அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!
மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் முதல்வர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வருகிறார்.