தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு.. அமைச்சர் முத்துசாமி

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற ஏஜென்சி நியமிக்கப்படவுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை வளர்த்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கொள்கைகளை கடைப்பிடித்து இன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் […]