கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த […]