வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, […]

வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். […]

குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து […]

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவிக்கு மஞ்சள்காமாலை நோய் தொற்று இருந்ததாலும் மாணவிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததாலும் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களால் […]

செங்கல்பட்டு- குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ​செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி சார்பில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ​மேம்பாலத்தில் எழும் அடர்ந்த புகையினால் எதிரே […]

கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். திடீரென காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 10 வார கர்ப்பமாக […]

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

செங்கல்பட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் தி.சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு நகரையொட்டி ஏற்கெனவே அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதற்கோ, உள்ளே பேருந்துகள் வந்து செல்வதற்கோ போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இப்பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். […]

வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும் இருந்துள்ளனர். நேற்று காலை தனது மகனுக்குப் பால் காய்ச்சுவதற்காக பாரதி அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் […]

குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பேராயர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… சமூக நல்லிணக்கத்தை 100% பாதுகாப்போம். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கதை விதைக்கும். வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்தையும் ஒன்றாக கொண்டாடுவது தமிழ்நாடு. துரோகிகளை […]