நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக சீவலப்பேரிக்குச் சென்றிருந்த நிலையில், ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 2 மணியளவில் […]