ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்தார்: “தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இந்தியாவில் எந்த மாநில அரசாலும் முடியாது. இனச் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் […]