புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு சாலை சந்திப்பில், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் வழக்கமாகச் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் கட்டுக்கட்டாகக் காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. அந்த வழியாகச் செல்லும் மாடுகள், நாய்கள் மற்றும் […]