திருச்சி, திருவெறும்பூர், வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வருவாய் துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும் வீடு இழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.