காதலியைக் கொன்று ஆவி வரவழைக்கப் பூஜை: இந்தூர் காதலனின் கொடூரச் செயல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் தீவிர […]
எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும் இல்லை. நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன் (exonerated). எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறினார். எஃப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பின்னணியில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எஃப்ஸ்டீன் கோப்புகளில் (மூன்று மில்லியன் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்) […]
அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’- திருப்பம்
கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது அங்கு பாஜக கூட்டணியில் யுபிபிஎல் மற்றும் பிபிஎப் ஆகிய கட்சிகள் அங்கம் […]
கூட்டமாக பெண்ணை கடித்து குதறிய தெரு நாய்கள்
ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடு திரும்பிய பெண் ஒருவர், கேட்டை திறக்கும்போது அவர் கையில் இருந்த பை நழுவி அங்கே படுத்திருந்த நாய் மீது விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த தெருநாய்கள் ஒன்றுகூடி அப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கின. அவர் கீழே விழுந்து, வலியால் அலறித் துடித்த நிலையில், ஸ்கூட்டரில் வந்தவர் நாய்களை விரட்டி விட்டு அப்பெண்ணை காப்பாற்றினார்.
எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். […]
சிறுமி கொலை: 21 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய தம்பதி கைது
டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள். இதில், அந்த பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ( 60) மற்றும் அவருடைய மனைவி மஞ்சு (55) இருவருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. ஆனால், இருவரும் போலீசில் சிக்காமல் தப்பி வந்தனர்.சிக்கந்தர் கூலி வேலை செய்து வருபவர். அதனால், வேலைக்காக பல ஊர்களுக்கு செல்வதுபோல் சென்றுள்ளனர். ஆனால், உண்மையில் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்கவே அவர்கள் ஊர் ஊராக சென்றுள்ளனர். இதனால், 2006-ம் ஆண்டு அவர்கள் […]
வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் […]
கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்
திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35). இவருக்கும் வைஷாலி (29, பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன், மகள் உள்ளனர். கங்காதர், வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். இந்நிலையில் வைஷாலிக்கும், […]
இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனாளர்கள் தவிப்பு
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.
100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம்.சில சமயம் இரவில் கோவிலிலேயே அவர் தங்கி விடுவார். நேற்றிரவு 8.05 மணியளவில் இதேபோன்று கோவிலில் தங்கியிருந்த அவரை அந்த வழியே வந்த யானை ஒன்று மிதித்து, தாக்கியுள்ளது. இதில் அவர் பலியாகி உள்ளார். […]