மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு கார்த்திக் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்துவதால் குடும்பப் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய கார்த்திக், அவர்களை அங்கிருந்து […]

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் […]