கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பகுதியில் கார் வந்தபோது, கணவரிடம் தனக்கு கார் ஓட்டக் கற்றுத்தருமாறு மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து, மனைவிக்குக் கணவர் கார் ஓட்டப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியின் போது, […]