சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.

பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சுவளி சவுக்கத் அலி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தொழில் காரணங்களால் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குச் சொந்தமான 150 ஆண்டு பூர்வீக நிலத்தை பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக மகளிர் பூங்காவாக அமைத்து வழங்க […]