மக்களே உஷார்- தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”

‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. தொலைவில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் […]

மக்களே உஷார்- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.