அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்த விஜய்!

தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களையும், திட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறினார். “இதுபோன்று நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்த விஜய், அரசியலில் தான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். […]