இலங்கையில் ஏழ்மையில் வாழும் தமிழர்களுக்கு இலவச காப்பகத்திற்கு திட்டம்..குருஜி ஷிவாத்மா

கோவை,பிப்.15 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.பிப்.14ம் தேதி ஆண்டு விழாநிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள்,நன்கொடையாளர்கள்,பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குருஜி […]

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் – காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது, அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் சிறைக்காவலை நீட்டித்து இன்று (பிப்ரவரி 4, 2026) உத்தரவிட்டுள்ளன. சம்பவம்: கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி […]

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. […]

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை […]

இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் இலங்கை கேப்டன் கைதாக வாய்ப்பு

முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா 2017ம் ஆண்டு இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அவரது சகோதரரான தமுக்கா ரணதுங்கா அரசு பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அர்ஜுன ரணதுங்காவும், அவரது சகோதரரும் சேர்ந்து பெட்ரோல் கொள்முதலில் ரூ. 23 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமுக்கா ரணதுங்காவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் […]

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பப்பட்ட […]