புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் தலைக்கவசம் அணியாமல் வந்த 100-க்கும் […]
தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உத்திர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எல்.யோபின், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால், 2025-26 ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13.12.2025 முதல் 17.12.2025 வரை […]
சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]
மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் […]