நிதி நெருக்கடியிலும் ஓய்வூதியத் திட்டம்: மொத்தச் சுமையையும் ஏற்கும் தமிழக அரசு – ஜாக்டோ ஜியோ மாநாட்டில் உறுதி
நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதி திட்டத்தை அறிவித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகர்வை ஒன்றிய அரசு […]