சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள R.R. நகரில் அழகு நிலையம் லேப்டாப் விற்பனை நிலையம் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் ரிதம் ஹோம் தியேட்டர் […]