தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.