கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்- அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார். கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் […]

அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், […]

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக […]

அன்புமணியுடன் கூட்டணி- ஏமாந்துதான் போவார்கள்-பாமக MLA

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.

இபிஎஸ் வீட்டில் அன்புமணி…உறுதியாகிறது அதிமுக-பாமக கூட்டணி?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜன.07) சந்தித்துள்ளார். அன்புமணியுடன், பாமக வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டணியில் பாமகவைச் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டிவரும் நிலையில், இபிஎஸ் – அன்புமணி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அன்புமணி வருகை . ஜெயக்குமார், சி.வி.சண்முகம், […]

எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும்– அன்புமணி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசினார். “விரைவில் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பலமான, மெகா கூட்டணி அமையும்” என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் பாமக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நீதிமன்ற […]

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை – அன்புமணி

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் கரு.நாகராஜன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, அமமுகவின் செந்தமிழன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதி பிரச்சனை, இதன்மூலம் இட ஒதுக்கீடு வரும். சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக […]

மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது” என்று வருத்தம் தெரிவித்தார். ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்றும், பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். ஜி.கே. மணி, “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக […]

என் உயிரை மட்டும்தான் அன்புமணி எடுக்கவில்லை… ராமதாஸ் வேதனை

கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் முன்னாள் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். இது பாமகவின் உள் பிளவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ராமதாஸ் பேசுகையில், “நான் வயிறு எரிந்து செல்கின்றேன். உன் […]