புனேவிலிருந்து கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை, உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,470 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மருந்து […]