தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு நாகப்பட்டினம், […]

கனமழை… 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. […]

கனமழை எதிரொலி…முன்னெச்சரிக்கை நடவடிக்கை…மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்…

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும். எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” 24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25, இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, […]

புதுச்சேரி கனமழை எதிரொலி- மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று (நவம்பர் 18, திங்கள்) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் இன்று அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று […]