இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]
அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி
கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே […]
திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!
கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]
முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு […]
திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் […]
அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப். 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]
சீண்டிய விஜய்-பதிலடி கொடுத்த அதிமுக!
சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய […]
திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும். […]
அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி
உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]
ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவியுடன் கூட்டணி?… மறுக்காத எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார். டில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .. அவர் கூறியதாவது..அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை. சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.இனியும் பாஜகவைச் சுற்றுவதில் பலன் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். வௌிப்படையாக பேச முடியாது. தமிழக […]
நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட […]
அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்
என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் அதிமுக சார்பில் மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வாங்கியுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்…முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து […]
அதிமுக கூட்டணியில் பாஜக 53 தொகுதி
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை. குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்). நயினார் நாகேந்திரன் (நெல்லை). வானதி சீனிவாசன் (கோவை தெற்கு). சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த முறை 53 தொகுதிகளை கேட்டுப்பெற […]
என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக செயல்படுகிற கட்சி… இது எங்க கட்சி டா…” என்று கர்ஜித்த அவர், “சண்முகம் வெளியேறுகிறார், தங்கமணி வெளியே செல்கிறார் என்று பேசினார்கள்; எங்கே சென்றோம்? என் உயிருள்ளவரை நான் அதிமுகவில் தான் இருப்பேன்” என்று உறுதியளித்தார். கட்சிக்குள் பிளவு பேசியவர்களை கடுமையாகச் […]
அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி ஈபிஎஸ். காட்டுமிராண்டி தனமாக செயல்படும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை நீக்கியுள்ளார். சர்வாதிகரமாக செயல்படும் பழனிசாமிக்கு எதிராக என்ன செய்ய முடியும்? யாருடனோ கூட்டு சேர்ந்து அதிமுகவை இல்லாமல் செய்வதாக பழனிசாமி உறுதிமொழி எடுத்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் எனக் கூறி வெளியே வந்தவர், […]
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். யார் இந்த மைத்ரேயன்? – பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை […]
அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என நாம் காட்ட வேண்டும்… கோவையில் VSB பேச்சு
வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]