அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து வருகின்றனர்.தற்போது வைகுண்ட ஏகாதசி விழா வருகிற30-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருவரங்கத்துக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) இவரது மனைவி செண்பகவள்ளி […]