1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு

பாலக்காடு, அட்டப்பாடியில் 1,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் சிவராத்திரியையொட்டி பாலக்காடு மாவட்ட கலால் துறை உதவி ஆணையாளர்கள் ரோபர்ட், பி.கே.சதீஷ் ஆகியோர் உத்தரவுப்படி அகழி ரேஞ்சு கலால் துறை அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அட்டப்பாடி வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறை மேல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அட்டப்பாடி […]