சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. தூரத்திற்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தச் சோதனை இன்று காலை 11:00 மணியளவில் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமே இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலம் […]