டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் தனலட்சுமியிடமிருந்த டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கான வாடகைப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், தனலட்சுமியிடம் இருந்த $2 \frac{1}{2}$ பவுன் நகையையும் அவசரத் […]