போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் சலீம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை மாத்திரை விற்ற தீபக் (28) என்பவரை கைது செய்து 13 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோட்டை போலீசார் ஓடத்துறை பாலம் அருகே நடத்திய சோதனையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 […]

திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி எடத்தெரு பிள்ளைமா நகரைச் சேர்ந்த ரவுடி அன்சாரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போலீசார் […]

திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த பரகத் நிஷா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 16 போதை மாத்திரை ஊசிகளை […]

டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.ரங்கராஜனுக்கு மதுப்பழக்கம் இருந்தது இதற்கு அடிமையானதால் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவி சியாமளா தேவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்று விட்டார் .பின்னர் தனியாக வசித்து வந்த ரங்கராஜன் அளவுக்கு அதிகமான மது போதையில் மயங்கி […]

போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் சரகங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இ.பி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகேபோதை மாத்திரை […]