இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]

அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே […]

திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!

கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]

முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு […]

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் […]

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப். 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

சீண்டிய விஜய்-பதிலடி கொடுத்த அதிமுக!

சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய […]

திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும். […]

அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]