அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]
சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை
இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாகக் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் […]