திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில் குட்டி மலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி மது பெற்ற கிராபட்டியை சேர்ந்த வேளாங் கன்னி (40) எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( 42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மணல் ஏற்றி சென்ற வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பொன்னி டெல்டா அடுக்குமாடி குடியிருப்பு அருகில் காவேரி […]