போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக திருச்சி சென்னை பைபாஸ் காலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் கடந்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் அதிவேக வாகனங்களால் தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு […]