100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். […]

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார். கரையான் அரித்ததால் பனைமரம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.