அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’- திருப்பம்
கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது அங்கு பாஜக கூட்டணியில் யுபிபிஎல் மற்றும் பிபிஎப் ஆகிய கட்சிகள் அங்கம் […]
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி, 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]
அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். இது குறித்து முதல்வர் […]