சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். […]

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற 2024ஆம் ஆண்டு 67,526 சாலை விபத்துகளும், 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 370 விபத்துகளும் நடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.