இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் கையெழுத்திற்காக அணுகி உள்ளார். இதன் காரணமாக கையெழுத்திட சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் பேரம் பேசியுள்ளார் […]