புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.பிறகு சகுந்தலாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.
திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியமங்கலத்தில் […]
திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். […]
பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா – 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் […]
புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அங்கு பார்த்த போது அஷ்ரப் அலி (25) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று உறையூர் பகுதியில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் […]
கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்
கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்தஇரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதைபடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருவறும்பூர் கூத்தைபார் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் ( […]