அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் […]

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்பதிபு செய்ய […]

பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்தியாவிலேயே பெண்களுக்கான மகத்தான திட்டங்களை தருவதில் சிறந்த முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர்தான் இருக்கிறார். அதனால்தான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போன்று பெண்களின் செல்வாக்கு இன்று நம்முடைய […]

கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது… அமைச்சர் சிவசங்கர்… மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியவர்களே அந்தத் திட்டத்தை பிற மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரியலூர் மாவட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு, திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் […]

ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அதிமுக பொதுக்குழுவில் அதிமுக எவரும் குறை சொல்ல முடியாத சிறப்பான ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு, மீண்டும் அங்கீகாரம் கொடுத்திருப்பர். மக்கள் தூக்கி எறிந்த […]

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் இன்று அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை […]

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு செயல்படுத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜக அமைச்சர் 20 லட்சம் மக்கள் தொகை பயணம் இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரோம் […]