கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய தொகுப்பு வீட்டினை இடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி வந்தவதாசி வட்டம், வழுர் கிராமத்தைச் சேர்ந்த மேற்படி முனியன் என்பவரின் […]

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர். அப்போது […]

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் […]

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் பெற்றோர் தேடியபோது, சிறுவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து […]

வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசி புதுத்தெருவில் உள்ள கார்வண்ணன் என்பவரது வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.சம்பவத்தன்று, மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரைக் […]

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். அதன்படி, நேற்று 7-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. இதற்கிடையில் மலை ஏறி சென்று மகா தீபம் காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் […]

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது […]

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில், […]

லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வரும் ஜான்சி என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. மேலும் சதிஷ் என்பவரும் ஜான்சியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஓரே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கணவர், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் சதிஷ்க்கும் ஜான்சிக்கும் இடையே […]