அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னதாக, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் […]