நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தனது தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் மிகவும் இயல்பாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் தனது அறைக்குள் சென்ற சார்த்தக், அதன் […]