நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.