்றும் குரு மகாசந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற திங்கள்கிழமை ஜன. 5-ந்தேதியும், செவ்வாய்க்கிழமை 6-ந்தேதியும் 2 […]

மீண்டும் ரீ ரிலிசாகும் ”நான் ஈ”

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈகா’. தெலுங்கில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு இப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும், மீண்டும் உலகளாவிய பார்வையாளர்களை […]

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டனர்.இதற்கு ஏற்றார் போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய […]

திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் நாளை தொடங்குகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், விழாவைத் தொடங்கிவைக்கிறார். அன்று இரவு சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட பின்னணிப் பாடகி மஹதி, ஜெய ராஜ் கிருஷ்ணன் – ஜெயஸ்ரீ, திருப்பதி ஹரிபாபு குழுவினரின் பாடல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஜன. 4ம் […]

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கப்பத்தான்பட்டிகிராமத்தில் உள்ளகுளத்தில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கிபலி…புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தாலுகாலேணாவிளக்கை அடுத்த கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் பாண்டிச்செல்வி(14) 9 வது படிக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகள் கனிஷ்கா(13). 8 வது படிக்கிறார் .இருவரும்கிராமத்தில்உள்ள வண்ணியன் கண்மாயில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். சம்பவம் தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து பிரேதத்தைகைப்பற்றிவிசாராணை நடத்திவருகின்றனர்.

ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார். இவ்வளவு ஆண்டுகளாக நடந்து வரும் போரை, அவர் 2-ம் உலக போரின்போது, உக்ரைனின் சில பகுதிகளை நாசி படையினர் கைப்பற்றியிருந்த கால கட்டத்துடன் ஒப்பிட்டார். அவர் ஆற்றிய […]

பொள்ளாச்சி ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு… மலர்தூவி வரவேற்பு

கோவை, பொள்ளாச்சி ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையைடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி இன்று பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு […]

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன மஹோற்சவ விழா ஸ்ரீ நடராஜர் ரக்‌ஷாபந்தனம், ஸ்ரீ மாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வர சுவாமிக்கு […]

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினி மற்றும் இயக்குனர் பாலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

11 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில், […]

கோவை ஸ்ரீ நாக சாயி கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி

புத்தாண்டு பண்டிகையொட்டி ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார் . கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபாவிற்கு ருத்ராட்ச மாலை அணிவித்தும்,தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக […]

நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்பு பைப்புகள்- பெரும் விபத்து தவிர்ப்பு

கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர். தொழில் நகரமான கோவையில் மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இன்று பிற்பகல் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஒரு பொலிரோ பிக் அப் […]

6ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுபகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய […]

குற்றால அருவியில் வௌ்ளபெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் குற்றால அருவிக்கு செல்ல முடியாதபடி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றால அருவிகளில் நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் […]

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் […]

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்.

திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு டோக்கன் தேவையில்லை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

7-வது நாளாக போராட்டம்…இடைநிலை ஆசிரியர்கள் கைது

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று 6வது நாளாக போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புத்தாண்டு […]

புத்தாண்டு எதிரொலி: விண்ணைத் தொடும் பூக்களின் விலை – ஒரு கிலோ மல்லிகை ₹2,400-க்கு விற்பனை!

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பூக்களின்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே குண்டு மல்லி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒருசிலர் குண்டு மல்லி விலையை கேட்டு வியப்படைந்தனர்.இதேபோல், ஒரு கிலோ சன்னமல்லி ரூ.1,200, ஜாதி மல்லி ரூ.720, கனகாம்பரம் ரூ.1,000), முல்லை ரூ.1,200, சிறிய சிவப்பு ரோஜா […]

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மழை நிலவரம் (ஜனவரி 1):தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், […]

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ​அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அமைதி, நல்லிணக்கம் நிறைந்த ஆண்டாக 2026 அமையட்டும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025க்கு விடைகொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம். தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது என்றால் […]

வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து […]

புத்தாண்டு அதிர்ச்சி… வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் […]

2026 புத்தாண்டு பிறப்பு: தமிழகம் முழுவதும் களைகட்டிய கொண்டாட்டங்கள்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம்.சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை […]

ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் கவனத்திற்கு… புத்தாண்டு இரவில் காத்திருக்கும் பண மழை

தமிழகத்தில் உணவு பொருட்களை டெலிவரி செய்ய ஜொமோட்டோ, சுவிக்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளது. இந்த ஊழியர்கள் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார்கள். இந்தநிலையில், புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற ஜிஐஜி நிறுவனங்கள் அதன் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வை அறிவித்துள்ளன. இன்று மாலை 6 – நள்ளிரவு 12 மணி வரையான பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு […]

நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நிதி நிறுவனத்தில் 350 பேர் மாதாந்திர சீட்டாக ரூ.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தவணையாக செலுத்தி உள்ளனர்.6 மாதமாக முதிர்வு தொகையை தராமல் காலம் தாழ்த்திய கார்த்தி 2 மாதங்களுக்கு முன் தலைமறைவாகி […]

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முழு கரும்புக்கு தோராயமாக ரூ.38 வீதம் செலவினம், வெட்டுக் கூலி உள்பட கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட […]

ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது:

ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியது அவர் பதவிக்காக அல்ல அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக முறையில் போராடுகிற அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் அதிகரிப்பதாக […]

சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மாலை வரை தரிசனம் தொடரும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் […]

நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம்

அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force DGPயாக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணியிட மாற்ற அறிவிப்புபுத்தாண்டை முன்னிட்டு, தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலில் ஐஏஎஸ் […]

டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு. Armed Force DGP யாக நியமனம். ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம். சிபிசிஐடி ஐஜி அன்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம். ஆவடி கமிஷனர் சங்கர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் மாற்றம். தென்மண்டல ஐஜி பிரேம் […]

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் அனுமதி கொடுக்காததன் காரணமாக பல்வேறு பொது இடங்களில் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 26ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27ம் தேதி எழும்பூரில் […]

ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மாவட்டத்தில் புத்தாண்டு SP-1, ADSP-1, DSP-7, Inspr – 25 மற்றும் 530 காவலர்கள என மொத்தம் 564 காவல அதிகாரிகள்/ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு […]

நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெற இருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 1991ல் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வெள்ளித்தேர் சேதமடைந்த நிலையில் திமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் 25 வயது மகனுமான ரையான் வதேரா , புகைப்படக் கலைஞராகவும் விஷுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாத்தா ராஜீவ் காந்தி மற்றும் மாமா ராகுல் காந்தி பயின்ற டேராடூன் டூன் பள்ளியில் […]

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் ஜனவரி 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு அனுப்பிய காதலன்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து சுமதியை கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் ஏற்காடு–குப்பனூர் சாலையிலுள்ள 600 அடி பள்ளத்தில் உடலை வீசியதாக போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் […]

கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

சென்னை, ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினர் அவரை எச்சரித்தனர். இருந்த போதிலும் எதையும் காதில் வாங்காத அவர், இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் சினிமா பாணியில் இறங்க முயற்சி செய்தார். அப்போது திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்ததால் அந்த இளைஞரும் கீழே விழுந்தார். […]

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை இறக்கி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அவரை பட்டாகத்தி மற்றும் கட்டையால் […]

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், […]

13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள், 1 ஆண் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்; சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மும்பை […]

”சிறை ” படத்தை பாராட்டிய மாரிசெல்வராஜ்..

சிறை படத்தை பார்த்த மாரி செல்வராஜ் , பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். aஅப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், […]

முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த அக்பர் அலிகாவிரி ஆறு கம்பரசம் பேட்டை படித்துறையில் குளிக்க செல்வதாக கூறி சென்றார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து மனைவி ஜெரினா பேகம்காந்தி மார்க்கெட் போலீசில் […]

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் சத்துணவு ரேவதி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ படம் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். […]

பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன்.என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள். 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங் கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா?. கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே. எங்கள் […]

கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி விதிகளை மீறி சில கல்குவாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சதீஷ்குமார் நிறுவனத்தால் 1.46.25 […]

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலலோடு, இன்று 30/12/2025 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, இணைப்பு சக்கர ம் பொருத்தப்பட்ட 24 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 சர்க்கர நாற்காலிகளும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , *புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா,மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்ஆகியோர் […]

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறை வெடிகுண்டு மிரட்டல்-

கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். […]

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் டெங்கு உயிரிழப்புகள் கடுமையாக குறைந்துள்ளது, இது பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கும், டெங்கு விழிப்புணர்வுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கஞ்சா தமிழ்நாட்டில் ஜீரோ என்ற நிலையில் உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது, போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித் […]

திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நான்கு சிறார்களும் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்த வடமாநில இளைஞர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.27.12.2025 அன்று, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே. சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் […]

வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் […]

நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில் மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வீட்டை புதுப்பித்து 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து கொண்டாடினர்.அனைவரும் சேர்ந்து தங்களது மூதாதையர்கள் கட்டிய வீட்டின் முன்பாக நின்று நிழற்படத்தையும் எடுத்து மகிழ்ந்தனர்.

விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

திருநெல்வேலி மாவட்டம், விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் விளைவிப்பதும், வளர்ப்பு பிராணிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனவன்குடியிருப்பைச் சார்ந்த விவசாயி கல்யாணராமன் (57) என்பவரது விளைநிலங்களில் புகுந்து […]

மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு பெட்டியில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பேரனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.தனது பாட்டியிடம் மது குடிக்கப் பணம் கேட்டு அந்த இளைஞர் தகராறு செய்துள்ளார். […]

திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ – முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது ‘பவர்புல்’ ஆக இருக்கிறது. ‘விமன் பவரில்’ (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் ‘பவரு’க்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், ‘ஹீரோ’. அந்த ‘ஹீரோ’வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360 குறைவு

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை இதற்குக் காரணமாகும். தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலையும் இந்தாண்டு உயர்ந்தது. வெள்ளி விலை இந்தாண்டு சுமார் 181% உயர்ந்துள்ளது.. தங்கம் விலை இந்த மாதம் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கி புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய […]

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

 சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டது. தங்கம் திருட்டு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு!

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப் பூ ரூ.850க்கும் கனகாம்பரம் ரூ.1000க்கும் பிச்சிப்பூ ரூ.130க்கும் அரளி ரூ.300க்கும் விற்பனை ஆகிறது.

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]

கோயில்களில் முதல் மரியாதை-எப்போதும் தெய்வத்துக்கு தான்… உத்தரவு

கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் […]

”பராசக்தி” படம் பயங்கரமா வந்திருக்கு-ஆகாஷ் பாஸ்கரன் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். படத்தின் இன்டர்வல் பிளாக் ‘பாஸா ’ போன்ற உச்சத்தை தொடும் என்று கூறிய ஆகாஷ் பாஸ்கரன், “இன்டர்வல் பிளாக் பாஸா மொமெண்ட் போல இருக்கும். படத்தின் ஹைலைட் தருணங்களில் […]

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ்- 4 சிறுவர்கள் கைது

திருத்தணி, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேசனில் ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட வட மாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 சிறார்கள். தனது கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வடமாநில இளைஞரின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை அவர்களே தன் இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே வடமாநில நபரை […]

லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவர்கள் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டுபைக்கில் காரைக்குடி யைநோக்கிசென்றபோது திருமயம் தாமரைக்கண்மாய் அருகில்டாரஸ்லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இதுதொடர்பாகதிருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் சிக்கிய கம்பி

ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் துருபிடித்த கம்பி சிக்கி கொண்டதால் அதிர்ச்சி சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் தஞ்சை டவுன் கரம்பை கிழக்கு தெருவில் மூன்று சக்கர வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட 45 ரூபாய் மதிப்பிலான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை அதே தெருவில் வசித்து வரும் காவியா என்ற சிறுமி வாங்கி சாப்பிட்டு உள்ளார். அப்போது தொண்டையில் ஏதோ பொருள் ஒன்று சிக்கி கொண்டு வலியில் துடித்தார். பின்னர் தொண்டையில் கைவிட்டு அந்த பொருளை […]

புதுகை- மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மரியாதை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் திருக்கோகர்ணம் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தம்பதியர்களுக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து வேஷ்டி, சேவைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகரமேயர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழு த்தலைவர் தவ.பாஞ்சாலன்,மாநகராட்சி கவுன்சிலர் கனகம்மன்பாபுமற்றும் அறநிலையத்துறையின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு […]

பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டல குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- எல். ரெக்ஸ் (காங்கிரஸ்): கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாட்டு […]

ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி இரவு ஒரு பிறந்தநாள் விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், […]

பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது- டிடிவி

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். “தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி குறித்து அறிவிப்பேன். பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது” என்று தெரிவித்தார். கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று உறுதியாக கூறினார். தவெகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் “விஜய்க்காக உயிரையும் விடுவேன்” என்று கூறியது குறித்து பேசிய தினகரன், “அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த போது தனக்கு ஒரு […]

10 அமைச்சர்கள் முன்னிலையில் நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை

10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், கோவி.செழியன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். தமிழ அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். […]

போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

கும்பகோணம் மகாமக குளம் அருகே சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துச் வந்த தனியார் மினி பேருந்தை வழிமறித்து உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் உதவி ஆய்வாளர் எனக் கூறி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை நடுரோட்டில் தாக்கியதால் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கும்பகோணம் அருகே மகாமக குளம் பகுதியில் சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு வந்த தனியார் மினி பேருந்து ஒன்று வந்துள்ளது அதன் எதிரே […]

அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார். சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு… உலகத்தை ஒரு பிள்ளைக்கு தந்தை என்ன செய்வாரோ அதைவிட அதிகமாக நான் செய்துள்ளேன். நான் வளர்த்தவர்களை வைத்து ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னை வெட்டிகூட வீசியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்துகின்றனர். என்னை விட ஜி.கே. மணியை அவமானப்படுத்துகின்றனர். […]

விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற […]

அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது; எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அன்புமணி செய்தது பச்சை துரோகம். ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்.பாமக இயக்கத்தை களவாடிவிட்டு, யாரின் உரிமையை மீட்க செல்கிறீர்கள்? ஐயாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற நீங்கள், […]

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி

சிவகங்கை , கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு 2014ம் ஆண்டு முதல் இதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல, அருகில் உள்ள கொந்தகை, அகரம்,மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை […]

நயினார் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை.. கனிமொழி பதிலடி

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாட்டில் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வரக்கூடிய மகளிர் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் மதியத்திலேயே புறப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டு, இரவு முடிவதற்குள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் மாநாட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று […]

பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர் – 2 அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவடுகுறிச்சி‌ திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் […]

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். திமுக […]

தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்-பிரேமலதா பேட்டி

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் நூற்றுக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். காலை […]

விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன் மரணமடைந்தார் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை தமிழக முழுவதும் அனுசரித்து வருகின்றனர் இதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள காரங்குடா மீனவர் கிராமத்தில் விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான […]

புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ளஇரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள், போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புகுறித்த பிரச்சினை களை என்னிடம் தைரியமாக கூறலாம். அதற்கான நடவடிக்கைகள்உடனடியாக எடுக்கப்படும். தொடர்பு கொள்வதற்கு 9789918079 என்ற வாட்ஸ்அப்எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் தெரிவிக்கலாம் . இவ்வாறு கூறினார்.

கரூர் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம், கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 10,441 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 11,760 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதில் 11,240 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 400 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 50 கன அடியும், […]

பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் தவெக-வில் இணைவார்கள்- செங்ஸ் தகவல்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வர முடியும் – செங்கோட்டையன் தகவல் .. பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் த.வெ.க வில் இணைவார்கள் பொறுத்து இருந்து பாருங்கள் – செங்கோட்டையன் உடைத்த ரகசியம் !!! எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு திரண்ட கூட்டம் போல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கூடுகிறது – கோவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி !!! 18 வயது முதல் அனைத்து தரப்பினரும் தமிழக […]

மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்தில் சிக்கிய 193 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 13 […]

மது போதையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு தர்ம அடி.. கைது

குளித்தலை அருகே கழுகூரில் மது போதையில் 7 வயது சிறுமையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து போலீசார் வசம் ஒப்படைப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுவூர் ஊராட்சி மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 23. இவர் இன்று கழுகு எஸ். வலையப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது குடிக்க சென்றுள்ளார். மது குடித்துவிட்டு அதீத போதையில் வந்த அவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 […]

புதுகை அருகே 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம்..

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்கள்பக்தர்களால் 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி படத்தை அலங்கரித்து சுப்பிரமணியர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியாக உலா வந்தது. திரளான ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். குருசாமி ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தலைமை வகித்து நடத்தினார். நிறைவில் அறுசுவை அன்னதானம் நடந்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ,2026ன் சிறப்பு முகாமினைஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா உள்ளார்.

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்

ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகளுடன் ஆதார் இணைப்பு சரிபார்க்கப்படும். ஜனவரி 12 முதல், ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

சினிமாவில் வாய்ப்பு… நடிகர் சூரி கண்ணீர் மல்க நெகிழ்ச்சி

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘மாமன்’ படத்திற்குப் பிறகு, அவர் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு விழாவில் பேசிய சூரி…., சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபோது ஏற்பட்ட வலிகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கண்ணீர் மல்க நெகிழ்ச்சியடைந்தார். தனக்கு டிரஸ் அளவு எடுக்கும்போது கைகள் நடுங்கியதாகவும், திடீரென வேறொருவர் பரிந்துரைக்கப்பட்டதால் சட்டையைக் கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார்.

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி.. அமைச்சர் ரகுபதி

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் மட்டும் போதுமா? அதனை நிர்வகிக்க கட்டடம் வேணாமா?. சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என்று “இவ்வாறு தெரிவித்தார்.

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது.

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அவரது பயணத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். பல்கலைக்கழகத்தின் […]

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன் திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வெ.பிரபாவதி, புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஉதவி இயக்குனர் ந.பஞ்சராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

2025ம் ஆண்டில் கூகுள் புதிதாகப் பணியமர்த்திய AI மென்பொருள் பொறியாளர்களில் 5-ல் ஒருவர் (சுமார் 20%) அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வெளியேறியவர்கள் ஆவர். ஓபன்ஏஐ , மெட்டா, மற்றும் ஆந்தோபிக் போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த திறமையாளர்களைத் திரட்ட கூகுள் இந்த வியூகத்தைக் கையாண்டுள்ளது. கூகுளின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் நேரடியாகவே பல முன்னாள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏன் […]

கணவன் கண்முன்னே பஸ்சில் சிக்கி மனைவி பலி.. பரிதாபம்

கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயனித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை […]

ராமநாதபுரத்தில் 30 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 55 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும்; வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் […]

அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்… திருமா., பேட்டி

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருச்சியில் திருமாவளவன் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் […]

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல கழக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்;- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க மாண்புமிகு […]

எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும்– அன்புமணி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசினார். “விரைவில் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பலமான, மெகா கூட்டணி அமையும்” என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் பாமக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நீதிமன்ற […]

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அத்துடன் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி மனுவும் சமர்ப்பித்தனர். போட்டியின் பாதுகாப்பு, அனுமதி […]

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32). இவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும், அதை தனக்கு தெரிந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு முயல்வதாகவும், பள்ளிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி கவுதம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ ரஞ்சித்குமார், வெற்றிவேல் ஆகியோர், நேற்று அதிகாலை […]

இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலே இந்த சங்கத்திற்கான தனி ஒரு மாத இதழ் கிராமப்புற பாட்டாளி என்கிற இதழ் வெளியிட்டு விழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கலந்து கொண்டார்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி […]

நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் கூடுதல் சிறப்பம்சங்கள். சீமான் தனது உரையில், “எந்தக் கொம்பனுடனும் கூட்டணி இல்லை” என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும், வழக்கம் போல் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு (117 பெண் வேட்பாளர்கள்) வழங்கப்படும் என்றும் அறிவித்தார். […]

சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் மாலை யானை கூட்டத்துடன் வந்த ஒரு குட்டி யானை சேற்றில் சிக்கியது. அந்த குட்டியை மீட்க தாய் யானை மற்ற யானைகள் முயன்றன. ஆனால், சேற்றில் இருந்து வெளியே இழுக்க முடியாததால், குட்டி யானை இறந்துள்ளது. […]

பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில்; “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் (காஞ்சிபுரம் மாவட்டம்) கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். […]

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது நலமுடன் உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜனாதிபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார். இதனை தொடர்ந்து தனது பயணத்தின் ஒரு பகுதியாக 28ம் தேதி (நாளை) கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணிக்க உள்ளார். தொடர்ந்து 29-ந்தேதி ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி […]

ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

தஞ்சாவூரில் உயிரிழந்த இளைஞரின் இதயம் சிறுகுடல் உள்ளிட்ட பாகங்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயதான இளைஞருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து உடல் உறுப்புக்கள் குறுகிய நேரத்தில் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு சென்னையில் உள்ள எம் ஜி எம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ளடி ஜி வைஷ்ணவா தனியார் கல்லூரியில் உள்ள எலிப்பாடில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு உடல் உறுப்புகள் அமைந்த கரையில் உள்ள mgm மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. […]

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது பசுபதீஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய ஒளி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு ஒளிவீசுவதால், சூரிய […]

இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மீண்டும் ஜனவரி 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன

ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். சங்கராபுரம் மக்களுக்காக புதுபாலப்பட்டில் ரூ.18.50 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் கட்டடம் […]

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.274க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் நடத்தபட்ட நிலையில், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட […]

விஜய் ஆண்டனி ரசிகனாக மாறிய சிவராஜ்குமார்

சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பதிப்பு முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் சிவராஜ்குமார் அவர்களின் அர்ப்பணிப்பு, உபேந்திரா மற்றும் ராஜ் B. ஷெட்டியின் நடிப்பு, அர்ஜுன் ஜான்யாவின் இயக்கம் ஆகியவற்றை விஜய் ஆண்டனி பாராட்டினார். நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது… நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு […]

திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பழனியாண்டவர் கோவில் வழியாக 700க்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு பாதையில் 240க்கு மேற்பட்டவர்களும். மலைக்கு மேல் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் மலை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 3 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி சிக்கந்தர் பாஷா […]

யார் தீய சக்தி-நல்ல சக்தி என 2026ல் தெரியும்-விஜய் வசந்த்

யார் தீய சக்தி – நல்ல சக்தி என 2026 தேர்தலில் தெரியவரும். ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டனின் கோரிக்கையாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டி. தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு 40% – மத்திய அரசு 60% நிதி பங்கீடு என […]

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். குடும்ப நல்லுறவை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்றும் கட்சியை சீர்குலைக்க பல்வேறு நாடகங்களை நடத்தினார் ஜி.கே.மணி என்றும் கே.பாலு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்றொன்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையில். 2017-இல் இரு அணிகளும் இணைந்து இரட்டைத் தலைமை அமைப்பை உருவாக்கினாலும், 2022-இல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு […]

நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் (24ம் தேதி) இரவு சுமார் 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகம் அருகே தனது சக ஊழியர்கள் இருவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம […]

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்; “திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுவது போன்ற அரசு அல்ல இது. மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய திறன் கொண்டது திமுக அரசு. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா. பொருளாதார வளர்ச்சி, […]

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் பேரூராட்சிக்கு உரிய நிதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.‌ இதனால் கடந்த நான்கரை ஆண்டு காலமாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மத்திய மாவட்ட செயலாளரும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் தலைமையில் […]

பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல், கொக்கு, நாரை, புறா,வாத்து உள்ளிட்ட உணவு பறவைகளிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் களவு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து […]

சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். இந்த நடத்தை செய்தியாளர்களிடையே சிரிப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் சீமான் அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாமல், […]

மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் […]

அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு தாக்கல் நடைபெற்ற நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளின் தொடர் வேண்டுகோளை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு பணியை மேலும் விரிவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும். புதிய அறிவிப்பின்படி, […]

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, திட்டம் குடிநீர் குழாய் மற்றும் சாலை அமைப்பதற்கு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் […]

ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

தமிழக சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் மு. அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கூட்டத்தொடர் குறித்த விவரங்களை வெளியிட்டார்- ஜனவரி 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுவார். தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் […]

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரமணன் அறை […]

ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீமாணிக்கவாசகர் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்து வீதி உலா நடந்தது. திரளான மக்கள் வழிபட்டனர்.

பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழாவானது 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த 200 பேருக்கும் ஏலம் […]

ராமர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

‘கேபிஒய்’ ராமர் தனது இயல்பான காமெடி டைமிங், யதார்த்தமான நடிப்பு, மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல், “கோமாளி, சிக்ஸர், அப்பன் சுப்பன்” போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது “சற்று நேரத்தில் தீர்ப்பு” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். டிபிகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை வேலன் எழுதி இயக்குகிறார். இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி […]

இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள் 

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவம்பர் 3ம் தேதி ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிப்பு. இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அபராதத் தொகை செலுத்தப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பைபர் படகுடன் 4 பேரும் தாயகம் […]

6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு. முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற நேரத்தில் 5 வீடுகளில் கொள்ளை…30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலை முதலே தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.இந்நிலையில், பிரார்த்தனைக்கு சென்றவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மொத்தம் 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக […]

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதில், அரசு பஸ்சின் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. கடலூர் திட்டக்குடி அருகே நேற்று அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 2 கார்களில் பயணித்த 9 பேர் […]

பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து, கிருமிநாசினிகள் தெளிக்கவும் தமிழக சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த […]

வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்…நேரில் பார்த்த மனைவி செய்த சம்பவம்

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் இருப்பதாக அசாமில் இருந்த மனைவி ஜிண்டிக்கு தகவல் கிடைத்தது.அவர் குழந்தையை பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு கோவைக்கு வந்தார். கணவருடன் கடந்த […]

ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஷீர் (36). இவர் அப்பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் […]

கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. […]

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக 272 உயர் ரக டிரோன்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.15 கோடி.இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டிரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி

சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள் விற்பனை செய்வதாக வெளியான தகவலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது.இந்தநிலையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்துள்ளது. இதை அங்கிருந்த […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த […]

விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் விரக்தியில் அஜிதா ஆக்னல் 15-ம் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க.வினர் தன்னை திமுக கைக்கூலி என திட்டியதால் மனமுடைந்து அஜிதா தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாட புத்தகங்கள் விநியோகத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது

2025-26-ம் கல்வியாண்டுக்கான 3-ம் பருவத்துக்கு பாடப் புத்தகம், நோட்டுகள் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவது. பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:-மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதனை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது, அந்த விவரத்தினை […]

திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். திட்டக்குடி அருகே நேற்று இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மாலை சென்று […]

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…

கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தங்கத்தைவிட அதிவேகத்தில் வெள்ளி உச்சம் தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு […]

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, கோவை உள்பட அனைத்து இடங்களில் நள்ளிரவு முதல் சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கி நடந்து வுருகிறது. உலகில் அதிகமானவர்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. நம் நாட்டிலும் கணிசமான அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் […]

ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு (QR Code) ஸ்கேனரை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.(22.12.2025) NCRP-2 (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. […]

2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி விபத்து…உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், விபத்தில் காயமடைந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். […]

முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு மருத்துவ துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13 ஆயிரம் பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.இந்த போராட்டம் சமீபத்தில் தீவிரமடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் […]

தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு அருகே உள்ள கவரட்டி தீவுப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல் படையினர், மீனவர்களை கண்டதும் விரைந்து சென்றனர். தடை […]

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார்.மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதுபோதையில் மனைவியிடம் மதன்ராஜ் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இலக்கியா அருகே […]

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில் மீனவர்கள் தங்களுக்காக மதிய உணவை படகில் சமைத்துக் கொண்டிருந்தனர். இதில், எதிர்பாராத விதமாக திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் 4 பேரும் படகிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனைக்கண்ட, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 […]

கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றிரவு முதல் சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வழங்குவர். சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை, அண்ணாசாலை, சின்னமலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் பாலமுருகன் தனது வேலையை ராஜினாமா செய்த நிலையில், தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் […]

ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்தலைமையில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர செயலாளர்கள் எம்.லியாகத்தலி,ராஜேஷ், மு.க.ராமகிருஷ்ணன், சண்முகம் , மணிமாறன் , (திமுக) , பெனட்அந்தோனிராஜ் (காங்கிரஸ்) […]

சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் […]

மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் […]

தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத் தலைவ ர் அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், துணை மேயர் லியாகத்தலி,மற்றும் கழக நிர்வாகிகள் த.சந்திரசேகரன், மதியழகன் , சண்முகம் ,ராஜேஷ், செந்தாமரை பாலு , கவிஞர் மரிய எட்வின்,ஆனந்த்,சதீஷ், ரவிச்சந்திரன் […]

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ல் இருந்து தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியின் […]

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. கரூர் மாவட்டம், கடவூர் அருகே ராஜலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ஜானகி தம்பதியினர் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் […]

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை, நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கையின் மயிலிட்டி […]

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், அதன் பின் அங்குள்ள கலைஞர் […]

விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

பட்டுக்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் திரு நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவ சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்குவதற்கு கட்டுமான பணிகளை துவக்கி வைப்பதற்கு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். அவர்களோடு தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் […]

புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர்கேகே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார், இந்த   நிகழ்வில் மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில்,மாநகர […]

சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இதானி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், […]

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம். வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய […]

தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த நபர், போலீசாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றார். இதனையடுத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற நபரை விரட்டி பிடித்து அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டாங்கில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதில் கட்டுகட்டாக […]

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என விமர்சித்தார். பியூஸ் கோயல் தமிழக அரசியல் நிலை அறியாமல் பேசுவதாகவும், அவரது முயற்சி வெற்றியடையாது என்றும் கூறினார்.

தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

தமிழகத்தில் காபி தூள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோவிற்கு ரூ.980-லிருந்து ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளதால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் காபி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான பிரேசில் மற்றும் வியட்நாமில் இயற்கை பேரிடர்களால் தோட்டங்கள் அழிந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஒரு கிலோ காபி தூள் ரூ.500-க்குள் இருந்த நிலையில், தற்போது அதன் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

41 பேரை கொன்ற விஜய்.. தூத்துக்குடி பாதிரியார் பரபரப்பு பேச்சு

திருச்செந்தூர் மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வன்முறையாக நடிக்கும் நடிகர்களுக்கு (நடிகர் விஜய்) மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். “கரூரில் 41 பேரை கொன்ற ஒருவனுக்கு ஆதரவு அதிகரிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் சினிமா மோகத்தை தவிர்த்து பாரம்பரிய விழுமியங்களை போற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  இங்கு கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட  30- ஆசிரியர்கள் இங்கு  பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன்பாக கரி தூள் கொண்டு நட்சத்திர வடிவில் கோலமிட்டு,  அதன் நடுவில்  மஞ்சள், குங்குமம், மரக்கட்டை  பொம்மை  மற்றும் முட்டை  வைத்து மாந்திரீக பூஜை […]

சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனத்திறக்கத்திற்கும் உட்பட்ட 16வது கொண்டை ஊசி வளைவில் இரவு 7 மணி அளவில் சாலை தடுப்புச் சுவர் ஓரத்தில் நீண்ட நேரம் கொய்யாரமாக அமர்ந்திருந்த காட்சியை நேரில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கரடி ஒன்று அப்பகுதியிலேயே உலா வருகிறது மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் சாலையின் தடுப்புச் […]

சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது அணையாகும். மேலும் தற்போது மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அணையின் மூன்று செட்டர்கள் பழுது நீக்கி புரணமைப்பு பணிகள் பல கோடி ரூபாயில் நடைபெற்ற வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் வரும் மே […]

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு- திருச்சி க்ரைம்

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55) இவர் கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள் இவரை வழிமறித்து அவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அந்தப் […]

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் உதவி கலால் ஆணையர் திருமால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்றவருக்கு […]

மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து முதல்வர் தனது கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 14-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் […]

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ்பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரது 100-வது இசைப் படமாகும். 1960-களில் நடந்த […]

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும், என்னென்ன பொருட்கள் வழங்கப்படுமா? ரொக்கப்பணம் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் மேலோங்கியிருக்கிறது. இம்முறை சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் (Pongal Gift) ரொக்கப் பணம் 3000 கொடுக்கப்படும் என்றும், 5000 கொடுக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு அரசிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் பொங்கல் பரிசுத் […]

எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”, “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” ஆகிய நூல்களை வெளியிட்டு வைத்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூல் வெளியீட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தீரர்கள் […]

5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. நடப்பாண்டு விருதுக்கு தேர்வு […]

பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்பொழுது […]

தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரில் பள்ளிக்குச் செல்லும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தான் அணிந்திருந்த சுமார் ரூ.15,000 மதிப்பிலான வெள்ளி கால் கொலுசை எதிர்பாராதவிதமாக வழியில் தவறவிட்டுள்ளார். இதைக் கண்டெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த காஜா என்ற நபர், அதனை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு அட்மின் அபுதாகிர் இடம் வழங்கினார். சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு இயங்கி வரும் ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு உடனடியாக இந்தத் தகவலைத் தனது அனைத்து வாட்ஸ்அப் […]

யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்பி பேட்டியில் கூறியதாவது.. சென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் […]

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைர‌அபய ஹஸ்தம் […]

SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்தன. இதன் நோக்கம் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்குவதாகும். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்களை நீக்குவது இதன் முக்கிய நோக்கம். SIR பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19, 2025 அன்று […]

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]

தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது.

ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்…ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி […]

புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி […]

ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியின் நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் […]

தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரே நீடிக்க வேண்டும். ரயில் கட்டண உயர்வை பரிசீலித்து மத்திய அரசு குறைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5000 வழங்க நடவடிக்கை வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக வைத்த அதே […]

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகளான ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( […]

மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில், கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ள “45:தி மூவி” வருகிற 9 ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார்கள் […]

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., “தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் அறிக்கை அமையும்” என்று உறுதி அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 2026 தேர்தல் அறிக்கையில் பின்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்: தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை […]

வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தினை திறந்து வைத்து, காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் […]

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

தமிழக்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் 640 உயர்ந்தது. மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,560க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் 2 முறை தங்கம் உயந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அனைவரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மயக்கம் ஏற்படவே அருகே உள்ள பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலை மயக்கத்துடன் வாயில் நுரை தள்ளியவாறு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். […]

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவராக இருப்பவர் பி.ஆர் பாண்டியன்.இவர் திருவாரூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்சிசி நிறுவனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது .அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அதில் நீதிமன்றம் அவரது தண்டனையைநிறுத்தி வைத்தது. அதை தொடர்ந்து இன்று பிஆர் பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது தேசிய […]

குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அந்த பணத்தை வைத்து வீட்டை குத்தகைக்கு எடுத்தார். பிறகு அடகு வைத்த நகையை மீட்பது தொடர்பாக இருவருக்குள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த வைரமடை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் . ரேவதி தனக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை பண தேவைக்காக கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜா மணி என்பவரிடம் […]

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. அமைச்சர் மாசு

சென்னை :  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. சம ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதிய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்துகொண்டு, வெயில், மழை என எந்த வானிலையிலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்ட குழுவினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் மற்றும் […]

விஜய்க்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் ? என தெரியல.. சரத்குமார் ஸ்பீச்

சென்னை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். சரத்குமார் கூறியதாவது: “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஆனால், பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை மாற்றியமைக்க பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்கு விட்டுக் கொடுத்து விடுவேன். அதனை தொடர்ந்து விஜய் குறித்து அவர் பேசுகையில் ” அவருக்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் […]

நிச்சயம் ஒரு ஔி பிறக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தவெக கட்சித் தலைவர் விஜய் அவர்கள் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பேராயர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு வழங்கினார் விஜய். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் […]

பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப்பள்ளி வாசல் காரணக்கடல் கருணை மகான் ஹஜ்ரத் சம்சுல் உழும் செய்து நசுருதீன் வலியுல்லாஹ் அவர்களின் தர்கா 5 38 ஆம் ஆண்டு மாபெரும் பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவிலிருந்து பல்லக்கு ஊர்வலமாக புறப்பட்டது அதில் மயிலாட்டம் புலியாட்டம் வேடம் அணிந்து ஊர்வலத்தில் வந்தனர் அதோடு நாட்டிய குதிரைகள் […]

பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் விளையாட்டு மேம்பாடு அணி மற்றும் பொள்ளாச்சி வடக்கு நகர திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்,சமுதாய சமபந்தி விருந்து,கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இந்நிலையில் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில்,பொள்ளாச்சி வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொதுமக்களிடையே திமுக அரசின் […]

திமுகவின் டூல் – ஹிட்டாக தான் விஜய் செயல்படுகிறார்.. அர்ஜுன் சம்பத் விமர்சனம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன்ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் […]

குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பேராயர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… சமூக நல்லிணக்கத்தை 100% பாதுகாப்போம். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கதை விதைக்கும். வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்தையும் ஒன்றாக கொண்டாடுவது தமிழ்நாடு. துரோகிகளை […]

68 நூலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை- ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டது. உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம் ஆகிய 3 புதிய காவல் உட்கோட்டங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 […]

MGR-ஐ போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது- நயினார்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. விஜய் கட்சி தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்யின் நோக்கம் தி.மு.க. இருக்கக்கூடாது என்பதுதான். தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தால் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து விஜய் செயல்பட்டால் நல்லது. எம்.ஜி.ஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது. வரும் தேர்தல் எங்களுக்கு […]

நண்பரே மன்னிக்கவும் தப்புதான் – செல்லூர் ராஜு பதிவு

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் செல்பி எடுப்பதுபோல்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பதிவுக்கு கீழே, “ஏ.ஐ.-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது […]

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வே. சரவணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் , வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் பாபு, நடராஜன்,துணை மேலாளர் கள் ராமநாதன், புகழேந்தி ராஜ், கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஹரித்,சாலை போக்குவரத்து நிறுவனம் செல்வம், மற்றும் போக்குவரத்து […]

திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி, வீட்டு வசதித் துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி , செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற […]

நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!

டில்லி இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. 2024-25 நிதியாண்டில் மொத்த செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், குறைந்த அளவிலான […]

நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான், சட்டசபை தேர்தலில், சரிபாதியாக 117 இடங்களை, பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகிறது.போட்டியிட, தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என வருத்தம் இருக்கலாம். களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை சமூகத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். கொடுக்காமல் விட்டால், விமர்சனங்கள் […]

கிறிஸ்துமஸ்-புத்தாண்டிற்கு சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும். ஈரோட்டில் இருந்து […]

இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு

சென்னை-புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் எதிரிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். “2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் திருவிழாவுக்கு தயாராவோம்” என்று அழைப்பு விடுத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக […]

கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஓட்டுநர் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கம் விலை சவரன் ரூ.99,840க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.12, 480-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231-க்கும் விற்பனையாகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை…சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து டிச.23, 24ம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24ம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24ம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மான்ஜே என்பவர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன், வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக […]

மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 11ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் 2022ல் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். […]

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.சமீபத்தில் வெளியே சென்று வந்த கைதி மூலமாக வாங்கி வந்த கஞ்சாவை சிறைக்காவலர் அன்பரசு பைக்கில் மறைத்து வைத்திருந்தார். இதுகுறித்த சிறை அதிகாரிகள் சோதனையின்போது அன்பரசு சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக மதுரை சிறை எஸ்.பி., சதீஷ்குமார் […]

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர்சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி பயிற்சி வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்துள்ளார்.நேற்று காலை 6 மணி அளவில் டாக்டர் கார்த்திகேயன் போனில் மாணவியுடன் […]

கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்குள் படுத்திருந்தபோது, திடீரென கடுமையான குளிரை தாங்க முடியாமல் நடுங்கி கொண்டிருந்தார்.பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு ஜன்னி (வலிப்பு) ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் காவியாவால் படிக்க முடியாமல் தவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் உன்னால் படிக்க முடியும் என கூறி அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா நேற்று முன்தினம் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை […]

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை வரவுள்ளது. இதையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பலர் ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு செய்து வருகின்றனர்.தொடர் விடுமுறையையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை […]

தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி(4), நிஷா(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தமிழ்ச்செல்வியை நேற்று காலை பள்ளி வேனில் ஐஸ்வர்யா ஏற்றி டாடா காண்பித்துள்ளார். அப்போது, டிரைவர் வேனை இயக்கியதால், அங்கிருந்த குழந்தை நிஷா, தவறி விழுந்து வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். கண்ணெதிரே மகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா கதறியழுதார். உடனே வேன் டிரைவரான பெரமனூரைச் […]

பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதால் ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.பழனி ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, […]

பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.22ம் தேதி அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் ஆகியோர், இரு காப்பீட்டு நிறுவனங்களில் தந்தையின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்த பணத்தை கோரி விண்ணப்பித்தனர். கணேசனின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனம், அவரது […]

முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 5 காசு உயர்ந்து ரூ.6.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை முதல்முறை ரூ.6.30ஆக உயர்ந்துள்ளது. 6 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை வரும் நாட்களிலும் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்துள்ளார். இதில் வட மாநிலத்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் டிக்கெட் இன்றி பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து, டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணித்த வட மாநிலத்தவர்கள் 80 பேருக்கும் தலா 300 ரூபாய் விகிதம் […]

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்…வணிக ஆய்வாளர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த சுகன்யா என்பவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க வணிக ஆய்வாளர் இளையராஜா என்பவர் ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகன்யா. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி வணிக ஆய்வாளர் இளையராஜாவிடம் லஞ்சப் பணத்தை சுகன்யா கொடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை […]

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நர்சிங் மாணவி… ரயில் மோதி பலி

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம் புதூரை சேர்ந்தவர் ஹரிதா (17). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹரிதா உடலில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இருப்பு பாதை போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு […]

நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்களின் 3 நாட்டு படகுகள் மீது மோதியது. இதில். 3 நாட்டு படகுகளும் கடலில் கவிழ்ந்தன. படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் கடலில் மூழ்கின.வெளிநாட்டு கப்பல் மோதியதால் நாட்டு படகுகளில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். உடனடியாக அவர்களை மீட்ட சக […]

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் 5 பேர் பயணித்தனர். ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட […]

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர் ஓட்டி வந்த கல்லூரி பஸ் அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். . விபத்தில் இறந்த மூதாட்டிக்கு 75 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊர் என்பது […]

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் … கோவை அவிநாசி […]

தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மஹா யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் 10 கிலோ வெண்ணெய் ஊற்றப் பட்டது அதோடு 100 கிலோ பழங்கள் 50 கிலோ இனிப்பு வகைகள் யாக த்தில் போடப்பட்டனர். அதோடு பட்டு வேஷ்டி […]

சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து வந்தார். மேலும், அங்குள்ள சிவன் கோயிலில் ராமமூர்த்தியும், ஆடுதுறை சிவன் கோயிலில் மணிகண்டனும் சிவாச்சாரியார்களாக பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 12ம் தேதி திருவைக்காவூரை சேர்ந்த கார்த்தி(39), சிவாச்சாரியார் மணிகண்டனிடம் தனது திருமணத்திற்கு புரோகிதம் செய்ய வேண்டும் […]

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls- SIR 2026) சரிபார்த்தல் குறித்து.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது… ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி […]

நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

சென்னை, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-12-2025 முதல் 24-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.25-12-2025 மற்றும் 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து […]

தமாகாவுடன் இணைந்த காந்திய மக்கள் இயக்கம்

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் இன்று (டிச., 20) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளார். தமாகா தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது- சீமான் தாக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிச., 20) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர். களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.களத்திற்கு வராதவர் களத்தை பற்றி பேசுவதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.

கோவை- கொட்டும் பனியில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் இரவு பகலாக தற்பொழுது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்த போராட்டத்தில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 […]

தூய சக்தி-தீய சக்தி சினிமா டயலாக்கை பேசும் விஜய்-அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அருகே வடவாளம் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அதன் பிறகு பேட்டி அளிக்கையில் .. சினிமா துறையில் வசனம் பேசுவது போல் தவெக தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என பேசி வருகிறார் ஆனால் மக்கள் சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது எனவும் சிலப்பதிகாரத்தைப் பற்றி விஜய்க்கு என்ன தெரியும் எனவும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு […]

வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ,வருவாய்த்துறை பி. அமுதாவை சந்தித்து தனதுதொகுதி சம்மந்தமாக மனு கொடுத்து பேசினார். அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினத்தை தனி வருவாய் கிராம மமாக அறிவிக்க வேண்டு மெனவும். இது குறித்து வருவாய் துறை அமைச்சரிடமும், சட்டப்பேரவையிலும் தான் பேசியதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றி தர அதில் கோரியிருந்தார்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை போல அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு […]

விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை, திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்கான அவரது முயற்சி வெற்றி பெறாத – விஜய் பாஜகவின் பி-டீம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் கரூரில் பேட்டி. கரூரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது […]

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் இரு சாலைகளுக்கு இடையே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து தொங்கிய நிலையில் பயணிகள் மீட்கப்பட்டனர். சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் பாயும் […]

கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராசிபுரம் ஜெஜெ செந்தில்நாதன் இவர் 18.12.2025 அதிகாலை 2.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்ந்த எஸ்.முனிரா பானு வீட்டிற்கு சென்றுள்ளார் . அவர் 2 கை குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் அவரது கணவர் சென்னையில் பணியில் உள்ளார் இந்த நிலையில் இதை தெளிவாக அறிந்த மாவட்ட செயலாளர் முனிரா பானுவியிடம் ஆசிய வார்த்தை கூறி அடுத்த மாவட்ட மகளிர் அணி தலைவி […]

அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு சாமி வாசனே ஓட்டிச் சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் வளைவு சாலையில் சத்திரத்தேரி முனியாண்டவர் கோவில் அருகே சென்றபோது, காரின்முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து லேசாக புகை வரத் தொடங்கியதை கண்டு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, எஞ்சின் பேனட்டை சாமிவாசன் […]

தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனையாகிறது.

வீடு புகுந்து நகை திருட்டு… ஆண் நண்பருடன் சிறுமி கைது

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (36). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டாமல் காற்றுக்காக லேசாக திறந்து வைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர், அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகையை திருடிச் சென்றார். மறுநாள் காலையில் ராஜா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததையும். அதில் இருந்த நகை திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், […]

திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தனமாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக மேலதேவநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். அவர் 2 மாதங்களாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாதது குறித்து தாயார் சங்கரம்மாள் கேட்டபோது, கணவர் இசக்கிமுத்துவுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு […]

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அப்படி வளர்த்தல் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதற்கான தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் பேருந்தின் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க கடும் முயற்சி செய்தார். அந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வலிப்பு நோய் ஏற்பட்ட ஓட்டுநர் திருமலையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]

ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில் இன்று அனைத்துக் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார் . ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,22,051 ஆண் வாக்காளர்களும், 1,26,955 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 29 வாக்காளர்களும் என மொத்தம் […]

இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார அட்டை இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது. இதையடுத்து, மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பை படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. […]

ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன் கடை ஊழியர்களான கலையரசன் மற்றும் டேனியலுடன் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை சிறையில் அடைத்தனர்.

செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற 40 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் வார்க்கப்பட்டன பின்னர் ஆஞ்சநேயருக்கு 200 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சந்தன அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வடை மாலை வெற்றிலை மாலை துளசி மாலை வஸ்திரம் மாலை ஆகிய மாலைகள் அணிவிக்கப்பட்டு மகா […]

புதுகையில் 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர் கள் நீக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஆறு சட்டமன்ற தொகுதிகளில் 27/10/2025படி வாக்காளர் பட்டியலில் 13,94,112 வாக்காளர் கள்இடம்பெற்றிருந்தனர். தற்போது எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பிற்கு பிறகு இன்று19/12/2025 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 12,54, 525வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து 1,39,587வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடன் தகராறு… வாலிபர் வெட்டிபடுகொலை- ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.‌ இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜ் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நெய் வாய்க்கால் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த […]

பெண்களுக்கு எதிரான வன்முறை- புதுகையில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு சர்வதேச தினத்தினை முன்னிட்டு “புதிய உணர்வு மாற்றத்திற்கான முன்முயற்சி -4.0” என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்துபாலின சமத்துவ உறுதிமொழி யினை வாசிக்க அதனைபின்தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம்) ஊ.பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் […]

கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டார் கலெக்டர் கரூரில் SIR மூலம் 79,690 பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 8,18,672 வாக்காளர் பட்டியலில் உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்டவாக்காளர்கள் எண்ணிக்கை – 79,690 கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்: […]

புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை வலுப்படுத்தவும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, கோவை ,சேலம் மற்றும் புதுக்கோட்டை […]

ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து, 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியையொட்டி […]

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் 2015-ம் ஆண்டு போராட்டம் நடந்தது.அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு மட்டும் […]

இனி பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1,00,000 அபராதம்

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ரூ.25.95 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

பசுமை நெடுஞ்சாலை திட்டம்… ஒன்றிய அமைச்சருடன் எம்பி துரைவைகோ கடிதம்

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ இன்று சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது. சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை […]

கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல் குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (27) என்பவர், கல் குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான சம்பளம் இல்லாத காரணத்தால், அசாம் தம்பதியர் வேலையில் […]

பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை காவலர் விஜய் கண்ணா என அறிமுகப்படுத்தியுள்ளார். மனுதாரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி […]

புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை வழங்குவதற்கு ஊராட்சி தலைவர் ரூ.3,000 லஞ்சமாக தர வேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஊராட்சி தலைவரைப் பிடிக்கத் […]

சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடு முடிந்தும் வீடுகள் […]

ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏழைகளின் பாதுகாப்பு அரணாகத் திகழும் இந்தத் திட்டத்தை அழிக்க விடமாட்டோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… பிரதமர் மோடிக்கு […]

காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்-அமைச்சர் மாசு பேட்டி

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராடி வரும் நிலையில் அமைச்சர் மாசு பேட்டி.. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகாௌ்ள வேண்டும். செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. என்று இவ்வாறு தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு (Disproportionate Assets Case), இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அதனை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை தமிழக அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) […]

100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காதது மற்றும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து, டிசம்பர் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்டவை) முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் […]

125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 125 மின்சார பேருந்துகளும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 125 பேருந்துகளில் 45 பேருந்துகள் முழுமையான ஏசி வசதி கொண்டவை. மீதமுள்ள 80 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத தாழ்தளப் பேருந்துகளாகும். முதியவர்கள், […]

பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம் இல்லத்தில் மரியாதைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள், திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற […]

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது… கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிகச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக […]

கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார். உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த […]

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி ஓட்டம். கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் மக்கள் உறங்கும் சமயத்தில் காரில் வந்த நான்கு மர்ம நபர்கள், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோவில் உண்டியலை திருடவும் முயற்சித்துள்ளனர். அப்பொழுது சத்தம் கேட்டு, […]

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

 டிசம்பர் 19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) முடிந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிப்படையாக அமையும். புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, தவறான பதிவுகள் நீக்கப்பட்டது, முகவரி மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டது உள்ளிட்ட மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்கலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in-க்கு சென்று, வாக்காளர் […]

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுறு 5-வது நாளாக […]

எச்.ராஜா ஹீரோவாக நடித்த படம் இன்று ரிலீஸ்..!!

திருப்பரங்குன்றம் மலை குறித்து ‘கந்தன் மலை’ என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களம். இங்குள்ள நாடக காதல், கோயில்களில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் போன்ற கருத்துக்களை கொண்டதாக கதை அமைந்துள்ளது. முறுக்கிய மீசையுடன் எச்.ராஜா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வில்லன் கேரக்டரில் நடிகர் சேரன்ராஜா நடித்துள்ளார்.பா.ஜ., மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் […]

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா காலமானார்.. முதல்வர் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மிக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர்.உலகெங்கும் ஒலிக்கும் தமது இசையால் இசைபட வாழ்ந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது […]

வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 விமானங்கள் […]

கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில். தங்களை பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக அந்த 4 பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அந்த 2 சிறுவர்களை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக […]

பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், கன்னியாகுமரி பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த போது இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் […]

இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதய ராஜ்குமார். இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் […]

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லி தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவு செய்வார்கள். இலங்கையில் இயற்றப்பட உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை கொண்டுவர இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அழுத்தம் […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைமாவட்டதேர்தல்அலுவலர்/மாவட்ட கலெக்டர் மு.அருணா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

வரும் 27ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்தும் அன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறிவிடும். நாளை மாநிலங்களவையிலும் நிறைவேறிவிடும். அது உடனடியாக சட்டமாகவும் மாறிவிட வாய்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த […]

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தமது அண்ணன் S.R.G. சம்பந்தமுடன் இணைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர். […]

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை மற்றும் திட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு […]

விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் 2026 இல் திமுக தான் ஆட்சி அமைக்கும் முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார்.விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தாகத்தை தான் ஏற்படுத்தும் அதற்கு தண்ணீர் […]

இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அதிகம் இருப்பதாலும் இங்கு ஒரு விமான நிலையம் அவசியம் என்பது டி.ஆர். பாலுவின் வாதம். திருவாரூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா மற்றும் சிக்கல் சிங்காரவேலவர் […]

ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியிம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சுய உதவிக் […]

”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

தமிழகத்தின் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் சரக டிஐஜி-க்களுக்கு டிஜிபி அபய் குமார் சிங் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கையில்… பணியில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகளின் வீடுகளில் உதவியாளர்களாகப் பணிபுரியும் போலீசார் அனைவரும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். சீருடை அணிந்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களை, அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைகள் செய்யவோ அல்லது உதவியாளர்களாகவோ பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த உத்தரவை மீறி இன்னமும் […]

தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.மேலும் இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 C இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன் மாவட்ட மைய மூன்றாம்நிலை நூலகர் எஸ். கண்ணன் வழங்கினார். உடன் மூன்றாம் நிலை நூலகர் குமுதா,எஸ் ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் உள்ளனர்.

663 பேருக்கு வேலைவாய்ப்பு- ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள Schneider Electric India Private Limited (SEIPL) நிறுவனத்தின் ஆலைகளின் விரிவாக்கம் மற்றும் ஓசூரில் Schneider Electric IT Business India Private Limited (SEITB) நிறுவனத்தின் மின்கலன்கள் (Batteries) மற்றும் […]

அரியலூர்- பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை- பக்தர்கள் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயம் உள்ளது. கோவிலின் சிறப்பு மரகத லிங்கத்திற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகும்.நேற்று இரவு பிரதோஷத்தை கோவில் பூசாரி கலியபெருமாள் சிறப்பாக நடத்தினார். மரகதலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீபாரதனை மற்றும் ஆராதனை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இரவு கோவில் பூசாரி கலியபெருமாள், கோவிலின் கதவை பூட்டிவிட்டு, கோவி […]

விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து… 10 பேர் காயம்

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி சென்ற தவெகவினர் விபத்தில் சிக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் தவெகவினர் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது 2 டூவீலர்கள் மோதி கீழே விழுந்த நிலையில் அவற்றின் மீது பக்கவாட்டில் வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதி விபத்தானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு.. துணை முதல்வர் கண்டனம்

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னை தெரெசா மகளிர் வளாகத்தில், மதி கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,000 கோடி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.4,000 கோடி பணம் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை, நிதியை விடுவிக்குமாறு 10 […]

மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்-ராமதாஸ் கடும் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் நீதிக்கு எதிராக உள்ளது. மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தன்னிடம் வரும் வழக்குகளில் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கட்கான சட்டப்படியான நிவாரணத்தை தொடர்ந்து 26 ஆண்டுகளாக நீதிக்கு உட்பட்டு வழங்கி வந்தவர். பல்வேறு வழக்குகளை அவர் கையாண்ட விதம் நீதித்துறை வழக்கறிஞர்கள் மற்றும் பொது ஜன […]

விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சரளை பகுதியில் தான் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலையில் இருந்து உட்புற சாலை வழியாக வருவோருக்கு வழிகாட்டும் வகையில் போக்குவரத்து போலீசார் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக குன்னத்தூர் […]

அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..

ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… மஞ்சள் என்றாலே மகத்தானது, அதிர்வை ஏற்படுத்தும் மஞ்சள் நகர்ததிற்கு எனது வணக்கம். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்.. அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அன்றைக்கும், இன்றைக்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுபவர் பெரியார். என்னை வீழ்த்த என்னவெல்லாம் அவதூறு பரப்பலாம் என […]

தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி […]

எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை , கொளத்தூரில் 15 ஜோடிகளுக்கான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. ஒவ்வொரு தொகதிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வேன். கோளத்தூருக்கு வார வாரம் வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புத்துணர்ச்சியும், வந்துவிடுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி. எந்த தொகுதியில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட கொளத்தூரில் கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதியை பார்த்தாலே பெருமையாகவும், பொறாமையாகவும் இருப்பதாக கூறுகின்றனர். கொளத்தூர் என்றாலே சாதனையும், இந்த ஸ்டாலினும்தான் நினைவுக்கு […]

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக பணியாற்றிவரும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 17 வருடங்களாக பணியாற்றி வரும் கல்லூரிப் பேராசிரியைகளை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ராஜாமடத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாகபணியாற்றிவரும் பேராசிரியர்களுக்கு (சிஏஎஸ்) என்கிற பணி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பதவி உயர்வு உரிய நேரத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக […]

ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் உணவு பைகளை பிடுங்கிக் கொண்டும். ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளே சென்று உணவுப் பொருட்களை சூறையாடி வருவதால் பொதுமக்கள் வேதனை. வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி, உடையான்தோட்டம், எலுமிச்சைபண்ணை, தொட்டியப்பட்டி, லாலாபேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. […]

டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசின் சில திட்டங்கள் மற்றும் டெல்லி பயணம் குறித்துப் பேசிய இபிஎஸ், தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 100 நாள் […]

விஜய் கூட்டத்திற்கு வந்த வாலிபருக்கு வலிப்பு- பரபரப்பு

ஈரோடு சரளை பகுதியில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவெக தலைவர் விஜய் இன்று காலை 11.30 மணி முதல் 1 மணிக்குள் உரையாற்ற உள்ள நிலையில், காலை முதலே தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் பிரதோஷ விழா.. குவிந்த பக்தர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழா: இந்த ஆண்டின் இறுதி பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண் ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், […]

ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்- குவிந்த மக்கள்!

ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட விஜய், காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடி […]

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இருதரப்பு […]

தங்கம் விலை சவரன் ரூ.99,520க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து கிலோ ரூ.2.24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ‘Cash on Delivery’ மூலம் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.மேலும் அவர் டெலிவரி விலாசத்தில் அந்த பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்தும் ஆர்டர் செய்து அந்த பெண்ணுக்கு விநோதமான முறையில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பான புகாரின்பேரில் கோவை […]

10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்… வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 18 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிய வந்தது.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் […]

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் முருகன் (54). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23), அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது மாரிராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த அவர், வீட்டில் தூங்கி கொண்டிருக்காமல் வேலைக்கு செல்லுமாறு […]

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம்….பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெலாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். தினமும் பங்குச்சந்தை நிலவரங்களையும், எந்த பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் அந்த வாட்ஸ்-அப் குழுவில் அனுப்பியுள்ளார். இதை உண்மையென நம்பிய அப்பெண், […]

விஜய் பிரச்சாரம்…நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

கரூர் சம்பவத்திற்கு பிஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, அந்தப் பகுதியில் மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  றகு தமிழகத்தில் முதல் முறையாக வெளியே (open ground) நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை விஜய் பங்கேற்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் […]

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள்… கட்டுபாடுகள் விதிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். hidden spots என்ற குறி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதைபோல் hidden spots பாதுகாப்பு இல்லாத வனப்பகுதி என்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி […]

தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தளங்களில் திருச்சி முதலிடம்

2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாகத் திகழ்ந்தது. சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. திருச்சிக்கு வந்த மொத்த பார்வையாளர்களில், 22.94 லட்சம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 14,706 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். மதுரை மாவட்டம் 21.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது.

உடல் எடைக் குறைப்பு ஊசிகள்.. 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

உலகளவில் பிரபலமடைந்துள்ள ஒஸெம்பிக், மௌன்ஜரோ போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்தியதில், 2024-ம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஊசிகளின் பக்க விளைவுகளால் உறுப்புகள் செயலிழத்தல், கணைய பாதிப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால், சுகாதார நிபுணர்கள் மருந்தைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, ரூ.1000 கிடைக்க பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக தமிழக அரசு புதிய ‘குறைதீர்வு’ இணையதள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், ரேஷன் அட்டை எண் மற்றும் தொலைபேசி விவரங்களை பதிவிட்டு, தகுதிக்கான கூடுதல் ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: https://kmut.tnega.org/kmut-grievance/

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை – அன்புமணி

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் கரு.நாகராஜன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, அமமுகவின் செந்தமிழன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதி பிரச்சனை, இதன்மூலம் இட ஒதுக்கீடு வரும். சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக […]

லிப்ட் கேட்டு டூவீலரில் சென்ற பெண் பஸ் மோதி பலி

திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி(53) இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ்-யில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று சித்தம்பாக்கம் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாரியப்பன் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு திருவள்ளூருக்கு சென்றுள்ளார். அப்போது திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் ஈக்காட்டில் வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து தடம் எண் 505 செங்குன்றம் நோக்கி […]

ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. […]

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.19-12-2025 முதல் 21-12-2025 […]

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. டி.கேஎஸ் இளங்கோவன், கோவி. செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் எம்எம் அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கார்த்திகேயன சிவசேனாபதி, எழிலன் நாகநாதனுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் […]

எனது பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது… ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உள் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, “அன்புமணி இனிமேல் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் கிடையாது, அன்புமணி மட்டுமே. தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரிக்கவில்லை. அவர் தொடர்ந்து பாமக பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று கடுமையாக விமர்சித்தார். “கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை […]

திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை, குத்துவிளக்கு ஏற்றி எம்.எல்.ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 51 நியாய விலை […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைந்தது. இந்த நிலையில் செய்தியாளர் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 16% பொருளாதார வளர்ச்சி – சாதித்த தமிழ்நாடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக […]

கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்த நாளை மறுநாள் சென்னையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய போராட்டம் நடைபெற உள்ளதாகதமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் பேட்டி. கீழமை நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை ஆன்லைனில் […]

தஞ்சை- குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டியும் பயன் இல்லை.. கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் கலைஞர் காலனி தெருவில் 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பொழுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் தொடங்கி தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இது குறித்து இப்பொழுதே சேர்ந்த மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் பணிகள் உள்ளன. ஆனால் நிதி […]

சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்து நல்ல பாம்பு அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்து உள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்த பொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 […]

சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு

திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் […]

தமிழகத்தில் டிசம்பர் 19-ல் வரைவு பட்டியல் வெளியீடு- 13 லட்சம் பெயர்கள் நீக்கம்?

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிர நடவடிக்கையின் நோக்கம், குளறுபடிகள் இல்லாத ஒரு தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சரிபார்ப்புப் பணிகளில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் […]

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் நிலவும் புதிய வானிலை மாற்றங்கள் காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டமும், மழையும் நீடிக்கிறது. இந்தச் சுழற்சியின் நகர்வு காரணமாக ஈரப்பதம் மிக்க காற்றுக் கடலோரப் பகுதிகளில் இருந்து உள் மாவட்டங்களுக்கு நகர்வதால் மழைப் பொழிவு […]

டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் 1996 இல் தள்ளுபடி செய்துவிட்டது. “எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்து […]

தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.12,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.11,000 உயர்ந்து கிலோ ரூ.2.22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:“திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம். அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (12) என்ற மாணவர் இன்று (16.12.2025) மதியம் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான […]

தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: […]

ஈரோட்டில் 18ம் தேதி விஜய் பிரச்சாரம்-தனியார் பள்ளிக்கு விடுமுறை

சமீபத்தில் (தவெக) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்புக் கருதி ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் டிசம்பர் 18, 2025 அன்று இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் விதமாக, மேற்கு மண்டலத்தில் உள்ள இளைஞர்கள் […]

தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்த திருமணம் ஆன ஆண், பெண் இருவரும் தங்களுக்குள் கொண்ட தகாத உறவால் ஊரை விட்டு ஓடியவர்கள், மீண்டும் ஊருக்குள் வந்து காட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்தவர் விஜய் (35). தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று சிறுகடம்பூரை சொந்த ஊராக கொண்டு, சின்னமனக்குடியை ஒட்டியுள்ள நுரையூர் கிராமத்தில் திருமணம் ஆகி […]

சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. சிவகங்கை, அசிஸ் நகர் லூசியா தனது வீட்டில் அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக, ஸ்விட்ச் பாக்ஸ் அல்லது மோட்டார் இணைப்புகளில் […]

நெல்லையில் டிச.,20,21ல் முதல்வர் சுற்றுப்பயணம்.. அமைச்சர் கே.என்.நேரு

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் டிச.21ம் தேதி 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110 கோடி மதிப்பில் நூலகழ் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார் முதல்வர். மழைக்காலம் முடிந்தது சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

பாஸ், QR கோடு தேவையில்லை- அனைவரும் விஜய்யை சந்திக்கலாம்” – செங்ஸ் தகவல்

ஈரோட்டில், விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் காவல்துறையினர் குறிப்பிட்ட படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை பிற்பகலுக்குள் செய்து முடிக்கப்படும் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் […]

வங்கி கணக்கில் ரூ.2,000… இதை மறக்காதீங்க.. தமிழக அரசு

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

செல்லப்பிராணிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா ? ஆய்வு.. மேயர் பிரியா தகவல்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிழக்கு தெரு மைதானம் சந்திப்பு மற்றும் ஜெயராம் நகர் பகுதிகளில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட்ட அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர்ந்து 300 ஆவது நாளை எட்டியதால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் […]

திருப்பூர்- டிச., 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக மேலும் பலப்படுத்தும் நோக்கில், (திமுக) சார்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.திமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இத்தகைய பெரிய மாநாட்டை நடத்துவதன் மூலம் திமுக பின்வரும் இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை போன்ற […]

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை டைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில் அந்த நடைமுறைக்கு எதிர்ப்புகள் வழுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று இ ஃபைலிங் முறையை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் […]

திமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்- வீரபாண்டியன் பேச்சு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த முகாமில் சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி […]

தஞ்சையில் வீட்டில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ

தஞ்சையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூத்து மலர்ந்து நறுமனம் வீசி விடிந்ததும் உதிர்ந்துவிடும் பிரம்ம கமலம் பூக்கள் மலர்கொடி என்பவரின் வீட்டில் வெள்ளை வெளேரென பூத்து மலர்ந்ததால் குடும்பத்தினர் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்: இமய மலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ செடியை தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வரும் மலர்கொடி எனும் பெண் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர் அவர் தனது வீட்டில் பிரம்ம […]

திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகவும்.. நான்கு மாதங்களுக்கு மேலாகி இலுப்பக்கோரை கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், குடிநீர் எடுப்பதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை குடிநீர் கேட்டு மனுக்கள் […]

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி ஆவேச கேள்வி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மகாத்மா காந்தியின் பெயரை நீக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி அவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்விஊரக ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கான காரணம் என்ன? […]

முதல்வருடன் வைகோ-சண்முகம் சந்திப்பு

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளித்தார். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அழைப்பிதலை வழங்கியிருக்கார். அதிலும் குறிப்பாக […]

சுவர் சரிந்து பள்ளி மாணவன் பலி.. பரிதாபம்

திருவள்ளூர் அருகே சுவர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மோகித் என்ற மாணவன் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது போது கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக மோகித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த விரிவாக்கமான பூந்தமல்லி-போரூர் தடத்தில் ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.26,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டாமை’ டீச்சர் மகள் ஹீரோயினாக அறிமுகம்

சரத்குமாரின் ‘நாட்டாமை’ படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராணி (எ) ரக்ஷாவின் மகள் தார்ணிகா தற்போது, ‘கொம்புசீவி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக தார்ணிகா நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப்படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரத்குமாருடன் ரக்ஷா நடித்த நிலையில், அவரது மகளும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினா கடற்கரையில் வீடற்ற நபர்களுக்கு இரவு நேர காப்பகம்

சென்னை மெரினாவை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேலாக கடற்கரைக்கு உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும் சென்னை கடற்கரையின் மணல் பரப்பில் இரவு நேரங்களில் ஏராளமான வீடில்லாத பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக படுத்து உறங்கும் நிலை வெகு நாட்களாக நிலவி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர், சாலையோரங்களில் தானம் கேட்பவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஆவர். பொது வெளியில் உறங்கும் இவர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவி வந்தது. இதனை கவனத்தில் கொண்டு சென்னை […]

பைக்-கார் மீது லாரி மோதி விபத்து-4 பேர் பலி- பரிதாபம்

தருமபுரி தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி மலைப்பகுதிக்குள் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையாகும். இப்பகுதியில் விபத்துகள் அதிகளவு ஏற்படுவதால் 900 கோடி மதிப்புள்ள பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலங்கள் கட்டும் பணிக்காக அந்த பகுதி ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் நோக்கி செல்ல கூடிய கனரக வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் […]

முன்னாள் இலங்கை கேப்டன் கைதாக வாய்ப்பு

முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா 2017ம் ஆண்டு இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அவரது சகோதரரான தமுக்கா ரணதுங்கா அரசு பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அர்ஜுன ரணதுங்காவும், அவரது சகோதரரும் சேர்ந்து பெட்ரோல் கொள்முதலில் ரூ. 23 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமுக்கா ரணதுங்காவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் […]

பாஜக ராம்விலாஸ் வேதாந்தி மாரடைப்பால் காலமானார்

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி 67 காலமானார். ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளது. BJP, RSS-ன் முக்கிய தலைவராக இருந்த ராம்விலாஸ், அயோத்தி கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராக பணியாற்றிய அவர், 2 முறை(1996, 1998) MP-யாக இருந்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்

தமிழக இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, அதிநவீன வசதிகளுடன் கூடிய சென்னை ஹஜ் இல்லம் கட்டுவதற்கு இன்று (டிசம்பர் 16, 2025) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் மத நல்லிணக்க முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.ஹஜ் இல்லத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணத்திற்காகச் சவூதி அரேபியா செல்லும் தமிழகப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்தப் புதிய இல்லம் அமைக்கப்பட […]

100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜ.,அரசு.. முதல்வர் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு! தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத […]

வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள்…காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவியாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் போலீஸ், வக்கீல், பிரஸ் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டியிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட துறைகளில் இல்லாத நபர்கள் பலர் இவ்வாறு தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தங்கள் உறவினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பதாகவும், அதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சிலர் […]

அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல 6 முதல் […]

100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் ஒன்றிய அரசு…முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை […]

டிச.27ம் தேதி நாதக பொதுக்குழு கூட்டம்- சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுதிறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்“- என். ஆனந்த்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தங்கமான அண்ணன் கிடச்சிருக்காரு… இனி […]

20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

மும்பை-டெல்லி விரைவு சாலையில் இன்று (டிச.15) அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். மேலும், 15 முதல் 20 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ’ஆடு, கோழி பலியிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை; உரிமையியல் நீதிமன்றத்தில் போய்தான் நிவாரணம் பெற முடியும்’ என்றும் அவர்கள் கூறினர்; இதே கருத்துதானே தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும். இந்த […]

அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்

என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் அதிமுக சார்பில் மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வாங்கியுள்ளார்.

விசிக நிர்வாகி ”திருமா ரமேஷ்” மாரடைப்பால் பலி

விசிக நிர்வாகி மற்றும் தலைவர் திருமாவளவன் சாயலில் இருந்த பிரபல நபரான ‘திருமா ரமேஷ்’ (ரமேஷ்), பண்ருட்டியில் மாரடைப்பு காரணமாக இன்று (டிச.15) காலமானார். இவரது திடீர் மறைவு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு விசிகவை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி வழி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. டிச.18ல் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில், பெண்களுக்கு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யை பார்ப்பதற்கு […]

வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை வளாகத்தில், 3000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தலங்கள் அமைக்க 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் […]

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12, 515 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 1,00,120ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லூரி பேராசிரியையிடம் ரூ.11.46 லட்சம் நூதன மோசடி

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியை இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளார். சில வாரங்களுக்கு முன், மர்ம நபர்கள் அந்தப் பேராசிரியையை ஒரு சமூக வலைதளத்தில் அல்லது மெசேஜிங் ஆப் (Messaging App) மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், குறுகிய காலத்திலேயே மிக அதிக லாபம் ஈட்டலாம்” என்று மோசடி கும்பல் கவர்ச்சிகரமாகப் பேசியுள்ளது. ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறிய மோசடி நபர்கள், முதலீடு செய்த […]

அஜித்-சபரீசன் திடீர் சந்திப்பு

நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்ற வரும் ஆசிய அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் பங்பேற்று வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸான நரேன் கார்த்திகேயனுன் இணைந்து அஜித் குமார் ரேஸிங் அணியில் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி ஞானசேகரன் தாயார் கங்காதேவி மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக ‘புஸ்யா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ என்று பெயர் சூட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து,கரூரில் தமிழ் […]

ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணி கோரி… கலெக்டரிடம் மனு

ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை எழுதுதல் உள்ளிட்ட பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓவியர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 120 ஓவியக் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓவியக் கலையையே முழுமையாக நம்பி தங்களது குடும்பங்களை […]

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தலைமை முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. தேர்தல் துணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பியூஷ் கோயல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். அர்ஜூன் ராம் மேக்வால் சட்டம் மற்றும் நீதித்துறை […]

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததை கருத்தில் கொண்டு நேற்று (டிச., 14) முதல் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக […]

ஈரோடு தவெக பரப்புரை.. “ரூ.50 ஆயிரம் தரனும்- நிபந்தனை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை என்ற இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பரப்புரை செய்யும் இடத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது, நிலத்தை எப்படி கொடுக்கப்பட்டதோ அதே நிலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு வைப்புத் தொகையாக ரூ.50,000 மற்றும் அனுமதிக் […]

மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது” என்று வருத்தம் தெரிவித்தார். ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்றும், பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். ஜி.கே. மணி, “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக […]

தமிழக பாஜகவின் ‘டார்கெட் 50’.. அமித்ஷாவுடன் நயினார் அதிரடி ஆலோசனை

அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரமக்குடி, சாத்தூர், பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி தொதிகளும், மேற்கு […]

வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்..டிடிவி பேச்சு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் என்று கணித்துள்ளார். “எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்” என்று தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பான முடிவை பிப்ரவரி மாதம் வரை எடுக்க அவகாசம் உள்ளதாகவும் கூறினார். டிடிவி தினகரன், “2026 தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்டவை தனித்தனியே போட்டியிடும் சூழல் உருவாகலாம். […]

காருடன் அஜித் நிற்பது போல்- கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக காருடன் அஜித்குமார் நிற்பது போன்றும் – உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும்கேக் தயாரிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி..! கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கோவை கே.ஆர்.எஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கும் –உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் வண்ணமயமான கேக்குகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் […]

சிறுபான்மையினருக்கு ஆதரவாக நின்றவர் முதல்வர் ஸ்டாலின்- மதிவதனி புகழாரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் திராவிடம் 2.0, ஏன் எதற்கு, வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திராவிட கழக துணை பொதுசெயலாளர் மதிவதனி, பேசுகையில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், பொது மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுகவின் நல்லாட்சி குறித்தும் மேடையில் பேசினர்.மேலும் […]

அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு

தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்…முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து […]

நேருக்கு நெருக்கடி கொடுத்தால்- மனம் திறந்த அமைச்சர் கே.என்.நேரு

நேருவுக்கு நெருக்கடி கொடுத்தால் திமுகவை விழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு என் மீது வழக்கு போடுகிறது. மனம் திறந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதிகளில் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் உரையாற்றினார் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் கே.என்.நேரு : அதிக ஆதரவு கொடுத்து என்னை வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள்.மத்திய அரசு […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து கிலோ ரூ.2.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளை நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கு ஏற்பாடுகள்

75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு நாளை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு 29 கழக மாவட்டங்கள்,91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,30,329 கிளை-வார்டு நிர்வாகிகள் இந்த வடக்கு மண்டல […]

அதிமுக கூட்டணியில் பாஜக 53 தொகுதி

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை. குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்). நயினார் நாகேந்திரன் (நெல்லை). வானதி சீனிவாசன் (கோவை தெற்கு). சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த முறை 53 தொகுதிகளை கேட்டுப்பெற […]

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… முதல்வர் அழைப்பு

75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கிராம அளவில் நடைபெறும் அறிவுத் திருவிழா என்றும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எல்லாரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். வடக்கு மண்டல […]

திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, “கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி. […]

ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்- அமைச்சர் மகேஸ்

டிசம்பர் இறுதி (அ) ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதா?.. செல்வபெருந்தகை கண்டனம

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் […]

பட்டுக்கோட்டை அருகே 4 மாதத்திற்குள் பள்ளமான தார்சாலை

பட்டுக்கோட்டை அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து போடப்பட்ட தார் சாலைபோடப்பட்டு நான்கு மாதத்துக்குள்ளையே பள்ளம் ஏற்பட்டு சேதம் அடைவதாக பொதுமக்கள் புகார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியதுக்கப்பட்ட கல்யாண ஓடை ஊராட்சி பகுதியில் உள்ள கல்யாணஒடை வடக்குத்தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது போடப்பட்ட சாலை நான்கு […]

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், […]

காங்., வெகு முன்னேற்றம்..ஆளும் மார்க்- கம்யூ., படுதோல்வி! சர்ப்ரைஸ் தரும் பாஜக!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4லும், 86 நகராட்சியில் 54லும், 938 கிராம பஞ்சாயத்தில் 495லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது. ஆளும் சிபிஎம்: ஒரு மாநகராட்சிட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் முன்னிலை வகிக்கிறது. ஆளும் சிபிஎம்: 86 நகராட்சியில் 28லும், 938 கிராம பஞ்சாயத்தில் 344லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் காங்கிரஸ் அமோகம்; […]

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் […]

முதலிடத்தில் இல்லாத துறைகளே இல்லை என்கிற நிலை வரும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது. புது தில்லி: 2024-25-ம் நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் […]

உதகையில் துவங்கிய உறைப்பனி பொழிவு-மினி காஷ்மீராக காட்சி

அதிகாலையில் கடும் குளிர் இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்காலம் துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் உறைப்பனி பொழிவு தென்பட்டது .உதகை நகர் முழுவதும் பெய்த உறைப்பனி பொழிவால் பச்சைக்கம்பலத்தில்முத்துக்கள் பதித்தது உறைப்பனி பொழிவு காட்சியளித்தது. வாகனங்கள் மீதும், வீட்டின் கூரைகள் மீதும், புற்கள் […]

கூட்டணி தேதியை அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.  இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டிருக்கிறது” என கேட்கப்பட்டது. அப்போது, அவர், அனைத்துக் கட்சிகளும் தங்களுடன் தோழமையாக உள்ளதால் இப்போது எதையும் கூட்டணி எனக் கூற முடியாது என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் […]

உச்சம் தொட்ட முட்டை விலை

முட்டை விலை கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்து தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம் என பல காரணங்களை கூறி […]

இனி 100 நாட்களுக்கு பிறகு தான்- ஓடிடி ரிலீஸ்- புதிய உத்தரவு

தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு 100 நாட்களுக்குப் பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விதி ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். திரையரங்குகளின் வருவாயைப் பாதுகாக்கவும், படத்தயாரிப்பாளர்களுக்கு நியாயமான லாபம் கிடைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் விளக்கமளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக OTT தளங்களில் படங்கள் விரைவாக வெளியாவதால் திரையரங்குகளின் வருகை […]

ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கூட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உள்கட்சி ஆலோசனைகள் தொடர்வதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டம், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று […]

நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும்  இலவச மருத்துவ முகாம்  நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை  தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.உடன் மாநில திமுக. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளார்.

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சுகுமார், மகன் லத்திஸ் காயமடைந்தனர். இந்தநிலையில் வச்சலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி மோசடி- 17 ஆண்டு சிறை

ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர் அறக்கட்டளை தலைவர், ஐபிஎஸ் அதிகாரி, அரசியல்வாதி என பல வேடங்களில் மக்களை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி என பெண் காவலரை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், […]

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்- ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிச.19ம் தேதிக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம். வாக்குச்சாவடி […]

புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர்  ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு பூஜை   திருவருள் கருணையால் சிறப்பாக நடைபெற்றது, முத்துக்குடா ,புதூர் தீர்த்தாண்டம் ,மீமிசல்,தீயத்தூர்  சுற்று வட்டார  600க்கும் மேற்பட்ட அன்பர்கள்  கலந்து கொண்டனர்.

திருப்பதியில் ரஜினி சாமிதரிசனம்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தனர். ரஜினிகாந்த், தனது பிறந்த நாளை ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் […]

கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது… அமைச்சர் சிவசங்கர்… மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியவர்களே அந்தத் திட்டத்தை பிற மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரியலூர் மாவட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு, திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு… விமானப்படை வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் விமானப்படை அலுவலகத்தின் மூலம் இந்திய விமானப்படையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி படிப்புகள் குறித்து பள்ளி வளாகத்தில் இன்று மாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை தாம்பரம் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு மையத்தின் விமானி பைண்ட் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்திய விமானப்படையில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆள் […]

சிறுபட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுக்கனும்” -பாக்யராஜ் பேச்சு

ஆஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிக்க, சந்தோஷ் ரயான் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. இதில் ஆஷிகா அசோகன், சான்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பெராடி, நிழல்கள் ரவி நடித்துள்ளனர். வீரமணி ஒளிப்பதிவு செய்ய, கவுதம் வின்சென்ட் இசை அமைத்துள்ளார். சந்தீப் நந்தகுமார் எடிட்டிங் செய்ய, பாலாஜி அரங்கம் அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில், ‘மிகப்பெரிய வெற்றிப் படமாக […]

நமக்கு 1 ரூபாய்க்கு 29 பைசா.. BJP மாநிலங்களுக்கு 1 ரூபாய்க்கு 7 ரூபாய்.. VSB புள்ளி விபரம்

100 நாள் வேலை, கல்வி நிதியை ஒன்றிய அரசு நிதிப் பாகுபாடு செய்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு என முன்னாள் அமைச்சர் பேட்டி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் மாவட்டம், அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 19,644 குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்க்கான வங்கிப் பற்று […]

திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய உரிமையை அமைதியாக வலியுறுத்தினர்.போராட்டக்காரர்கள், “நூற்றாண்டுகளாக மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூண் என்று கூறுவதற்கு […]

உண்மை சம்பவ கதைதான் ”சிறை”படம்.. கோவையில் டைரக்டர் சுரேஷ் தகவல்

உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் […]

தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். சென்னை துறைமுகத்தில் அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. அந்த வகையில் 5 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஓடாது” என்றனர். இந்த […]

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அவர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நடைமேடையில் நின்று […]

தங்கம் விலையில் மாற்றமில்லை… வௌ்ளி 6000 குறைந்தது

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா – இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதன் காரணமாகவும், ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துள்ளதன் காரணமாகவும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை நடப்பு ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை […]

சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், கனரக வாகனங்களின் தர சான்றிதழை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், மோட்டார் வாகன நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 9-ந்தேதி முதல் துறைமுகங்களுக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஒரு சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை […]

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாந்தி (31). மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாந்தியிடம், “நான் ஆட்டோவில் சவாரி வந்தேன். டிரைவருக்கு ரூ.300 கொடுக்க வேண்டும். கையில் பணம் இல்லை. ரூ.300 கையில் கொடுத்தால் அதனை ‘ஜிபே’யில் அனுப்பி விடுவதாக” கூறினார்.அதற்கு சாந்தி சம்மதம் தெரிவித்தார். இதனால் தனக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறினார். அதன்படி சாந்தியும், […]

முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை?..

குமரி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளை நடந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளதால், இது தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளையான விவகாரத்தில் குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா […]

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை மறியல் ஈடுபட்டனர் பின்பு போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் பணியில் ஈடுபட்ட போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர் இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇவர்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே வந்து ஆர்ப்பாட்டத்தில் […]

அதிமுகவாக மாறுகிறதா தவெக?- பொள்ளாச்சி ஜெயராமன் பதில்

மறைந்த முன்னாள் அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஸ்மார்ட் சிட்டி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 4 வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருப்பூருக்கு பெற்று தந்தவர் […]

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற 2024ஆம் ஆண்டு 67,526 சாலை விபத்துகளும், 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 370 விபத்துகளும் நடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிர்வாக குளறுபடி- பயணிகள் அவதி- 4000 விமானங்கள் ரத்து

இந்திய உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் 4,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகள், துணை விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு மற்றும் ஏர்பஸ் 320 விமானங்களின் பாதுகாப்பு மென்பொருள் மேம்பாடு போன்ற இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் உத்தரவுகளை இண்டிகோ நிறுவனம் பின்பற்றத் தவறியதே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மீனவர் களஞ்சியம் தனது வீட்டில் மீன் மோட்டார் ஓடவில்லை என மின் வயரை சரி செய்வதற்காக வயரை வாயால் கடித்த போது மின்சாரம் பாய்ந்து நெஞ்சில் காயம் ஏற்பட்டு விழுந்தவரை மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து பரிசோதனை […]

திருப்பரங்குன்றம் விவகாரம்- இரு நீதிபதிகள் அமர்வில் அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதங்களை முன்வைத்தார். “மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும்; அரசு […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் மீண்டும் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. அதன்படி 1 சவரன் தங்கம் – ரூ.98,960-க்கும், 1 கிராம் தங்கம் – ரூ.12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் கோர்ட்டில் ஆஜர்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகிய இருவரும் ஆஜராகினர்.  ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை தாக்கியதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பதினெட்டாவது மேஜிஸ்திரேட் முன்பு விசாரணை நடைபெற்றது. இரு தரப்பினரிடமும் நீதிபதி விளக்கங்கள் பெற்றார். வழக்கை முன்னிட்டு இருவரும் கவுன்சிலிங் பெற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. அடுத்த மாதத்துக்குள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. […]

ரஜினி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்…பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தங்களது வாழ்த்துகளை சமூக […]

14ம் தேதி பாமகவில் விருப்ப மனுக்கள் விநியோகம்.. அன்புமணி அறிவிப்பு

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் […]

டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்று தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் முதல் பெரிய பொதுக்கூட்டமாக இது அமையும். போலீஸ் விதிகளின்படி 84 நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெறப்பட்டுள்ளது. […]

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் மேலாளர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி.செல்வக்குமார், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.செல்வக்குமார், தனது இந்த அரசியல் மாற்றம் குறித்து பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார். தனது இந்தப் பயண மாற்றம் குறித்து பேசிய அவர், “விஜய் ஒரு நடிகராக சிறப்பாகப் பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) […]

சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை

‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  சென்னை பிராட்வேயைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, சதீஷ் என்பவரைக் காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. […]

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை ஊராட்சியில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டித் தரவில்லை என்றும் மாணவ மாணவிகள் நலன் கருதி புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித் தர அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பொன்னவராயன் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , 11-6-1957 இல் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் ஆகும். இந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு கட்டிடங்கள் பழுது அடைந்ததாக கூறி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு […]

விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…

தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்தவுள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டி இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. ஈரோடு கூட்டத்தில், தவெகவில் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார். இதனால், அடுத்தடுத்து பலரும் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது மருதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறமாக இருந்த விஜயலட்சுமி என்பவரது ஓட்டு வீட்டின் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த விஜயலட்சுமி, கார் ஓட்டி வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்

பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது. கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை மேமரா ஹவுஸ் சேகர் என்றே அழைத்து வந்தனர். ஆனால், நாளடைவில் ஆயிரக்கணக்கான கிளிகள் உணவுக்காக அவரைத் தேடி வந்தபோது. ‘பறவை மனிதர்’ என அழைக்கப்பட்டார்.உலகளவில் பல முன்னணி […]

தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் சின்னத்தை மோதிரம் (Ring) என்று தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி மனு அளித்த தவெக, ஆட், கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை பட்டியலிட்டது. அதில் இருந்து ஒரு சின்னம் இறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தவெக சின்னம் […]

ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

ரஜினி தனது 75 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அவர் மட்டுமல்லாமல் அவரின் பிறந்தநாளை கோடானகோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோவும் வெளியாக இருக்கின்றது. இதனைதொடர்ந்து இன்று ஐதராபாத்தில் நடிகர் ரஜினி தனது 75 வது பிறந்தநாளை ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று ரஜினியின் பிறந்தநாளை […]

அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி‌ இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு முகாம் நடைபெற்றது. இத்தேர்வு முகாம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணைக் […]

இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. உதயநிதி அழைப்பு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்அழைப்பு விடுத்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. வணக்கம். 75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, கழக இளைஞர் அணி. 1980-இல் இன்றைய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட கழக இளைஞர் அணி, கழகத்துக்கு வலிமை சேர்த்து, களத்தில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், […]

என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து…முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரை நூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, […]

வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது

வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பம் கைதாகியுள்ளனர். பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி வந்து ராகுல்- கீர்த்தனா திருமணம் செய்துள்ளனர். மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரி வெட்டிவிட்டு பெண்ணை தூக்கி சென்றுள்ளனர் மணமகளின் குடும்பத்தினர். காயமடைந்த மணமகன் ராகுல், அவரது தாய், தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு தப்பிச் செல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை உள்பட குடும்பத்தினர் 9 […]

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தலைமுடியை பின்னலிடாமல் வந்ததால் மாணவியை பேராசிரியர் ஜாஹிர் ஹீசைன் என்பவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேராசிரியர் தன்னை […]

7ம் வகுப்பு மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கரூர், காந்திகிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் கரூர் பஞ்சமாதேவி அடுத்த சந்தன காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரின் ஒரே மகனான (விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி) 7ஆம் வகுப்பு படித்து வரும் (12 வயது) மாணவனை தாமதமாக வந்ததாக கூறி உடற்கல்வி ஆசிரியர் மணி என்பவர் நேற்று பிரம்பால் அடித்த விவகாரம். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் மற்றும் […]

தங்கம் விலை சவரன் ரூ. 98,000க்கு விற்பனை

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 உயர்ந்து கிலோ ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம்.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாமக

 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அழைப்பு விடுத்துள்ளது. இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இது 2026 தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே சாத்தியமான கூட்டணி யூகங்களை தூண்டியுள்ளது.பாலு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

SIR படிவம் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) படிவங்களை சமர்ப்பிக்க இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடையும் என இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் 3 நாட்கள் அவகாசம் நீட்டித்துள்ளது. இதன்படி SIR படிவங்கள் டிசம்பர் 14 வரை சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிடரிகளுக்கு (அந்தமான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்வீபம், மத்திய பிரதேசம், புதுச்சேரி, […]

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை.. ஜெர்மனிக்கு முதல்வர் பாராட்டு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.12.2025 அன்று சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணியின் வீரர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து உலகக் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்பெயின் அணியின் வீரர்களுக்கு வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம் […]

எடப்பாடி பழனிசாமி-நயினார் சந்திப்பு

நேற்று அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில் அதில் வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் தேமுதிக மற்றும் பாமக இன்னும் எந்த அணியோடு கூட்டணி என்றே தெரியவில்லை. இதில் பாமகவிலேயே தந்தை […]

திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒற்றுமையாக இருக்க வேண்டும்- RSS தலைவர்

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில், மேலும் பல பெண்கள் தங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் […]

டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அன்புமணி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பனையூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு […]

SIR வழக்கு-ஜனவரியில் தீர்ப்பு -சுப்ரீம் கோர்ட்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜனவரியில் தீர்ப்பளிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SIR வழக்குகளில் இனி புதிய மனுக்கள் ஏற்கப்படாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது.

பொறுப்பு டிஜிபிக்கு மருத்துவ விடுப்பு-அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வெங்கட்ராமன் 15 நாள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது..தற்போது அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பதவியில் உள்ளார். ஜி. வெங்கட்ராமன் விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் மற்றும் […]

மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “கலைத்துறையில் இருந்து வந்த அந்த சகோதரர் ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டுகிறார். காகிதக் கப்பலில் கடலை கடக்க முயல்கிறார். அது வெறும் மண்கோட்டையாகத்தான் போகும். அவரின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நனவாகாது” என்று வைகோ தெரிவித்தார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்தில் 41 உயிரிழப்பு ஏற்பட்டும் விஜய் உடனடியாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றும், பொறுப்புணர்ச்சி இல்லாமல் இரவோடிரவாக சென்னை சென்றுவிட்டார் என்றும் வைகோ குற்றம் சாட்டினார். […]

தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதியார்… பிரதமர் மோடி புகழாரம்

இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் மகாகவி பாரதியார். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக […]

ஐநா விருது பெற்ற சுப்ரியா சாகுவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரியா சாகுவுக்கு, ஐ.நா.வின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.இயற்கைப் பாதுகாப்புப் பணிகளில் அவர் ஆற்றிய அயராத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் […]

விஜய்யின் Ex-மேலாளர் திமுகவில் இணைந்தார்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன்.விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று கூறினார். மேலும், விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சமீபத்தில் […]

ஆதார் பெயர் மாற்றத்திற்கு- பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது

ஆதார் அட்டையில், ஒவ்வொருவருக்குமான தனி எண் தரப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், பிறந்த தேதி மற்றும் ஆண்டு, முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக பெயரில் தவறு இருந்தால் ஆவணமாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயர் மாற்றத்திற்கு பல்வேறு ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் குறிப்பாக ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது. அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு […]

அதிக லாப ஆசைகாட்டி பண மோசடி செய்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் (வயது 30) த/பெ ஜெய்சங்கர் என்பவரிடம் இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து பழகிய நபர், வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 17,50,000-னை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்.இது குறித்து பார்த்திபன் அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]

சற்று உயர்ந்த தங்கம் விலை

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

23ம் தேதி வரை தமிழகத்தில் கடும் குளிர் நீடிக்கும்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழகம் ஊடாக காற்று பயணிக்கிறது. அதனால் தமிழக மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். நீராவிக் காற்றைவிட குளிர் […]

SIR பணி நாளையுடன் நிறைவு

SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி பொதுமக்கள் டிசம்பர் 11-ந் தேதிவரை கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி (நேற்று) வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் […]

தேர்தலுக்கு ஆயத்தமாகும் தமிழகம்… வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில்  முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அரசியல் […]

ICC ஒருநாள் பேட்டிங் தரவரிசை- ரோஹித் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் ரோஹித் ஷர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 773 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்திலும், மற்றொரு இந்திய வீரரான ஷுப்மன் கில் 723 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தர்கா பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்த 61வயது முதியவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், 13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 61 வயது முதியவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 61 வயது நபர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு.. தூத்துக்குடி-மைசூருக்கு சிறப்பு ரயில்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் குடும்பத்தோடு தென்மாவட்டங்களுக்கு திரும்புவர். இதையொட்டி தெற்கு ரயில்வேயில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இம்மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன. அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட வருவோருக்கு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் […]

UNESCO-வின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் ”தீபாவளி ”இடம்பெற்றது

தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பின் கலச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்திருப்பது இந்தியாவிற்கு பெருமை தரக் கூடிய தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தனது பாரம்பரிய கலாச்சார (Intangible Heritage) பட்டியலில் சேர்த்தது UNESCO எனும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒன்றிய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் […]

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 11-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் […]

என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக செயல்படுகிற கட்சி… இது எங்க கட்சி டா…” என்று கர்ஜித்த அவர், “சண்முகம் வெளியேறுகிறார், தங்கமணி வெளியே செல்கிறார் என்று பேசினார்கள்; எங்கே சென்றோம்? என் உயிருள்ளவரை நான் அதிமுகவில் தான் இருப்பேன்” என்று உறுதியளித்தார். கட்சிக்குள் பிளவு பேசியவர்களை கடுமையாகச் […]

புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வௌியிட்டுள்ளார். அவற்றில் கூறியிருப்பதாவது.. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட “போலி விவசாயி” எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை. 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு […]

ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று […]

ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி.. அமைச்சர் மகேஸ் தகவல்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி புத்தகக் காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, […]

போக்சோவில் கைதான வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்-புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ஒடிஷா மாநிலம் ராமகட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரா கமங்கா வயது 23,இவர் அப்பகுதியில் 15வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேந்திர கமங்காவைக்கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி 15காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீஸார் புதுக்கோட்டை […]

ரூ.332.46 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு வளாகம்.. முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார். மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய […]

2026ல் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி… எடப்பாடி பேச்சு

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.. 2021 தேர்தலில் 2% வாக்குகள் வித்தியாசத்திலேயே 43 தொகுதிகளில் அதிமுக தோற்றது. 2011ல் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கருணாநிதி இருக்கும்போதே திமுகவால் எதிர்கட்சி அந்தஸ்து பெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக சேர்ந்து பெற்ற வாக்குகள் 41.33 […]

அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் துவங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரியில் போட்டியிட ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். இன்று முதல் டிசம்பர் .18 வரை விருப்ப மனுவை பெற்று ஜனவரி.3க்குள் அமமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, “கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து […]

டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு

தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி என் […]

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து அதிமுக பொதுக்குழுகூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. கனமழை பாதிப்பு. தமிழக அரசை கண்டித்து அதிமுக […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ரவுடியான அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் அருகே, கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் […]

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் […]

தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு திறனறிதல் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் மேல் ஊக்கத்தொகை பெற்று சாதனை. தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் – 2025 தேர்வில் கரூர், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள (பரணி பார்க் வித்யாலயா) தனியார் பள்ளியில் இருந் து மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 100 பேர் தேர்வில் […]

மத்திய நிதி அமைச்சர்- திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு

திமுக எம்.பி. அருண் நேரு வெளியிட்டுள்ள X- தளப்பதிவில், கூறியதாவது… புதுடெல்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முன்வைத்தேன்: * கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் — இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். PACL Ltd மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை […]

தங்கம் விலை உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து கிலோ ரூ.2.07 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது

திருப்பரங்குன்றம் விவகாரம் – தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டும், அரசு அதை நிறைவேற்றவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி காணொலி வாயிலாக இருவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை திருநாளான டிசம்பர் 3 அன்று பழங்கால ‘தீபத்தூண்’ கல் தூணில் […]

61 காலிபணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் விவரங்கள் வருமாறு:தேர்வு நடத்தும் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)பணி நிறுவனம்: தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் லிமிடெட்காலி இடம்: 61பதவி: அரசு உதவி வழக்கு நடத்துநர் (நிலை -2)கல்வி தகுதி: பி.எல். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்கறிஞர் […]

அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ஜி.கே.மணியை பாமகவில் இருந்து நீக்குவது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அறிக்கை அளிக்க வேண்டும். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டார். சூழ்ச்சி செய்து அப்பா- பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணி […]

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக நோட்டீஸ்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஅர் சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் […]

இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் “தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள்” என்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதாகவும், பாமகவைத் தான் உருவாக்கியதாகவும், எனவே கட்சியின் பெயரைச் சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “சொந்த தந்தையே எதிர்க்கும் […]

நெஞ்சுவலி- பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது  அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பிற விவரங்கள் குறித்து மருத்துவமனை தரப்பில் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த 4-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 […]

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்சம் 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள […]

ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. விஜய் அதி நவீன சொகுசுப் பேருந்தில், மக்கள் […]

படையப்பாவின் போது சிவாஜி கேட்ட கேள்வி… ரஜினி உருக்கம்

90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் படையப்பா படமும் கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கற மாதிரி இந்த படத்தின் பாடல்கள், மற்றும் கதை காட்சிகள் இருக்கும். அதிலும் எத்தனை முறை பார்த்தாலும் கண்கலக்க வைக்கும் காட்சி என்றால் அது சிவாஜியின் நடிப்புதான். அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது அந்த வீட்டை ஒரு முறை கட்டிப்பிடித்து விட்டு வருகிறேன் என்று அவர் அதில் சாய்ந்து உட்கார கடைசியில் அந்த இடத்திலேயே அவர் உயிர் போய்விடும். இந்த படம் […]

தங்க நகை பட்டறையில் கொள்ளை… 24 மணி நேரத்தில் சிக்கிய 2 பேர்

கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமியார்ஐயர் வீதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை நவநீதகிருஷ்ணனை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டார் உங்கள் பட்டறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் உடனடியாக நவநீதகிருஷ்ணன் சென்று பார்த்த பொழுது பட்டறையில் வைத்திருந்த ஒரு கிலோ 15 கிராம் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் X-தளபதிவில் கூறியதாவது… காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை, தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம் மற்றும் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியை சோனியாவின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. முற்போக்கான மற்றும் […]

தொண்டையில் ”சிக்கன்” சிக்கி டிரைவர் பலி…

தெலுங்கானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 45). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவர், தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைப்பதற்காக சிக்கன் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி, அவரது மனைவி கோழிக்கறி குழம்பு வைத்து விட்டு கணவருக்காக காத்திருந்தார். அதிக பசியோடு வந்த சுரேந்தர், கோழிக்கறி என்பதால் மிகுந்த ஆசையோடு அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார். அப்போது, அவரது தொண்டையில் கோழிக்கறி சிக்கி கொண்டது. அவர், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் உணவுக்குழாய் வழியாக சிக்கன் வயிற்றுக்குள் செல்லவில்லை. தொண்டையில் […]

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு நாகப்பட்டினம், […]

புதுவை- விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்- பரபரப்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று புதுவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.   5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ. 199க்கு, ஒருகிலோ ரூ.1,99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு போலி ரெய்டு திட்டத்தை செயல்படுத்தினர். கடந்த நவம்பர் மாதம்17ம் தேதி இரவில் துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ 2.50 லட்சத்தை ஒரு மர்ம நபர் மூலம் வைத்து அந்த நபர்களே லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து […]

15 நிமிட தியானம் என் வாழ்க்கையையே மாற்றியது- நடிகை சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் 2வது திருமணம் நடந்தது. புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட காதலை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்த நிலையில், ராஜ் நிடிமோருவை சமந்தா 2வது திருமணம் செய்துள்ளார். […]

வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை…பிரதமர் மோடி

வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திரம். இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. ‘வந்தே மாதரம்’ என்றால் ‘தாய்மண்ணே தலை வணங்குகிறேன்’ என்பதுதான் பொருள். இந்தப் பாடல் இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும் […]

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு 3வது இடம் தான் – டிடிவி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 3-வது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். இதை “எடப்பாடி கே.பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய […]

எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது- முதல்வர் அறிவுரை

 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தாலும், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. CBI, ED, IT, தேர்தல் ஆணையம் அனைத்தையும் நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலி பிம்பங்களை உருவாக்குவார்கள். இவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். கூட்டம் காணொலி வழியாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. […]

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். 18 ஆம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே செல்லும்போது முதியவர் சுந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். சபரிமலையில் மாரடைப்பு, உடல்நலக்குறைவு […]

ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத இபிஎஸ்-க்கு- ஒழுங்கை பத்தி பேச யோகிதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டவுன் மேற்கு மாநகர திமுக செயலாளர் அலுவலகத்தில் 48 பேர் இரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “நான்கரை ஆண்டு காலத்தில் எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்து உள்ளோம் என்பது அனைவருக்குமே தெரியும். முழுமையான பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல […]

பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனின் மகள் பால கிருஷ்ணவேணி (14). இவர் மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலையில் மாணவி பால கிருஷ்ணவேணி சீருடை அணிந்து வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினார். திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் மாணவியை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி பால கிருஷ்ணவேணி […]

ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கிற்கு […]

தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரையில், இன்று (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (09-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

ரூ.1,020 கோடி ஊழல்- மீண்டும் டிஜிபிக்கு ED கடிதம்

ரூ.1,020 கோடி ஊழல் என நகராட்சி நிர்வாகத்துறை மீது அமலாக்கத் துறையினர் டிஜபிக்கு கடிதம்… நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது. நபார்டு நிதி மூலம் நடைபெற்ற நகராட்சி நிர்வாக பணிகளுக்கும் லஞ்சப்பணம் கைமாறியுள்ளது. கிராம சாலைகள், ஏரிகள், நீர் நிலைகள் தொடர்பான திட்ட ஒப்பந்தத்திலும், தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் […]

அதிராம்பட்டினத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலினின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சிறப்பு முகமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு […]

SIR பணியை பொறுத்தவரை பாதி கிணறு தாண்டியுள்ளோம்- முதல்வர்

 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய நோக்கமே “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டத்தை […]

மலையாள நடிகர் திலீப் விடுதலை

2017ல் நடிகையை கடத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறிய வழக்கில் இருந்து நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏ1 முதல் ஏ8 வரை 6 பேர் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 8வது குற்றவாளியாக நடிகர திலீப் சேர்க்கப்பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் தீர்ப்பானது. நடிகர் திலீப்பிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். […]

திருப்பத்தூர் அருகே வெண்கல சிலை கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41) ருக்கு தம்பதியினர் திருப்பதி மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் புதியவீடு கட்டுவதற்காக பணி தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ள ம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் ஐந்து அடி ஆழம் பள்ளம் தோண்டிய நிலையில் அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் சுமார் 7 இன்ச் அளவிலான […]

குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், நோய் தொற்று அச்சம் தீவிரம்! திருப்பத்தூர் மாவட்டம், 36-ஆம் வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பல வாரங்களாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சனை தற்போது தீவிரமடைந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருமால் நகர் பகுதிக்கு பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை முறையாக தூர்வாரப்படாததே […]

இன்றைய தங்கம் விலை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்தவித மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.198க்கு விற்கப்படுகிறது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் வெட்டிக்கொலை…தொழிலாளி கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தட்டார்மடத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளனர்.ஜேம்ஸ் சித்தர் செல்வன் கடந்த 3-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரது இடத்துக்கு […]

11ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் ஆணையும் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் வரும் 11ம் […]

இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் […]

டேங்கர் லாரி மோதி இளம்பெண் பலி… டிரைவர் தலைமறைவு…

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி. இவர் தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு பணி முடித்துவிட்டு சிவரஞ்சனி ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் ஸ்கூட்டரில் சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனி மீது மோதியது. இதில் லாரி டையர் ஏறியதில் சிவரஞ்சனி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், […]

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாறனும்..நயினாருக்கு எம்பி கனிமொழி கேள்வி

 எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவை படுதோல்வி அடையச் செய்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?. கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவை ஃபைசாபாத் தொகுதி மக்கள் படுதோல்வி அடைய செய்தனர். கவலை வேண்டாம், அப்படித்தான் பல ஆண்டுகளாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்று எம்பி கனிமொழி பதிலடி தெரிவித்தார்.

அவர் விஜயை சந்தித்தாரா?… செல்வபெருந்தகைக்கு சந்தேகம்

தமிழக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசியதுதான். சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று இரவு நடந்த இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சாத்தியமான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு ஆகியவை பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி […]

ராமதாஸ் அய்யாவுக்கு துரோகம்.. டில்லியில் கொந்தளித்த GK மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் உள்கட்சி மோதல் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், டெல்லி காவல்துறை என மூன்று முனைகளில் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவி, சின்னம், பெயர் ஆகியவற்றை அன்புமணி தரப்பு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முன்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட […]

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பப்பட்ட […]

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-12-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-12-2025 முதல் […]

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

 டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பப்பட்ட […]

SIR பணி முழுமை அடையவில்லை எனில் ரத்து செய்யனும்-அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஒரே அறையில் அமர்ந்து 22,000 வாக்காளர்களை நீக்கியுள்ளனர். பிஎல்ஓ-க்கள் வாக்காளரை சரிபார்க்க வீடு வீடாகச் செல்லாமல் ஒரே அறையில் அமர்ந்தே நீக்கிவிட்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கூறுவது தவறு, எந்த ஊரிலும் ஆய்வு செய்யவில்லை என தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்துக்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்த நிலையில், நேற்று நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

டிச.9ம் தேதி ”அரசன்” படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘அரசன்’ படத்தின் பூஜை வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் புரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த சிம்பு பேசியதாவது:வரும் டிச.9ஆம் தேதி மதுரையில் அரசன் […]

அம்பேத்கர் உருவப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை

த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் சாலைகள், சிக்னல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை கையேந்த வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பல ஆண்டுகளாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குழந்தை உரிமைகள் மீறலாகவும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகவும் கருதப்படுவதால், இதுதொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது ஒரு மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக […]

ரெப்போ வட்டி குறைப்பு– EMI குறையுமா? முழு விவரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது , குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்திருப்பதாலும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நோக்கிலும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு சாமானிய மக்களுக்கு, குறிப்பாகக் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. 🔎 ரெப்போ வட்டி குறைப்பின் தாக்கம்: உங்கள் கடன்களில் என்ன நடக்கும்?ரெப்போ வட்டி விகிதம் என்பது, வணிக […]

டிச.,19ம் தேதி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் திறனையும், டிஜிட்டல் அறிவையும் மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு அறிவித்திருந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழா வரும் டிசம்பர் 19-ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாகத் தொடங்கப்படும் என்று அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி […]

தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி

நடிகர் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகம், வரும் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார் . இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா ரவி விரைவில் தவெக-வில்  இணைகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செங்கோட்டையனை  சந்தித்த பிறகு நடிகர் ஜீவா ரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தற்போது தான் உயிரோடு இருக்க காரணமே […]

விரைவில் விஜய் சுற்றுப்பயணம்… செங்ஸ் தகவல்

தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவம் மாவட்ட அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நினைவுநாளில் அவரது புகழை போற்றும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து […]

மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி..! என்ன நடந்தது?…

நடிகர் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் சூரியை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, “அன்புள்ள சூரி அண்ணா, […]

அம்பேத்கர் நினைவு தினம்- முதல்வர் ஸ்டாலின் X-தள பதிவு

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் […]

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலை-யில் ஆய்வுப் படிப்பு

அம்பேத்கர் – கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு!தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிவான எஸ்ஓஏஎஸ் (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி) ஒரு புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அம்பேத்கர்-கலைஞர் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி வருகை ஆய்வாளர் படிப்பு (Ambedkar Kalaignar Visiting Fellowship for Social Justice and Federalism) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம். அம்பேத்கர் […]

இண்டிகோ விமான சேவை பாதிப்பு- சென்னை ஏர்போட்டில் பயணிகள் அவதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய இண்டிகோ விமானங்களில் சுமார் 31 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த ரத்து தொடர்வதாகத் தெரிகிறது. விளைவு: விமான சேவை பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல பயணிகள் மற்ற விமானங்களில் அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் ஆவேசம்: அதிகக் கட்டணம் காரணமாக, சென்னை – கோயம்புத்தூர் போன்ற […]

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்

 கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூல​மாக அனில் அம்​பானி குழு​மத்​தின் நிதி நிறு​வனங்​களுக்கு வந்​துள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அனில் அம்​பானி​யின் 18 சொத்​துக்​களை அமலாக்​கத் துறை தற்போது முடக்​கியது. இவற்​றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த […]

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகை…ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் விநியோகம்…அமைச்சர் காந்தி

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் “பொதுமக்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது. 17 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி கூறுகிறார். நிர்ணயித்த அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ள 13 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிப்பு. […]

மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் (Bow String) வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான […]

மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் (Bharat Innovative Glass Technologies Private Limited […]

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்தேன்….நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி […]

தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண இருக்கிறது. தற்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறது. இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை மறுத்தார்.இந்த பரபரப்புக்கு மத்தியில், தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து […]

விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து

மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும். மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் […]

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆண்டுக்கொருமுறை கார்த்திகை மாதம் பௌர்ணமியையொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு அதிபுரீஸ்வரரின் தங்க முலாம் பூசிய […]

வைகை அணையில் இருந்து 8 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு (கிருதுமால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக வைகை அணையில் உள்ள இருப்பு மற்றும் எதிர் நோக்கும் நீர்வரத்து ஆக மொத்தம் 2,008 மில்லியன் கனஅடி நீரில், வருகின்ற 05.12.2025 முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் […]

தொடர் மழை…டெங்கு பாதிப்பு அதிகரிப்பு…பொது சுகாதாரத்துறை தகவல்

தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. சென்னை, கோவை, மதுரை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழையினால் தேங்கியிருக்கக் கூடிய […]

கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியது. மாற்றுத் திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 24ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, தஞ்சை பனகல் […]

அரசு வக்கீல் வெட்டிக் கொலை – பட்டப் பகலில் அதிர்ச்சி சம்பவம்

தென்காசி அருகே உள்ள ஊர் மேனியழகியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் தென்காசி கூலக்கடை பஜாரில் செயல்பட்டு வந்தது. இன்று பகல் 12 மணிக்கு இவர் அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இவரை அரிவாளால்  சரமரியா வெட்டிவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சைக்காக தென்காசி அரசுருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தென்காசி மாவட்ட […]

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அரசியலின் முக்கியக் கட்சியான (பாஜக), தனது கூட்டணிப் பலத்தை (National Democratic Alliance – NDA) அதிகரிப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் அணுகியதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர்கள், டி.டி.வி. தினகரனை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விடுத்த முக்கிய வலியுறுத்தல், அவர் தனது அமமுக கட்சியை […]

தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன், மாநில பொருளாளர் வீரப்பன், மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர தலைவர் காமராஜ் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதையடுத்து மாநிலத் தலைவர் பழனியப்பன் நிருபர்களுக்கு […]

துணை முதல்வர் பிறந்தநாள்- 5000 பேருக்கு சமபந்தி ..

தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்டங்கள் விளையாட்டுப் போட்டிகள் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பொதுமக்களுக்கு வழங்க வருகின்றனர் இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி ஏற்பாட்டில் கோட்டூர் ரோட்டில் பந்தல் அமைக்கப்பட்டு 5000 பேருக்கு சமபந்தி விருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு கண்ணப்பன் வழங்கினார் இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சூடாக சிக்கன் பிரியாணி வறுவல் கேசரி பழம் பீடா […]

கரூர் வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கூடாது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், வழக்கின் விசாரணையை மீண்டும் மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புவதைக் காட்டுகிறது. 1. முதலில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய […]

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சி.பி.ஐ.) விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக அளிக்கலாம் என கரூர் மாவட்ட […]

ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆகவும், 500 மிலி பாட்டில் ரூ.315ல் இருந்து ரூ.365 ஆகவும் விற்பனை […]

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னைஅருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தற்போது வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் புயல் அபாயம் முழுமையாக நீங்கியுள்ள போதிலும், மழை மற்றும் காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 2) தமிழ்நாட்டில் ஓரிரு […]

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக மனுக்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுமக்கள் மனுக்கள் வழங்க ஏதுவாக சாமியான பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது […]

கனமழை… 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. […]

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனம் குறித்து அவர், “யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை […]

வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் அருகில் வழிப்பாட்டு தளங்கள், தோல் தொழிற்சாலை, பள்ளிகள் உள்ளதால் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். இதனால் டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறி விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்பாட்டம் நடத்தியதின் பேரில் […]

கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின் அடிப்படை உரிமைகளான நிலம் நீர் காற்று ஆகியவை மாசு அடைந்திருக்கின்றன இதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், 2023ல் தமிழக அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சிப்காட் பிரச்சனைக்கு ஆளும் கட்சி ஆண்ட கட்சி […]

தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என நல்ல ஒரு டார்கெட்டை வைத்தது. விராட் கோலி 135 ரன்கள் (120 பந்துகள்) உட்பட அபாரமாக விளையாடி, 52வது ODI சதத்தை அடைந்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் (50 பந்துகள், 5 சிக்ஸ்) அடித்து ODIயில் அதிக சிக்ஸ் அடி […]

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… செல்வப்பெருந்தகை வாழ்த்து

செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.50 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம். இன்னும் பலப்பல விருதுகளைப் பெற்று திரையுலகிலும் புகழுடன் வாழ விரும்புகிறோம்.” என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

டில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து நகை -பணம் கொள்ளை- தஞ்சையில் பரபரப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது . இந்த நிலையில் நேற்று வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்தனர். பின்னர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் . பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகை, […]

சீரூடையின்றி பணியாற்றிய மின்ஊழியர்கள்-பொதுமக்கள் போல் கேள்வி எழுப்பிய அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, பூதூர் கிராமம் வழியாக மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, விவசாய நிலம் ஒன்றில் இருந்த மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சரிசெய்த பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்தில் ஊழியர்கள் ஏறி மின் இணைப்பை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கண்ட மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது வாகனத்தை சற்று தள்ளி நிறுத்திவிட்டு, மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் அருகில் சென்று பொதுமக்கள் போல பார்வையிட்டிருக்கிறார். அப்பொழுது இருசக்கர […]

எலான் மஸ்க் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்

தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஷிவான் சிலிஸ், தான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவர் கனடாவில் வளர்ந்ததாகவும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். ஷிவானின் தந்தை […]

குட் நியூஸ்- இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு பிறகு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே, அதற்கு முன்னதாக 3 மெகா திட்டங்களை அறிவிக்க தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர், ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த 3 நிறுவனங்களும் 20 லட்சம் லேட்டாப்களை தயாரித்துவிட்டது. இந்த […]

புதிய திராவிட கழக” 6வது மாநில மாநாடு- உதயநிதி பங்கேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் புதிய திராவிட கழகத்தின், ‘ வெல்லட்டும் சமூக நீதி’ – 6வது மாநில மாநாடு, நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி எழுமாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.. புதிய திராவிட கழகத்தின் தலைவர், கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பங்கேற்றனர். இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சி […]

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் இன்று (டிச., 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்தது. ஒரு சிலிண்டர் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப் 01 ம் தேதி ரூ.51.50, ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.33.50, ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. கடந்த […]

தங்கம் விலை சவரன் ரூ.96,560க்கு விற்பனை

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ.12,070க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ரூ.196க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ. 1,96,000க்கும் விற்பனையாகிறது.

காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி

சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று நடந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் அபாய நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோபியில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் அவர் வைத்திருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றுள்ளது. […]

மெட்ரோ ரயில் ஸ்டேசனில் பெண்ணுக்கு Flying kiss-டெய்லர் கைது

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 24 வயது இளம் பெண் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் நின்ற முதியவர் ஒருவர், இளம் பெண்ணிடம்  “எங்கே செல்கிறாய்” எனக் கேட்டுள்ளார். அவர் பதில் ஏதும் சொல்லாமல் நிற்கவே… முதியவர் பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார் என தெரிய வருகிறது. இது தொடர்பாக இளம் பெண் காவல் […]

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக் கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது 30 முதல் 70 கிலோ மீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று […]

வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவேல்,இவரது மனைவி கீதா, இவர்களுக்கு மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்த […]

டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது  டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் டிட்வா புயல் கரையை நெருங்குவதால் புதுச்சேரியில் கடும் சீற்றத்துடன் கடல் கொந்தளிக்கிறது. அலைகளின் ஆக்ரோஷத்தால் கடற்கரை […]

கரையை விட்டு விலகும் டிட்வா புயல்

தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது புயல் 30 முதல் 70 கிலோமீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கு- தெற்கிழக்கில் டிட்வா புயல் உள்ளது. வேதாரண்யத்டுக்கு கிழக்கு- வடகிழக்கு திசையில் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் முதுவாக நகர்கிறது.

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி-ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.ரயிலில் தூங்கிய அவர், விருதுநகர் வந்தபோது திடீரென கண் விழித்தபோது அருகில் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் மொத்தம் 9½ சவரன் தங்கச்சங்கிலிகள், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவை இருந்ததாக சக பயணிகளிடம் […]

டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் தான் சேகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தொழிற்சங்கங்கள் போராட்டம் வாயிலாகவும், […]

மீனவ குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை

இலங்கை கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையை வெள்ளத்தால் மூழ்கடித்து 50 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில் இப்போது தமிழ்நாடு நோக்கி இந்த புயல் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், கீழத் தோட்டம், புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் ஆகிய துறைமுக பகுதியில் உள்ள 150 விசைப்படகுகள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 2000க்கு மேற்பட்ட பைபர் படங்கள் மற்றும் பாய்மரப்படகு உள்ளான இதில் மீன் பிடிக்கச் செல்லும் பத்தாயிரம் மீனவர்கள் தஞ்சை கடற் பகுதியில் உள்ளனர். […]

என் உயிரை மட்டும்தான் அன்புமணி எடுக்கவில்லை… ராமதாஸ் வேதனை

கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் முன்னாள் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். இது பாமகவின் உள் பிளவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ராமதாஸ் பேசுகையில், “நான் வயிறு எரிந்து செல்கின்றேன். உன் […]

படகு,பயிர் சேதம் -30ம் தேதிக்கு பின் கணக்கெடுத்து இழப்பீடு- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட ஆட்சிகள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலேசானை மேற்கொண்டார்.நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று அமைச்சர் ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர் விழுப்புரம் ராமநாதபுரம் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக அமைச்சர் ஆலோசனை […]

ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்- தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள 30 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 02, […]

SIR-ஆல் பல BLO-க்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.. எம்பி கனிமொழி

மனிதாபிமானமே இல்லாமல் எஸ்ஐஆர் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மாநிலங்களவை […]

புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

புதுச்சேரி- தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டிருந்த டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் நடைபெற விருந்த ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. கலாப்பேட்டை முதல் கண்ணியாக்கோயில் வரை அஜந்தா சிக்னல், உப்பலம், அரியங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போன்ற இடங்களைத் தொடும் இந்த ரோடு ஷோவுக்கு தவெக புதுச்சேரி அலகு தலைவர்கள் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் போலீஸ் டிஜிபி […]

மக்களே உஷார்- தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”

‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. தொலைவில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் […]

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மல்லிகை விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய திடீர் உயர்வு வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் கூறுவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக மல்லிகை செடிகளின் […]

கதண்டு கடித்ததால் பாதிப்பு.. கரூர் தொழிலாளர்களுக்கு VSB ஆறுதல்

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கதண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்ட 6 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கதண்டு கொட்டிய தொழிலாளர்களை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

டிட்வா புயல்-16 கால்நடைகள் பலி…24 குடிசைகள் சேதம்- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. டிட்வா புயல் சென்னையை தாக்குமா.? என்பதை வானிலை மையம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் அதற்கான தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம். திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களை மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். நாகையில் இரு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்-அமைச்சரின் அறிவுரையைப் […]

நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) சமீபத்திய தகவலின்படி, புயலின் மையம் தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தென்கிழக்கே, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தென்கிழக்கே, காரைக்காலுக்கு 190 கி.மீ. தென்கிழக்கே உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் துவங்கியது

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று 29-11-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எம்.பி.க்களில் சிலர் மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். இக்கூட்டத்தில், எஸ்ஐஆர் பணிகள் குறித்தும், […]

புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

 அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவர் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று அவர் உருக்கமாகக் கூறினார். செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அதிமுகப் பயணத்தை மதித்தே இந்த வாழ்த்தைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.அதே நேரத்தில், தானும் அதிமுகவிலேயே தொடர்ந்து இருப்பேன் என்று […]

இனி CBSE- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 7 பாடங்கள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமானது ( சி.பி.எஸ்.இ.) மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி செயல்படுகிறது. தங்களது இணைப்பு பள்ளிகளுக்கான வரையறைகளை, மத்திய கல்வி அமைச்சக ஆலோசனைப்படி, அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதற்கான பாடப்புத்தகங்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வாயிலாக வழங்கி வருகிறது. புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் 2 முறை பொதுத்தேர்வு […]

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்

பாமகவின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே பாமகவை கைப்பற்றும் நோக்கில் இருவருமே தனித்தனியாக முயற்சிகளை மேற்கொண்டனர். ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற, அன்புமணி மாவட்ட வாரியாக […]

டிட்வா புயல் – 10 மாவட்டத்திற்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

 டிட்வா புயல் காரணமாக இன்று (29.11.2025) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1120 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1, 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.192க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டித்வா புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டித்வா புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (29-ந்தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையன் அவரது சொந்த ஊரான ஈரோடு கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். செங்கோட்டையன் சென்ற விமானம், கோவையில் 1.40 மணிக்கு தரை இறங்க […]

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டில் இருந்து பயணிகளின் வசதிக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பதிவெண் கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த கேரள போக்குவரத்துத் துறை, தலா ரூ.2 முதல் ரூ.3 லட்சம் என ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தது. கேரள அரசின் இத்தகைய நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

பறிமுதல் வாகனங்களை வைத்து சிவகங்கை போலீஸ் விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10ம் மாதம் 27ம் தேதி நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினத்தையும், 30/10/25 அன்று நடைபெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை நகர் & தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், கீழச்சீவல்பட்டி, திருக்கோஸ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் ஸ்டண்ட் செய்த வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், இதில் 96 […]

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல்… அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்: திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்தும் யாரும் […]

டிட்வா புயல்- 17 மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தநிலையில் […]

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்

நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார். கடந்த 1965-ம் ஆண்டு வெளியான ’காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இவர் கடைசியாக 2001-ல் வெளியான […]

மணிக்கு 10கி.மீ வேகத்தில் நகரும் ”டிட்வா புயல்”

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 530 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரிக்கும். 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை.. இல்லதரசிகள் ஷாக்

நெல்லையில் வெள்ளை கத்தரிக்காய் விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று சில்லறை கடைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ.85 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதுதவிர சில்லறை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70, வெண்டைக்காய் ரூ.50, அவரை ரூ.100, சீனிஅவரை ரூ.50, பாகற்காய் ரூ.100, முருங்கைக்காய் ரூ.300, பல்லாரி ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.70, […]

அதிகனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழு

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1 அணி மற்றும் புதுச்சேரிக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சூறைக்காற்று வீசுவதால்… பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் பாம்பன் பாலம் வழியே […]

95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விtலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று குறைந்தது சாமானிய மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. இதனால் இன்றும் […]

உதயநிதி முதல்வர் ஆவார்”- கமல்ஹாசன்

சென்னை பாரிமுனையில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், “திமுக என்பது ஒரு உணர்வு. நான் கண் திறந்தபோது பார்த்த சூரியன் இதுதான். உதயநிதி முதலமைச்சர் ஆவார். அவருக்கு இந்த அரங்கத்தில் பாராட்டு கூட்டம் நடத்தப்படும், அப்போது இந்த அரங்கம் பத்தாது. திமுகவின் கொள்கையும், மநீமவின் கொள்கையும் ஒன்றுதான். வந்தவர் எல்லாம் வாகை சூட நினைத்தால் எங்கள் போர்க்குணம் விடாது. தேர்தலில் மநீம சொன்ன ஆலோசனைகளையும் திமுக அரசு […]

சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. […]

டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் , விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் தெரிவி்த்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்ததால் கண்காணிப்பு […]

துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ,இனிப்புகள் வழங்குதல், பொது மக்களுக்கு அன்னதானம், உள்ளிட்ட 207 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் […]

மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர்  வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்களுடன், தங்கப்பாண்டியனுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ற இளஞ்சியம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை […]

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம்  ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை  காவல் நிலையத்தில்  (துப்பறியும் எஸ்.ஐ.) யாக பணியில் சேர்ந்தார்.  இருப்பினும், கடந்த சில நாட்களில், அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனில் சிக்கினார். இதன் காரணமாக, அவர் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன்  தங்கத்தை எடுத்து விற்று பணம் பெற்றார். […]

போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த நவ.17 ஆம் தேதி நள்ளிரவில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ […]

அன்புக்கிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்

சென்னை -தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக கொடியை ஏற்று உறுதிமொழி ஏற்றனர். இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு-கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளருமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. தவெகவில் […]

நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் இந்தியபெருங்கடலில் உருவாகிய இருக்க கூடிய தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

சென்னை : இன்று (நவம்பர் 27) காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக (Cyclone Ditwah) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவிலும், இலங்கை ஹம்பாந்தோட்டாவிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று மாலைக்குள் இலங்கை கரையை ஒட்டி புயலாக மாறி, பின்னர் […]

நடிகை சம்யுக்தா 2வது திருமணம்… கோலாகலம்

பிக் பாஸ்  4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சம்யுக்தாஷான். மாடல் அழகியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் படு பிசியானார். வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணத்தை சத்தமில்லாமல் எளிமையாக செய்துமுடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா […]

நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா நாயர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 87. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உதயநிதி பிறந்தநாள்… முத்தம் கொடுத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(நவம்பர் 27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக – விளையாட்டுத் துறை அமைச்சராக – மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ […]

7 துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை, புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல பாம்பன், […]

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், […]

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார். அங்கிருந்த தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், 4 மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர் வரை.ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக, வாகனத்தின் மீது படுத்துக்கொண்டும், கால்களை பின்புறமாக வைத்துக்கொண்டும் ஏதோ சாகசம் செய்வதுபோல் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். அந்தச் சாலையில் அருகில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கரூர்-திருச்சி […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனையாகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி […]

பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முத்துகேசவன் என்பவரையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எழில் இளவரசி ஆகியோரை வேட்பாளராக அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் பேசிய சீமான், “சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள், […]

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 2:51 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீரென பெருந்தீ ஏற்பட்டது. இந்த குடியிருப்பு 8 பிளாக்கள் கொண்டது, 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தீ விபத்து ஒரு பிளாக்கில் தொடங்கி, வெளியில் அமைக்கப்பட்ட பாம்பூ (bamboo) ஸ்கேஃபோல்டிங் மூலம் விரைவாக அனைத்து பிளாக்களுக்கும் […]

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன், கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில், 27-11-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கான அழைப்பிதழை  மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற […]

என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

டில்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற தோல்வியை (whitewash) சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் 30 ரன்கள் தோல்வி, இரண்டாவது கவுகாத்தியில் 7 விக்கெட்டுகள் தோல்வி. இது இந்தியாவின் வீட்டு டெஸ்ட் சாதனைக்கு பெரும் தாக்குதல். கடந்த 6 வீட்டு டெஸ்ட்களில் 4 தோல்வி, நியூசிலாந்துக்கு தொடர் தோல்வி போன்றவை கம்பீரின் தலைமையில் நடந்தன. இந்தியாவின் வீட்டில் 25 ஆண்டுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு தொடர் வெற்றி.கம்பீரின் தலைமையில் பேட்டிங் அணுகுமுறை […]

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாடுமுழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

 நாட்டில் உயிரிழந்தோர் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக யுஐடிஏஐ எனும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பதிவாளர் ஆணையரிடம் இருந்து உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு ஆதாரில் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்டோரிடமிருந்து பெற்ற தகவல் அடிப்படையில் நீக்கம் செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் இறந்தால் ஆதாருக்குத் தகவல் தெரிவிக்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. முறைகேட்டைத் தடுக்கும் வகையில், இறந்தவரின் ஆதார் எண் வேறு எவருக்கும் தரப்படாது. […]

விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் தாக்கினார். “விவசாயிகளின் நெல் ஈரப்பதத் தளர்வு கோரிக்கைக்காக பிரதமரைச் சந்திக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல ஏ.சி. கார் தந்து டெல்லிக்கு அனுப்பி […]

மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தரைக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உத்தரவின் பேரில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன. என் எஸ் பி சாலையில் தரை கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள் தங்களுக்கு யானைகட்டி […]

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த குமரன் (21) என்ற வாலிபர். Stylish_ racer_108 என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி அதில் அதில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது பவுடரை கொட்டி வெடி மருந்து வைத்து வெடிக்கச் செய்கிறார். அது பெரிய குண்டு போல வெடிக்கிறது. அதன் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்இ அதேபோல மாரி படத்தில் வரும் டயலாகான நம்மளால அவனை தொடக் கூட […]

இந்திய மண்ணில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 26/0 ரன் எடுத்து, 314 ரன் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பந்துவீச்சு எடுபடாததால், முதல் […]

வில்லனாக நடிக்க தான் ஆசை… திருச்சியில் நடிகர் முனீஸ் காந்த்

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி எல் ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களை சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர். ரசிகர்கள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்தனர். திரைப்படத்தின் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ் காந்த் ஒரு சவரன் தங்க சங்கிலியை பரிசளித்தார். மேலும் […]

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் வழங்கினார். தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாறா? அல்லது திமுகவில் இணைவாறா என கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I – கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.சாலையின் மொத்த நீளம் – 2 […]

வீடு புகுந்து மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற மர்ம கும்பல்

ராணிப்பேட்டையில் 70 வயது மூதாட்டியின் கம்மலை காதோடு அறுத்து சென்ற மர்ம கும்பல் . ராணிப்பேட்டை அகராவரம் மலைமேடு பகதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றுள்ளனர் அந்த கும்பல். வீட்டிலிருந்து மூதாட்டி வௌியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபொழுது மூதாட்டி மயக்கமடைந்து கீழே கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம […]

கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை

கடந்த 24-ந்தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நேற்று) இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். எனவே, தமிழ்நாடு […]

தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176 க்கு விற்பனை ஆகிறது.

உருவானது ‘சென்யார்’ புயல்’! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 […]

கனமழை எதிரொலி…முன்னெச்சரிக்கை நடவடிக்கை…மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்…

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும். எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” 24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25, இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி […]

கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06075) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 4-ந் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06076) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இதேபோல் […]

கவர்னர் ரவி அவதூறு பரப்புகிறார்.. அமைச்சர் ரவி காட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் திராவிட இயக்கத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறி, “திராவிடம் என்பது கற்பனை” என்று கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி பேச்சிக்கு திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தக் கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “ஆளுநர் ரவி எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்” என்று அவர் […]

தவெகவில் இணையும் கே.ஏ.எஸ்.. நாளை எம்எல்ஏ பதவி ராஜினாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.  அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.இதன் காரணமாக செங்கோட்டையனின் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கடந்த மாதம் நடைபெற்ற தேவர் ஜெயந்தி நிகழ்வில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் […]

கனிமொழி எம்பியால் காப்பாற்றப்பட்ட மாற்றுதிறனாளிகள் உணவகம்

சென்னை, திருவல்லிக்கேணியில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கேப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையரக அலுவலகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக, முதல் தளத்தில் செயல்பட்டு வந்த மியூசியம் கஃபேவை […]

தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிக வளாக கடை உரிமையாளர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று, இன்றும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், […]

வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமகவின் கூட்டணி குறித்த முடிவு, வருகிற டிசம்பர் 30ம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி […]

இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு

இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரானது சென்னை மற்றும் மதுரையில் நவ.28 முதல் டிச.10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, […]

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 4 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நவ.29ல் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், புதுச்சேரி மாவட்டங்களிலும் நவ.29ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் சனிக்கிழமை மிக கனமழை பெய்யக்கூடும்.

பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.  பெட்ரோல் கலப்படம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், பாட்டிலில் பெட்ரோல் பிடித்துப் பார்த்தபோது தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என பணியாளர்களை எச்சரித்த போலீசார், […]

நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா, தனது நீண்டகால காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நவம்பர் 23 அன்று திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிச்சயதார்த்த வீடியோவில் ஸ்மிருதி தனது அணி தோழிகளுடன் நடனமாடி, மோதிரத்தைக் காட்டி அறிவித்தது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை (நவம்பர் 23) திடீர் துயர விபத்து: ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அனுமதிக்கப்பட்டதால் திருமணம் […]

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரும் பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். […]

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில், தென்குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதனால் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 174க்கு விற்பனையாகிறது

அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, “வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும். இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன. வரும் […]

நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை. முறையாக கொள்முதல் செய்திருந்தால் நெல் ஈரப்பதம் பிரச்சனை வந்திருக்காது. நெல்லை எடைபோட போதிய ஆட்கள், போதிய வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை. அரசு காட்டிய நெல் கொள்முதல் தாமதத்தால் தான் இப்போது விவசாயிகள் தவிக்கிறார்கள். நெல்கொள்முதல் விவகாரம் […]

“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், “SIR விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்பட்டுள்ளது.  விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட SIR படிவங்களில் 50 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன. அவற்றை […]

நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

2019-ல் நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபாக்டரி” மூலம் “பீரமே வாகை சூடும்” படத்தை எடுத்தார். இதற்காக “கோபுரம் ஃபிலிம்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார். அந்தக் கடனை லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) திருப்பிச் செலுத்தி, விஷாலிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. ஆனால் விஷால் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று லைகா குற்றம் சாட்டியது. அதனால் 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து நாட்டுப்படடகு மற்றும் விசைப்படகுககளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் ( 24.11.2025 ) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை மற்றும் கடலோர் காவல் படை சார்பில் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது […]

கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா – தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து […]

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர் அவருக்கு சொந்தமான காரில் ஊத்தங்கரை சென்று விட்டு வீடு திரும்பும் போது திருப்பத்தூர், அண்ணாநகர் அருகே அதிவேகமாக கார் சென்ற நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி […]

தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாக உயரத் தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னை […]

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

 தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், சமூக வலைதளங்களில் த.வெ.க. ஆதரவாளர்களை “தற்குறிகள்” என்று விமர்சிக்கும் நெட்டிசன்களை கடுமையாக சாடினார். “அதென்னப்பா அது… தற்குறியா!” என்று சிரித்துக்கொண்டே கேப் விட்ட விஜய், “நமது கட்சிக்கு ஆதரவு தரும் லட்சக்கணக்கான தொண்டர்கள், Gen Z தலைமுறை இளைஞர்களை ‘தற்குறிகள்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். இப்போது அவர்களே மாற்றிப் பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார். இது திமுக ஆதரவாளர்களின் […]

அஜித்துக்கு ”இந்த ஆண்டின் ஜென்டில்மேன்” விருது

 ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது; பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் […]

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை ஆகிறது.

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 17 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான பூர்வ பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜயின் வாக்குறுதி கனவுகள் நிறைவேறட்டும்* ஒவ்வொருவர்களுக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனை பூர்த்தி […]

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை (24-11-2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட […]

முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர், இதில் திமுக […]

மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  மாவட்ட  நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிககனமழை பெய்யக்கூடும் […]

நமன்ஷ் சியால் உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன்”- மு.க.ஸ்டாலின்

துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானத்தின் விமானி 37 வயது நமன்சியால் பறந்து சென்று சாகசம் செய்த விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து […]

தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு […]

திமுகவுடன் காங்.,பேச்சு வார்த்தை… 5 பேர் பெயர்கள் அறிவிப்பு

 காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தெடந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்படை விட 6% குறைவாக […]

பொறுப்பு டிஜிபி குறித்து எடப்பாடி பேச எந்த அருகதையும் இல்லை-அமைச்சர் ரகுபதி

 பொறுப்பு டிஜிபி குறித்து கேள்வி கேட்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி. என்ற முறையைக் கொண்டு வந்ததே அதிமுக ஆட்சியில்தான். இன்று அதைப் பற்றி பேச எந்த அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். 2011ல் ராமானுஜத்தை பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும், ராஜேந்திரனை பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் கொண்டு வந்தது அதிமுகதான். மாநில அரசு விருப்பப்படிதான் டிஜிபி நியமனம் இருக்கும்; […]

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன். இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்; 50க்கும் மேற்பட்ட கவிதை நுால்களை எழுதியவர்.இவர் ஏற்கனவே, தமிழக அரசின், ‘கலைமாமணி’ விருது, மத்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் கவிதைத் தொகுப்பான “வணக்கம் […]

போதை ஒழிப்பு.. திருச்சி-மதுரை நடைப்பயணம்-மதிமுக வைகோ தகவல்

வைகோ தலைமையில் ‘சமத்துவ நடைப்பயணம்’ — போதை ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு கோரிக்கையுடன் ஜனவரி 2 முதல் 12 வரை திருச்சி–மதுரை 180 கி.மீ நடைபயணம்.. தவெக தலைவர் விஜய்–கரூர் சம்பவம் குறித்து கடும் விமர்சனம்.. போதைப் பொருள் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி.. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாதி மோதல் தடுப்பு குறித்து […]

அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் டாக்டர் நடனம்… சஸ்பெண்ட்

உ.பி ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திக்கை காண, அவரது வருங்கால மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அப்போது மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த அறைக்குச் சென்ற இருவரும், அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றி விட்டு நடனமாடியுள்ளனர். இதனை அங்கிருந்த நோயாளிகள் வீடியோவாக எடுத்துப் பதிவேற்ற வைரலானது. ப்ரீத் இதனைக் கண்ட பலரும், மருத்துவர் வக்கார் சித்திக்கின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். […]

1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகைப்பூ பிச்சிப்பூ முல்லைப் பூ கனகாம்பரம் மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இன்று காலை மலர் சந்தையில் திடீரென மல்லிகைப் பூவின் விலை கடும் […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, […]

திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது.தங்களைவிட்டு காங்கிஸ் எங்கும் செல்லாது என சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அரசல் புரசலான கருத்துகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக தகவல் […]

விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். QR உடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேருக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதனை தவெகபொதுச்செயலாளர் ஆனந்த் அறித்துள்ளார். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்புநடைபெறுகிறது. காஞ்சிபுரம் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த பிரச்னைகளை குறித்து இந்த மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது எனதவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் பாத்திமா போஷ்

2025ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார். இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1360 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.172க்கு விற்பனை ஆகிறது.

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும். இரண்டாவது பொதுத் தேர்வு விருப்பத் தேர்வாக எழுதலாம் எனவும், இந்தத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் ராகுல் சிங் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், முதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் நடக்கும். இந்த முதல் தேர்வை அனைவரும் […]

விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…

விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறேன். கணவரை பிரிந்து வாழும் எனக்கு, 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2021 ஏப்ரலில், புதுக்கோட்டைக்கு வரவேற்பாளர் பணிக்காக நான்கு பேர் சென்றோம். அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். […]

ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் இன்றைய தினம் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பு கட்சிகள் அதன் நகல் வழங்க வேண்டும் என்றும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு தமிழக அரசின் தலைமை […]

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் இம்மாதம் நவம்பர் 19-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால […]

ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி  சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே    விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை  ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், சாலையின் பேருந்து நிறுத்தத்தில் நின்று […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு  4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில மந்திரி வங்கலப்புடி அனிதா, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் ஐ.ஜி.ராஜகுமாரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருப்பதி தொகுதி எம்.பி. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு ஜனாதிபதி ரேணிகுண்டா விமான […]

தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, அதிகாரப்பூர்வ விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஒன்று, டிசம்பர் முதல் வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவதால், சேலத்தில் போதிய போலீசை ஒதுக்க முடியாது என்பது. இரண்டாவது, தவெக தாக்கல் செய்த மனுவில் […]

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியடப்பட்டுள்ளது. டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த 17ஆம் தேதி (17.11.2025) கடிதம் எழுதியிருந்தார். அதில், “காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக […]

போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

கடந்த 19-11 -25 அன்று சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து எல் எஸ் டி ஸ்டாம்ப் போதைப்பொருள் கைப்பற்றி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, போதை பொருள் வைத்திருந்த சரத், சீனிவாசன் மற்றும் சர்புதீன் ஆகியோர் பிடித்து அவர்களிடம் இருந்து உயர்ரக கஞ்சா மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பிடிக்கப்பட்ட சர்புதீன் என்பவர் அதிமுக […]

யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என உறுதியாக அறிவித்தார். காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பெரியார் சிலை பகுதியிலிருந்து ரோட் ஷோவுடன் அவர் வரவேற்பைப் பெற்றார். பிரேமலதா, “2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். […]

திருமணம் நிச்சயம் ஆனதை உறுதி செய்த ஸ்மிருதி…

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்தை அறிவித்துள்ளார். 28 வயது ஸ்மிருதி, சமீபத்தில் இந்தியாவின் முதல் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றி, 434 ரன்கள் அடித்து வீரன்மை காட்டினார். அவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், IPL-யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாகவும் பிரகாசமாகத் திகழ்கிறார். இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவர், இப்போது கிரிக்கெட் தளத்தைத் தாண்டி, […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது […]

சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

சிவகாசி சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி என்ற மோஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். முட்புதருக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி அணிந்திருந்த கவுன் கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை […]

+2 மாணவியை கொலை செய்தது ஏன்..? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராமேசுவரம் சேரான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். மீனவர். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகள் ஷாலினி (வயது 17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மீனவர் முனியராஜ் (21). இவர் ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும்போது, பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து இருக்கிறார். நேற்று முன்தினம் காலையில் ஷாலினி வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது […]

தங்கம் விலை மேலும் குறைவு

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,69,000க்கும் விற்பனையாகிறது.

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி இருந்ததால் தனக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்று மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கேட்டு சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான யுவராஜ், […]

ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 4 […]

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :மெட்ரோ திட்டத் திற்கு ஒப்புதல் அளிக்க மக்கள்தொகை 20 லட்சம் வரை தேவை என்றும் கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை […]

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ( ஜூன் 9-ந் தேதி) வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது சரவணனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவரை உறவினர்கள்  அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சரவணன் […]

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

56- வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, நவ 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.அந்தவகையில் 56- வது ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. […]

தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

தனது தந்தை புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பபடுவதாக மகன் வைத்த கோரிக்கையை ஏற்று மூத்த திமுக தொண்டரை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக ஒன் டூ  ஒன் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்த போது தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் […]

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி. 2. ஓ,உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தின் தலைவர் தனசேகர்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை […]

நாளை 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. ராமநாதபுரம், விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகை , திருவாரூர்,நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம் தேதி எங்களது புதிய கட்சியின் பெயா் அறிவிக்கப்படும். திராவிட இயக்க கருத்தியலிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம். மதுவுக்கு எதிராக வைகோ மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணம், […]

ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் ஆசைத்தம்பி 52 கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பாதுகாப்பாக மேலே அனுப்பினார். ஆனால் பின்னர் ஆசைத்தம்பி தனியாக மேலே ஏற முடியாமல் கிணற்றின் உள்ளே ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டார். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்பு […]

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்தூர்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசிக்கிறது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் […]

கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) ஆகிய 3 பேரும் […]

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் (நவ., 18) அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் எனவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19) மாலை விலையான ரூ.92,800-இலிருந்து ஏற்பட்ட சரிவு. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்கப்படுகிறது.

+2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது… அமைச்சர் மகேஷ்..

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]

ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.  அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும்போது,  “எங்க அப்பா 1967 லில் இருந்து திமுக உறுப்பினர் ( முத்துவேல்). இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு.. அப்பாவை உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா எனக் கேட்ட ஒன்றியச் செயலாளர்.. அப்பாக்கு போன் […]

கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்விழாவில் […]

நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

 நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-11-2025) காலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 22ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் நவ.24ல் தாழ்வு […]

SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்; தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசினேன். இலங்கை தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசப்பட்டது. 20 […]

10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் உள்ள நிதிஷ் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். இந்தநிலையில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது. 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது

ராமநாதபுரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியை பள்ளி செல்லும் வழியில் இடைமறித்த முனிராஜ், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் […]

SIR படிவம் குறித்த சந்தேகங்கள்… உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான Special Intensive Revision (SIR) தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவித சந்தேகங்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் வகையில் 1950 என்ற டோல்-ஃப்ரீ உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், படிவம்-6, 7, 8, 8A உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் உதவி […]

பிரதமருக்கு கருப்புக்கொடி- வீட்டு காவலில் வி.ச.மா.தலைவர் பழனியப்பன்

கோவையில் நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பன் நேற்று இரவு முதல் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று கோவைக்கு பிரதமர் மோடி […]

ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 10 அடி உள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்டு காப்பு காட்டுப் பகுதிக்கு விட எடுத்துச் சென்றனர். 10 அடி உள்ள மலைப்பாம்பை மழை நேரத்தில் மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் […]

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ. 11,500க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173க்கும், ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்புஇ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்ட ஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் […]

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இது தொடர்பாக அமைச்சர் மகேஸ்… X-தள பதிவில் கூறியதாவது, ”உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது” என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் […]

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய உள்ளார். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார். விமான மூலம் கோவை வரும் பிரதமருக்கு விமான நிலைய பகுதி மற்றும் கொடிசியா சாலையில் இருபுறங்களிலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு […]

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இன்று 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

புதுச்சேரி கனமழை எதிரொலி- மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று (நவம்பர் 18, திங்கள்) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் இன்று அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று […]

வஉசியின் நினைவு நாள்- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89-நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குகழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில்மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு… சீமான் ஸ்பீச்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, இன்று (நவம்பர் 17, 2025) நாம் தமிழர் கட்சி (NTK) சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,400-க்கு விற்பனையாகிறது. 

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18-ந்தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை […]

உணவு கொண்டு வர தாமதம்.. அடித்து நொறுக்கப்பட்ட ஓட்டல்

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்த நிலையில் தனக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் தனக்கு உணவு வழங்கவில்லை என கௌதம் உணவகத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தனது நண்பர்களை செல்போன் மூலமாக அழைத்தார் உடனடியாக ஆறு பேர் அங்கு வந்த நிலையில் உணவகத்தின் […]

8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு-

சென்னை- 17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 18-11-2025: தமிழகத்தில் அநேக […]

அனைத்து கட்சியும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன”- பிரேமலதா

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்  தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம்” என்றார். பின்னர் […]

எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் – ராமதாஸ் இரங்கல்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வருவதுடன், நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை….. தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னேறி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமியிடம் சவால் வீட்டுள்ளீரகளே, எந்த வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது என கேட்டபோது…. எல்லா வகையிலும் முன்னேறியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி […]

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு..வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம், நாளை 18) தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகளை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதீத பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவை களைய வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் அறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த் துறை ஊழியர்களும் இதில் பங்கேற்பார்கள். SIR பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள், பணிகள் ஆகியவற்றை நாளை முதல் […]

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணிவதன் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் , பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டில் குழந்தைகள் மலர் கொத்துக்களுடன், கையில் பதாகையில் உங்கள் எதிர்காலம் நாங்கள் தான் அத னை உருவாக்குபவர்கள் நீங்கள் தான், பெற்றோர நீங்கள் தான் எங்கள் வழிகாட்டிகள் என பதாகைகள் ஏந்திய படி குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மலர் கொத்துக்களை […]

தங்கம் விலை குறைவு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பானது. மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி […]

மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 9ஆம் வகுப்புதேர்வு அட்டவணைடிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வுடிசம்பர் 16- ஆங்கிலம்டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு டிசம்பர் 18 […]

பொங்கல் டிக்கெட் விற்பனை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுன்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்

தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்ட சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்கள் அனைவரும் முறையான உரிமத்தைப் பெற வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை […]

நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். நவம்பர் 15 அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட 9 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோவில், விஜய், “நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது பயமுறுத்தல் அல்ல, […]

வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்!

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “நீங்களும் ஹீரோதான்” படத்தின் மூலம் 1990-இல் இயக்குநராக அறிமுகமான வி.சேகர், ‘பொண்டாட்டி சொன்னா கேட்கணும்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட குடும்ப படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். வடிவேலுவையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர். திருவண்ணாமலை […]

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை… 2 பேர் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் இறந்தது போல போலி வாரிசு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மக்களே உஷார்- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுந்தர்.சி.விலகல் ஏன்- கமல் விளக்கம்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள் நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டி… பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள். நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும்.அது மாபெரும் வெற்றி தான் வெற்றியாளர்களின் சந்தோஷம் அது.அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று தான் […]

இது விபத்து தான்- தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கனும்-ஜம்மு போலீஸ்

செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு […]

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு திட்டம் மற்றும் இலவச உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தூய்மைப்பணியாளர்களுக்கு வெப்ப காப்பு பையில் கொண்டு செல்லப்பட்டு உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைதரம், சுயமரியாதை உயர வேண்டும். சுவையும், ஈரோக்கியம் நிறைந்த உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைககளும் நிறைவேற்றப்படும். பாதுகாப்பு உணகரணங்கள் வழங்குதல், சுகாதார காப்பீடு உள்ளிட்டவற்றை தடையின்றி பெற வழிவகை செய்யபடும். உணவுதிட்டம். […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது … பீகார் தேர்தலில் தெரிகிறது- மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- முதுபெரும் தலைவர் நிதிஷ்குமாரின் அபார வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன், மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு எனது நல்வாழ்த்துகள். இளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் அயராத பிரசாரத்திற்கும் நான் வாழ்த்து கூறுகிறேன். தேர்தல் முடிவுகள் நலன்புரி வழங்கல், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் கடைசி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புள்ள மேலாண்மை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் […]

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ. 1320 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மேலும் சவரனுக்கு ரூ.1,320 சரிந்துள்ளது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 1,320 குறைந்து ரூ.93,400க்கு விற்பனை ஆகிறது. காலையில் ரூ.480 குறைந்த நிலையில் மேலும் ரூ.1,320 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.165 குறைந்து ரூ.11,675க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பப்பாளி பழத்தில் காட்சியளித்த விநாயகர் உருவம்.. விவசாயிகள் வழிபாடு

உலக அதிசயம் என்பது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அதிசய பொருள் கிடைக்கும் அல்லது அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இதே போல தான் உலகத்தில் வேறு எங்கும் கிடைத்தற்கு அரிய விநாயகர் உருவம் கொண்ட பப்பாளி பழம் கிடைத்தது. இந்த அரிய பொருள் கோவை மாவட்டம் போள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர் பகுதியைச் சார்ந் சுப்பிரமணியம் என்ற விவசாயிக்கு கிடைத்தது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது தோட்டத்தில் பப்பாளியை பரிக்கச் சென்றபோது பப்பாளியில் விநாயகர் […]

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சினேகா -பிரசன்னா சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஆன திருப்பதி மாவட்டம், ஸ்ரீ ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கணவர் பிரசன்னா உடன் சுவாமி தரிசனம் செய்தார் நடிகை சினேகா. தரிசனத்துக்கு பின் அவருக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.தொடர்ந்து மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் பொன்னாடை போர்த்தி […]

உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா வெளியேற்றம்

11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நேற்று நடந்தது. ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்த ஆட்டத்தில் 53-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை […]

SIR பணிக்கு எதிர்ப்பு…தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன. அந்த வகையில், வாக்காளர் பட்டியல் […]

தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 2026 தேர்தல் கூட்டணி, மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-க்கு முன்பு கூட்டணி அறிவிக்கலாம் அல்லது சூழ்நிலைக்கு […]

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி..

குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை, காளியப்பகவுண்டனூர் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியில் கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தைகள் தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி பரத்குமார் மற்றும் […]

இந்த மாவட்டங்களில் மழை தொடரும்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 16-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை […]

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  யார் இந்த மைத்ரேயன்? – பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசு தான். அந்த முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்றுதான் தமிழ்நாட்டிற்கு பெயர் உள்ளது. இங்கு வருபவர்கள் வேலை […]

ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்’ எடுப்பதில் சிரமம்…ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு…

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும் (நாளை மறுதினம்), தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை தேர்வை நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் […]

3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக். 14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 9 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளித்து இருந்தார்.இந்த நிலையில், தமிழக அரசின் மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, உள்ளாட்சி […]

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2400 உயர்வு

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2400 விலை உயர்ந்து 95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தங்கம் விலை இன்று காலை (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ரூ.800 அதிகாரித்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,900-க்கும் விற்பனையாகிறது. இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் […]

பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் […]

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13, 2025) காலை வெளியிட்ட எச்சரிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் […]

ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகர் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் […]

நீங்க தான் தைரியசாலி ஆச்சே- டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க கணவரே… ஜாய்கிரிசில்டா

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், பின்னர் சமூக வலைதளங்களில் பேட்டியும் கொடுத்திருந்தார். இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்’ என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். ‘நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் டி.என்.ஏ. பரிசோதனையை […]

சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர பேருந்திலும் மோதி கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் பல்வேறு இடங்களில் காயம் பட்டு ரத்த காயங்களுடன் திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்து திருவிடைமருதூர் […]

அறிவுத் திருவிழாவா…அவதூறு திருவிழாவா..விஜய் காட்டம்

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ள விஜய் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது சமூக நீதிக் கொள்கை? என எழுப்பி உள்ளார். இதுகுறித்து விஜய் இன்று வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி […]

தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய […]

மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்

மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தமது தரப்புக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ. 173க்கு விற்பனையாகிறது.

திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக் கைதுசெய்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ எனும் பால்பண்ணை மூலமாக அந்தப் போலி நெய் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிப்பதற்குத் தேவையான நெய்யை அனுப்பி […]

உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற 2 காவலாளிகள் கொலை.. அதிர்ச்சி

ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் பேச்சிமுத்து,50, சங்கரபாண்டியன் ,65, என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட […]

பொதுசின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11, 2025) காலை மனு அளித்துள்ளது. கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் நேரடியாக […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.220 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,700க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்த தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலியின் கணவரான தர்மேந்திரா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.  பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக […]

செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்” என்று கூறி நிராகரித்தார். “என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் […]

சொகுசு வாழ்க்கைக்காக மிரட்டி பணம் பறிக்க திட்டம்.. ரகசிய கேமரா வைத்த காதலன் வாக்குமூலம்

ஓசூர் அருகே பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு, விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட் டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடியல் ரெசிடென்சி” விடுதியில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள ஒரு குளியலறையில், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமரா வைத்ததாக, அதே […]

70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..

தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில்  13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மலேசிய கடல்சார் அமைப்பு தெரிவித்ததாவது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட அந்தப் படகு லாங்காவி தீவு அருகே மூழ்கியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 170 சதுர கடல் மைல்கள் பரப்பளவில் […]

எத்தனை பேர் வந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி மனுவில் பழனிச்சாமி ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. அதனால் விமர்சனத்தை முன் வைக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களுடைய வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். SIR குறித்து நீதிமன்றத்திற்கு போயிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் […]

ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று இவ்வாறு கூறினார்.

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய […]

கரூர் மாவட்டத்தில் நான்கரை ஆண்டில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்…. VSB பேச்சு

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு. கரூர் இந்திய தொழிற்கூட்டமைப்பு, யங் இன்டியன்ஸ் சார்பில் “வளரும் கரூர்” என்ற தலைப்பில் கரூர் விஷன் 2030 என்ற கருத்தரங்கம் கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. சிஐஐ தலைவர் எம்.பிரபு வரவேற்றார். ஆட்சியர் மீ.தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பங்கேற்று விருதுகளை வழங்கி பேசுகையில்: திராவிட மாடல் முதல்வர் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர்.. முதல்வர் பேச்சு

சென்னை :  வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’வில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். திமுகவின் 75 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் இவ்விழாவுக்கு ‘அறிவுத் திருவிழா’ என்று பெயர் சூட்டியதை பெரிதும் பாராட்டிய அவர், இப்பெயரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வைத்ததாகவும், அது மிகவும் பொருத்தமானது என்றும் தெரிவித்தார். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை என்று முதல்வர் வலியுறுத்தினார். திமுகவைத் தொடங்கியவர் அண்ணா, கட்சியைக் கட்டிக் […]

4 மாவட்டங்களில் இன்று கனமழை

 தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து

கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும்,  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய […]

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” நாளை (09-11-2025 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், காணொலி காட்சி […]

பிரபல தமிழ் டைரக்டர் வி.சேகர் கவலைக்கிடம்

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தார் வி சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம் மாறிப் போச்சு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இன்றளவும் கே டிவியில் வி சேகரின் படங்கள் ஒளிபரப்பினால், அதற்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. காலம் கடந்தும் இவர் படங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இயக்குனர் கே.பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி […]

பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த கார்த்திக் (50) என்பவரும் திருப்பத்தூரில் உள்ள பிரபல கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற கடையில் செக்யூரிட்டிகளாக பணி புரிந்து வந்தனர். அந்தோணி என்பவர் இரவு நேரத்தில் பணி செய்துள்ளார். அவரை மாற்றுவதற்காக கார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

தமிழக பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு கேரள அதிகாரிகள் லட்சகணக்கில் அபராதம்

தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரள வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளை பறிமுதல் செய்வதாக குற்றம் சாட்டி 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழக கேரள எல்லையான கோவை வாளையார் பகுதியில் பயணிகளுடன் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படக்கூடிய ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்குள் சென்று வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதி கேரள […]

”அதர்ஸ்” அட்டகாசமான கிரைம் திரில்லர் படம்.. ரசிகர்கள் பாராட்டு

கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிப்பிலும், ஜி.கார்த்திக் இணைத் தயாரிப்பிலும் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘அதர்ஸ்’. ஆதித்யா மாதவன் கதாநாயனாக அறிமுகமாகியுள்ளார். கவுரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். அஞ்சு குரியன், முனீஷ்காந்த், நண்டு ஜெகன், ராமதாஸ், சுந்த ரராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அதர்ஸ்’ படம் குறித்து டைரக்டர் அபின் ஹரிஹரன் கூறியதாவது:- சென்னையில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் சிலர் இறந்து […]

திருப்பதி லட்டு விவகாரம்.. ரசாயனங்கள் சப்ளை செய்த நபர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கலப்பட நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களை சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது. அஜய் குமார் மீது அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் கலந்து போலி நெய் தயாரிக்க உதவிய குற்றச்சாட்டு உள்ளது. கலப்பட நெய் விநியோகம் செய்தது தொடர்பாக ஏற்கெனவே பலர் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாத நிலையில், வரும் 11ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் , பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மீது பத்தாவது முறையாக புகார் கொடுத்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, “பாஜக மாநில மகளிர் அணி பொருளாளராக உள்ள மாலினி ஜெயச்சந்திரன் பாஜக கட்சி நிர்வாகிகளின் 5000 கோடி கருப்பு பணத்தை வைத்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு திருநின்றவூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட ஊர்களில் நிலங்கள், கட்டிடங்களை வாங்கி […]

சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான சி.சுப்பிரமணியம் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி-உடுமலை சாலை சின்னாம்பாளையத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அலுவலக வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியத்தின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட […]

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல் செய்யும் பணியை தனி யார் நிறுவன ஒப்பந்தபணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் பெண் பணியாளர் ஒருவரை பிடித்து விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி […]

விடுதி குளியலறையில் ரகசிய கேமரா- பெண்ணின் காதலன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவன தொழிற்சாலைக்கு சொந்தமான விடியல் ரெசிடென்சி என்ற பெண்களுக்கான தங்கு விடுதி இயங்கி வருகிறது. 11 மாடிகளை கொண்ட எட்டு கட்டிடங்களில் சுமார் 6000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கேமரா வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர். * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை. *2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக இல்லாமல் கூட்டணியை முறித்தவர் இ.பி.எஸ்; கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் * கொடநாடு கொலை, கொள்ளை […]

திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள SIR வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. என மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து,குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை திமுக சட்டத்துறை சார்பில் அணுகிட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பியிடம் முதலமைச்சர் அறிவுறுத்தல்.

பொதுக்கூட்டம் பேரணி நடத்த என்னென்ன கட்டுப்பாடுகள்… முழுவிபரம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி,மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, […]

எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்

சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் தமிழ்நாட்டில் […]

SIR பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு 11ம் தேதி விசாரணை

எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நவ.11ல் விசாரணைக்கு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது வாக்குரிமையை பறிப்பதாக அமையும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக தொடர்ந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.

என்றுமே விஜய்க்கு நல்லது மட்டுமே நினைக்கிறேன்…. நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். “இது துரதிஷ்டவசமான சம்பவம். ஒரு நபரின் தவறு மட்டுமல்ல, இது சமூகத்தின் மொத்தப் பொறுப்பு. நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்த விபத்து இது” என்று கூறிய அஜித், ஆந்திரா தியேட்டர், பெங்களூர் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் […]

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. உள்பட 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக நவம்பர் 31ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ; […]