கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டார். இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ரமேஷ், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் கரூர்

பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய தலைவரை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநில, மாவட்ட, வட்டார, நகர, நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, தலைவர் ரமேஷிற்கு சால்வை மற்றும் பொன்னாடைகளை அணிவித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.