ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, தமிழக […]