சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, இன்று அதிகாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளங்கள் முழங்க அம்மன் மரக் கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பாகக் கொண்டு வரப்பட்டார். அங்கு கொடிமரத்திற்குச் சிறப்புப் […]