பூங்கா நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்பு
கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப் பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 50 சென்ட் நிலம் அப்போதே பேரூராட்சிக்குத் தானமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்குச் சொந்தமான அந்தப் பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தைச் சிவஞானம் […]