சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் 782 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஐ.டி. பூங்கா வளாகத்தில், வறண்டு போயிருந்த 33.43 ஏக்கர் பரப்பளவிலான நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சிப்காட் நிறுவனம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் […]